Saturday, 28 November 2015

Lost Railway Station of Rameswaram Road (Puthu Road). A Metre Gauge station.

In the annals of India’s railway history lie countless forgotten halts and abandoned alignments, but few are as poignant as the tale of the lost station of Rameswaram Road, otherwise called Puthu Road. Once a modest node on the fabled Indo–Ceylon route, this station bore silent witness to the intertwining destinies of South India and Ceylon (present-day Sri Lanka), until nature’s fury and political upheavals consigned it to oblivion.


A Journey into the Past

My own acquaintance with this vestige occurred during a recent visit to Pamban Island. Though I had traversed these shores before, it was only on this occasion that I embarked upon a deliberate quest to trace the erstwhile metre-gauge line that once ran from Pamban Junction to Dhanushkodi Pier. Beyond this terminus, the voyage continued not on rails but by steamer across the Palk Strait to Thalaimannar in Ceylon, and thence by rail again to Colombo and other colonial towns.

This seamless intermodal journey — train, steamer, train again — embodied the very idea of connected civilisations. It was not merely transport but a bridge of culture, commerce, and kinship.


The Demise of the Indo–Ceylon Ferry

Alas, the Indo–Ceylon ferry service, already weakened by the cataclysmic cyclone of 1964, finally met its demise in 1984, following assaults by the Liberation Tigers of Tamil Eelam (LTTE). In the post-1964 interregnum, the service had shifted to Rameswaram’s fishing harbour, yet the romance of the old alignment was never recaptured.


Encounter with a Vanished Station

En route to Kodandaramar Temple near Mukundarayar Chathiram, my auto-rickshaw driver — a veritable oral historian in his own right — revealed to me the ghostly remains of this lost station. Local lore identifies it as Rameswaram Road or Puthu Road, an outpost that once bore the bustle of pilgrims and traders alike. Today, little survives but the pedestal of a solitary water tank, a mute sentinel of what was washed away on 26 December 1964 by the infamous cyclone.

This station had served not only Rameswaram town but also travellers who sought an alternative to the principal Rameswaram station. Its alignment cut diagonally towards Pamban Junction, a modest geometry of steel that once connected two worlds.


The Cyclone Tragedy of 1964

The tragedy of 22 December 1964 is writ large in the memory of India’s railways. At precisely 23:55 hours, train no. 653 — the Pamban Junction–Dhanushkodi Passenger — carrying 110 passengers and five railway staff, was engulfed by the fury of storm and surge while entering Dhanushkodi station. In a matter of minutes, all 115 souls perished, swept away by tidal waves of apocalyptic force. Sic transit gloria mundi — thus passes the glory of the world.


The Highway that Replaced the Rails

By 1990, whatever vestiges of the metre-gauge line still lingered were uprooted. The alignment metamorphosed into a two-lane artery of the modern republic: National Highway 55 (formerly NH 49). Motorcars now speed over what was once the passage of the Indo–Ceylon Express, blithely unaware of the ghosts that haunt their tarmac.

Location of the station shown in map : 



The Steamer Connection: S.S. Irwin

Integral to this Indo–Ceylon link was the steamer S.S. Irwin, the stalwart vessel that plied between Dhanushkodi and Thalaimannar. Built in 1929 and commissioned in 1930, she measured 259 feet in length and 38 feet across the beam, with a tonnage of 970.11 gross and 377.39 registered. Her capacity, inclement weather, was an impressive 1,552 passengers, reduced to 1,045 in turbulent seas. Cruising at approximately 10 knots, she was not merely a ship but a floating bridge between two nations.

The very name “Boat Mail” evokes nostalgia: a train from Madras (now Chennai) connecting seamlessly with a steamer to Ceylon, an imperial choreography of rail and sail.


S S Irwin model: 



 
Lost railway line :





The British Military Stamp

Among the archaeological remains are iron sleepers stamped with the abbreviation M&SMB, believed to signify the Material and Systems Management Branch of the British Indian Army. Such insignia hint that this line was not only civil infrastructure but also carried strategic import, binding together the colonial territories in times of war and peace.






























Epilogue: The Vanishing of Memory

Today, nothing remains of Puthu Road station save the echoes of recollection. Once scattered relics whispered of a railway that stitched together India and Ceylon, of a community obliterated by cyclone, and of a maritime corridor since supplanted by the prosaic highway. Yet even those vestiges, which lingered for decades to tantalise the railway antiquarian, were erased by 2023. The last iron sleepers, embankments, and tell-tale remnants were swept aside in the name of progress and road expansion.

What endures now is not masonry nor metal, but memoria alone — oral traditions, fading photographs, and the imagination of those who cherish India’s railway past. In contemplating this forgotten station, one confronts the memento mori of human endeavour: that all our grandest infrastructures, like the very empires that built them, are but transient.

Thus, the tale of Rameswaram Road (Puthu Road) is no mere footnote; it is a chapter in the palimpsest of history, awaiting rediscovery by each pilgrim who dares to listen, even when the land itself has effaced its traces.

Original blog first published: December 2015.
Photographs and archival data: All rights reserved. Please seek prior permission before reproduction or use. 


#IndianRailways #MetreGauge #LostStations #BoatMail #RailwayHistory #MaritimeHeritage

#Rameswaram #Pamban #Dhanushkodi #PalkStrait #TamilNadu #SriLanka

#ColonialHistory #JamesRennell #BritishIndia #IndoCeylonLink #ForgottenHistory

#TravelBlog #HiddenHistory #LostPlaces #Cyclone1964 #SouthIndia




Monday, 19 May 2014

இசைக்கூறுகள் : மேளகர்த்தா ராகங்கள்

எல்லாவிதமான ராகங்களும் ஜன்ய (தாய்) ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஹிந்துஸ்தானி இசை பாணியில் இதை ‘தாட்’ எனக் கூறுவர். இந்த ‘தாட்’ களிலிருந்து பலவிதமான ராக அமைப்புக்களை ஹிந்துஸ்தானி இசை பெற்றுள்ளது. மொத்தம் பத்துவகையான தாட்களே இருந்தாலும், நம் கர்நாடக இசையில் 72 தாய் ராகங்கள் (மேளகர்த்தா ராகங்கள்) இருக்கின்றன.

அடிப்படையில் ஸ்வர வரிசையின் பல வடிவப் பிணைப்புகளே இந்த மேளகர்த்தா ராகங்களாகும். இந்த மேளகர்த்தா ராக சூத்திரத்தை அறியுமுன், நாம் சில அடிப்படைகளை நிறுவ வேண்டும். ஸ்வர வரிசைகளில் ஏன் ஏழு ஸ்வரங்களே இருக்கின்றன என்பது பல இசை வல்லுனர்களைக் குழப்பியபடியே உள்ளது. இதற்கான காரணத்தை நவீன கணிதம் மற்றும் இயற்பியல் சார்ந்த அலைக் கோட்பாடுகளின் (wave theory) படி ஆராய முடியும். ஆனாலும், பண்டைய காலத்தில் இதற்கான அடிப்படையை எப்படிக் கண்டடைந்தார்கள் என்பது இன்றளவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

ஸ்வரங்களின் ஒலியை குறிப்பிட்ட நுண்ணலைகளாக (அலைவரிசை) பிரிக்க முடியும். இயற்பியலில் மனித காதுகளால் வித்தியாசத்தை உணரக்கூடிய அலைவரிசைகள் என்று ஒரு பாகுபாடு உள்ளது. நம்மால் கேட்கக்கூடிய அலைவரிசை 16 ஹெர்ட்ஸ் (Hz) முதல் 16, 384 ஹெர்ட்ஸ் வரை மட்டுமே. இதற்குள்ளாகவே நம்மால் ஒலியை உணர்ந்து, பகுக்க முடியும். குறிப்பாக 240 ஹெர்ட்ஸ் முதல் நம் காதுகளால் அலைவரிசை மாற்றங்களை நன்றாக உணர முடியுமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக, 240 ஹெர்ஸ் என்பதை நம்முடைய முதல் ஒலிக்கான அலைவரிசையாகக் கணக்கிடலாம். இதன் மூலம் ஹார்மானிக்ஸ் (Harmonics) எனப்படும் மற்ற அலைவரிசைகளைக் கணக்கிடமுடியும்.

இயற்பியலின் படி ஒவ்வொரு அலைவரிசையும் பலதரப்பட்ட ஹார்மானிக்ஸ்களைக்கொண்டுள்ளது. இவை அனைத்தையும் நம்மால் உணர முடியாது. Fourier Series எனப்படும் கணித இயலின் படி இதைக் கண்டறிய முடியும். ஆனால், நம் காதுகளால் இந்த அனைத்து விதமான ஒலிகளின் அலைவரிசையின் வித்தியாசத்தை உணர முடியாது. நம் காதுகள் ஒலியை மற்ற ஒலிகளோடு ஒப்பிடும்போது அதன் அலைவரிசை மூலமே வித்தியாசப்படுத்த முடியும். ஒரு ஒலியமைப்பானது மற்றொன்றைவிட இரு மடங்கு அதிகமான அலைவரிசையில் இருக்கும்போது நம் காதுகளுக்கு ஒன்றாகவே இருக்கும். இதனாலேயே நாம் Octaves எனக் கூறுவது அடிப்படை அலைவரிசைக்கும் அதைவிட இரு மடங்கு அதிகமாக இருக்கும் அலைவரிசைக்கும் இடையே இருக்கும் ஒலிகளே ஆகும்.

அதாவது – 240 ஹெர்ட்ஸ் முதல் 480 ஹெர்ட்ஸ் வரை.

நாம் முன்னரே பார்த்த படி, நம் காதுகளால் வித்தியாசத்தை உணரக்கூடிய ஒலியமைப்புகள் harmonic series இல் அமைவதாய் இருக்கும். 240க்கும அடுத்த ஒலிநிலை இருப்பது Geometric progression என்ற விதிப்படி வகுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ச முதல் நி வரை இருக்கும் ஒலியமைப்பு இவ்விதமாக அமைகிறது:

ச ரி க ம ப த நி ச: 240 256 300 320 360 384 450 480



கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்

சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் பின்வரும் பாடல் உள்ளது -



‘ச ரி க ம ப த நி யென்று ஏழெழுத்தால் தானம்

வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய

ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்

சூழ்முதலாம் சுத்தத் துளை’

ஏழு சுரங்களுக்கு தமிழிசையில் போடப்பட்ட நமக்கு கிடைத்த முதல் வாக்கியங்கள் இவையே. ச-ப வரிசையை குரல்-இளி என தமிழிசையில் குறிப்பிட்டு வந்துள்ளனர்.



அகநிலைக்குரிய நரம்பின திரட்டி

நிறை, குறை கிழமை பெறுமென மொழிப.

மேற்கூறிய சிலப்பதிகார வரிகள்படி, சுர வரிசையை குறை, நிறை எனப் பகுத்துள்ளனர் எனத் தெரிகிறது. அதாவது கீழே உள்ள பட்டியல் படி, சுரங்களை குறை, நிறையென 12 சுரங்களாய் வகுத்துள்ளனர். ஆங்கில எழுத்துக்கள் மூலம் சுலபமாக இவற்றைக் குறிக்க முடியும்.

ச – ஷட்ஜம் – குறை, நிறை கிடையாது – S



ரி – சுத்தரிஷபம் -குறை – R2

ரி – சதுசுருதிரிஷபம் – நிறை. – R3



க – சாதாரண காந்தாரம் -குறை – G2 = R3

க – அந்தரகாந்தாரம் – நிறை – G3



ம – சுத்தமத்யமம் – குறை -M1

ம – பிரதிமத்யமம் – நிறை – M2

ப -பஞ்சமம் -P



த – சுத்த தைவதம் – குறை – D1

த – சதுசுருதி தைவதம் – நிறை – D2=N1



நி – கைசிகி நிஷாதம் – குறை – D3=N2

நி – காகலி நிஷாதம் – நிறை- N3

இதில் ச-ப எனும் ஒலி நிலைகளில் நிறை/குறை நிலைகள் கிடையாது. ஷட்ஜம் முதல் நிஷாதம் வரையிலான சுரக்கோர்வையை ஸ்தாயி எனக்கூறுவர். தமிழிசை மரபில் இதற்கு மண்டிலம் என்றும் பெயருண்டு.



‘வட்டம் என்பது வகுக்கும் காலை

ஓர் ஏழ் தொடுத்த மண்டிலம் ஆகும்’

- சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

முதல் மண்டிலத்தின் அலைவரிசை 240 ஹெர்ட்ஸ் எனக்கொண்டால், இரண்டாவதை 480 ஹெர்ட்ஸ் எனப் பண்டைய தமிழிசையில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு இரட்டித்த குரல் என்றும் பெயர்.

இப்படியாக ஏழு சுரங்கள் பன்னிரண்டாகப் பிரிவது போல், இந்தப் பன்னிரண்டும் நுண்ணிய சுரங்களாய் இருபத்திரண்டு ஆகப் பிரிக்கலாம். ஆபிரகாம் பண்டிதர் போன்றோர் சங்க கால இலக்கியங்கள் மூலம் இதனை நிரூபித்துள்ளனர்.

இதுவரை நாம் பார்த்தவை மேளகர்த்தா ராக அமைப்புக்கு அடிப்படையாகும்.

மேளகர்த்தா ராகம் அமைப்பு

மேளகர்த்தா ராக அமைப்புகளை அடைய, சில அடிப்படை விதிகள் உள்ளன.



1. ஒவ்வொரு தாய் ராகத்திலும், எல்லா சுரங்களும் இருத்தல் அவசியம்.

2. ஆரோஹணம் (ஏறுநிரல்), அவரோஹணம் (இறங்குநிரல்) – இவை இரண்டிலும் சுரங்கள் வரிசைப்படி இருக்க வேண்டும்.

3. மேல் ச, கட்டாயம் இருத்தல் வேண்டும்.

ஆக, கண்டிப்பாக ஒரு ச, ப இருத்தல் வேண்டும். இரண்டு ’ம’க்களில் (மத்யமம்) ஒன்றாவது இருத்தல் வேண்டும். இரண்டு ரி, க வில் ஒன்றாவது இருத்தல் வேண்டும். ஒரு த, நி இருத்தல் வேண்டும்.

மேளகர்த்தா ராகங்கள் மொத்தம் 72 ஆகும். இவற்றை நாம் கடபாயதி என்ற முறைப்படி சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இந்த முறைப்படி, சமஸ்கிருத எழுத்துக்களின் எண்களை ராகத்தின் பெயரோடு இணைத்துப் படிக்க வேண்டும். சமஸ்கிருத மொழிப்படி:

1 2 3 4 5 6 7 8 9 0 Ka kha Ga Gha Nga Ca Cha Ja Jha Nya Ta Tha Da Dha Na Ta Tha Da Dha Na Pa Pha Ba Bha Ma - - - - - Ya Ra La Va Sha Sha Sa Ha - -

1. ராகத்தின் முதல் இரு எழுத்துக்களை தனியாக எடுத்து, அதற்கான எண்களை இந்த கட்டத்தின் மூலம் நிரப்பவேண்டும்.

72 ராகங்களில் முதலாவதாக இருக்கும் கனகாங்கி ராகம்.

கனகாங்கி -முதல் இரு எழுத்துகள் – க, ன (1, 0)

2. இரண்டாம் விதிப்படி, இந்த எண்களை கடைசியிலிருந்து படிக்க வேண்டும். (பழைய இந்திய முறைப்படி)

கனகாங்கி – 01.

ஆக, இது முதல் மேளகர்த்தா ராகம்.

இப்போது இந்த எண்ணிலிருந்து, சுர அமைப்பை பெற என்ன விதியைக் கடைபிடிப்பது? இதற்கும் விதிகள் உண்டு.



1. ஒன்று முதல் 36 வரை உள்ள மேளகர்த்தா எண்களுக்கு – M1.

2. 37 முதல் 72 வரை – M2

3. கிடைக்கும் மேளகர்த்தா எண் 36ஐ விடக் குறைவாக இருந்தால், அந்த எண்ணில் ஒன்றைக் குறைத்துக்கொண்டு, ஆறால் வகுக்க வேண்டும். 36ஐ விட அதிகமாக இருந்தால், அந்த எண்ணிலிருந்து 36ஐக் கழித்துக் கிடைக்கும் எண்ணில் ஒன்றைக் குறைத்துக் கொண்டு ஆறால் வகுக்க வேண்டும்.

இப்படி வகுத்துக் கிடைக்கும் ஈவு (Quotient) எண்ணையும், மீத எண்ணையும் வைத்து மற்ற சுரங்களைக் கணக்கிடலாம்.

ஈவு எண் ரி க 0 R1 G1 1 R1 G2 2 R1 G3 3 R2 G2 4 R2 G3 5 R3 G3 மிச்ச எண் த நி 0 D1 N1 1 D1 N2 2 D1 N3 3 D2 N2 4 D2 N3 5 D3 N3

இதன்படி கனகாங்கி ராகத்தின் அமைப்பை கண்டுபிடிக்கலாம்.



1. தாய் ராகம் ஆதலால் ச, ப கண்டிப்பாக உண்டு.

2. முதல் மேளகர்த்தா எண்ணானதால் இதற்கு – M1

3. மேளகர்த்தா எண் 1; 36ஐ விட சிறியது. எனவே (1-1)/6. ஈவு:0, மிச்சம் – 0

4. ஆகையால் R1, G1, D1, N1 ஆகிய சுரங்களே சேரும்.

5. இதன்படி கனகாங்கி ராகத்தின் சுர அமைப்பு :



ஆரோஹணம் – ச ரி க ம ப த நி ச:

அவரோஹணம் – ச:நி த ப ம க ரி ச

என்ற வரிசைக்கிரமப்படி அமைந்துள்ளது.

அடுத்தது இன்னொரு உதாரணத்தின் மூலம் கடயபாதி வழக்கத்தை எடுத்தாளலாம்.

ராகம் – ஹேமாவதி.



1. மேளகர்த்தா எண் -ஹே, மா – ha, ma – 8, 5

2. இதன் மேளகர்த்தா எண் – 58.

3. மேளகர்த்தா எண் 37க்கு மேல் உள்ளதால் – இதில் M2 உள்ளது.

4. மற்ற சுரங்களைக் கண்டுபிடிக்க: 36ஐ விட 58 பெரியது; எனவே 58-36 = 22. (22-1)/6. ஈவு, 3 மிச்சம் 3.

5. இதனால் மேலேஇருக்கும் கட்டத்தின் மூலம்- R2, G2, D2, N2 என்ற சுர அமைப்புகளை அடைகிறோம்.



ஆரோஹணம் -S, R2, G2, M2, P, D2, N2, S

அவரோஹணம் – S, N2, D2, P, M2, G2, R2, S

சுலபமான சில பயிற்சிகள் மூலம், இதை எளிதில் கணக்கிட முடியும்.

சக்கரம்

இந்த 72 மேளகர்த்தா ராகங்களை, பனிரெண்டு குழுக்களாக பிரித்துள்ளனர். இதைச் சக்கரங்கள் எனக் கூறுவர். ஆக மொத்தம் 12 சக்கரங்கள். ஒவ்வொன்றிலும் ஆறு ராகங்கள் இருக்கும்.



மேளகர்த்தா ராக சக்கரம்

ஒவ்வொரு சக்கரத்திலும் இருக்கும் ராகங்களில் தைவதமும், நிஷாதமும் மட்டுமே மாறுபடும். இந்தப் பன்னிரண்டு சக்கரங்களுக்கும் கீழ்க்கண்டவாறு பெயர்கள் இடப்பட்டுள்ளன. இந்தப் பெயர்கள் அந்தச் சக்கரத்தின் எண்ணைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள்.




1. இந்து (நிலவு , ஒரே நிலவு)

2. நேத்ரம் (இரு கண்கள்)

3. அக்னி (மூன்று வகை வேள்வித் தீ, முத்தீ).

4. வேதம் (நான்கு வேதங்கள்)

5. பாணம் (மன்மதனின் 5 பாணங்கள்)

6. ருது ( 6 ருதுக்கள், அதாவது பருவ காலங்கள்)

7. ரிஷி (சப்த ரிஷிகள்)

8. வசு (அஷ்ட வசுக்கள்)

9. பிரம்மா (நவ பிரம்மாக்கள்)

10. திசி (பத்து திசைகள், வழக்கமான 8 திசைகளோடு, மேல், கீழ் இரண்டும் சேர்த்து).

11. ருத்ரர் (ஏகாதச ருத்ரர்கள்)

12. ஆதித்யர் (துவாதச ஆதித்யர்கள்).

 மிக்க நன்றி : தமிழ் ஹிந்து.காம்/2009/08/இசைக்கூறுகள் 04/


Wednesday, 25 December 2013

COUNTER POINT

This song below is based on Counterpoint - A Genre in Western Classical music. 

This is the extended version with BGMs. Raja has given a astounding BGM for a fight scene that pre comes the song . The BG score bricoles the fight to stress the in woven love the hero has also at the same time the vengeance! Raja has deeply used counterpoint in this song. Although many of his song have counterpoints, here he has made known the counterpoint. Counterpoint can be for vocal or for instruments or for both. It is widely used in western classical music. Counterpoint is the relationship between two or more voices that are harmonically interdependent (polyphony), but independent in contour and rhythm. It has been most commonly identified in classical music, developing strongly during the Renaissance and in much of the common practice period, especially in Baroque music. The term originates from the Latin punctus contra punctum meaning "point against point". In its most general aspect, counterpoint involves the writing of musical lines that sound very different and move independently from each other but sound harmonious when played simultaneously. In each era, contrapuntally organised music writing has been subject to rules, sometimes strict. By definition, chords occur when multiple notes sound simultaneously; however, harmonic, "vertical" features are considered secondary and almost incidental when counterpoint is the predominant textural element. Counterpoint focuses on melodic interaction—only secondarily on the harmonies produced by that interaction. In the words of John Rahn:

It is hard to write a beautiful song. It is harder to write several individually beautiful songs that, when sung simultaneously, sound as a more beautiful polyphonic whole. The internal structures that create each of the voices separately must contribute to the emergent structure of the polyphony, which in turn must reinforce and comment on the structures of the individual voices. The way that is accomplished in detail is...'counterpoint'.

In musical composition, contrapuntal techniques are important for enabling composers to generate musical ironies.[vague] These ironies serve not only to intrigue listeners into listening more intently to the spinning out of complexities found within the texture of a polyphonic composition, but also to draw them all the more into hearing the working out of these figures and interactions of musical dialogue. A melodic fragment, heard alone, makes a particular impression; but when the fragment is heard simultaneously with other melodic ideas, or combined in unexpected ways with itself (as in a canon or fugue), greater depths of affective meaning are revealed.
படியோர்: இளையராஜா , எஸ். ஜானகி
நடிப்பு: முரளி, ரேவதி ஆஷா கேளுனி மேனன்
இசை: இசைஞானி இளையராஜா
வருடம்: 1985
படம்: பகல் நிலவு 
இயக்குனர்  : மணி இரத்தினம் 

Singers: Ilayaraaja, S. Janaki 
Actors: Murali, Revathi asha keluni menon
Music: Maestro Ilayaraaja
Film: Pagal Nilavu
Direction: Mani Ratnam
Year: 1985

 

Wednesday, 22 May 2013

25 Benefits of Drinking Green Tea


Green tea has increasingly become a very popular drink worldwide because of its immensely powerful health benefits. It is extraordinarily amazing what green tea can do for your health. And if you're not drinking three to four cups of green tea today, you're definitely not doing your health a big favour. Here are the 25 reasons why you should start drinking green tea right now:





1. Green tea and cancer: Green tea helps reduce the risk of cancer. The antioxidant in green tea is 100 times more effective than vitamin C and 24 times better than vitamin E. This helps your body at protecting cells from damage believed to be linked to cancer.

2. Green tea and heart disease: Green tea helps prevent heart disease and stroke by lowering the level of cholesterol. Even after the heart attack it prevents cell deaths and speeds up the recovery of heart cells.
3. Green tea and Anti-ageing: Green tea contains an antioxidant known as poly-phenols which fight against free radicals. What this means it helps you fight against ageing and promotes longevity.

4. Green tea and weight loss: Green tea helps with your body weight loss. Green tea burns fat and boosts your metabolism rate naturally. It can help you burn up to 70 calories in just one day. That translates to 7 pounds in one year.

5. Green tea and skin: The antioxidant in green tea protects the skin from the harmful effects of free radicals, which cause wrinkling and skin aging. Green tea also helps fight against skin cancer.

6. Green tea and arthritis: Green tea can help prevent and reduce the risk of rheumatoid arthritis. Green tea has benefit for your health as it protects the cartilage by blocking the enzyme that destroys cartilage.

7. Green tea and bones: The very key to this is high fluoride content found in green tea. It helps keep your bones strong. If you drink green tea every day, this will help you preserve your bone density.

8. Green tea and cholesterol: Green tea can help lower cholesterol level. It also improves the ratio of good cholesterol to bad cholesterol, by reducing bad cholesterol level.

9. Green tea and obesity: Green tea prevents obesity by stopping the movement of glucose in fat cells. If you are on a healthy diet, exercise regularly and drink green tea, it is unlikely you'll be obese.

10. Green tea and diabetes: Green tea improves lipid and glucose metabolism, prevents sharp increases in blood sugar level and balances your metabolism rate.

11. Green tea and Alzheimers: Green tea helps boost your memory. And although there's no cure for Alzheimer's it helps slow the process of reduced acetylcholine in the brain, which leads to Alzheimer's.

12. Green tea and Parkinson's: Antioxidants in green tea helps prevent against cell damage in the brain which could cause Parkinson's. People drinking green tea also are less likely to progress with Parkinson's.

13. Green tea and liver disease: Green tea helps prevent transplant failure in people with liver failure. Researches showed that green tea destroys harmful free radicals in fatty livers.

14. Green tea and high blood pressure: Green tea helps prevent high blood pressure. Drinking green tea helps keep your blood pressure down by repressing angiotensin, which leads to high blood pressure.

15. Green tea and food poisoning: Catechin found in green tea can kill bacteria which causes food poisoning and kills the toxins produced by those bacteria.

16. Green tea and blood sugar: Blood sugar tends to increase with age, but polyphenols and polysaccharides in green tea help lower your blood sugar level.

17. Green tea and immunity: Polyphenols and flavonoids found in green tea help boost your immune system, making your health stronger in fighting against infections.

18. Green tea and cold and flu: Green tea prevents you from getting a cold or flu. Vitamin C in green tea helps you treat the flu and the common cold.

19. Green tea and asthma: Theophyline in green tea relaxes the muscles which support the bronchial tubes, reducing the severity of asthma.

20. Green tea and ear infection: Green tea helps with ear infection problem. For natural ear cleaning soak a cotton ball in green tea and clean the infected ear.


21. Green tea and herpes: Green tea increases the effectiveness of topical interferon treatment of herpes. First green tea compress is applied, and then let the skin dry before the interferon treatment.

22. Green tea and tooth decay: Green tea destroys bacteria and viruses that cause many dental diseases. It also slows the growth of bacteria which leads to bad breath.


23. Green tea and stress: L-the theanine, which is a kind of amino acids in green tea, can help relieve stress and anxiety.

24. Green tea and allergies: EGCG found in green tea relieves allergies. So if you have allergies, you should really consider drinking green tea.

25. Green tea and HIV: Scientists in Japan have found that EGCG (Epigallocatechin Gallate) in green tea can stop HIV from binding to healthy immune cells. What this means is that green tea can help stop the HIV virus from spreading.

Courtesy! Sunday Observer (Sri Lanka).

Monday, 18 March 2013





சுக்கில் இருக்கு சூட்சுமம் !!!

========================

மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது.
சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ‘‘சுக்கு நீர்’’ தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்.

சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக்கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப்
பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.

சுக்கு மொழிகள் பத்து:

1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.

2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.

3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.

4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.

5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.

7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.

8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.

9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.

10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.

பொதுப்பயன்கள்:

பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

மருத்துவப் பயன்கள்:

1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்l


சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.

புவியில் உற்பத்தியாகும் அளவில் 50 விழுக்காடு இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. அதில் கேரளாவில் 70 விழுக்காடு விளைகிறது. அதிலும் கொச்சியில் விளையும் வகைதான் புவியிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஐம்பது நாடுகளிக்கு சராசரியாக 7 ஆயிரம் டன் அளவுவரை சுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

தொன்மைக்கால கிரேக்கர்களும், ரோமாபுரி மக்களும் இதை விரும்பி செங்கடல் வழியாக அரேபிய வணிகர்களிடமிருந்து வரப்பெற்றார்கள். செம்மண் சேர்ந்த வண்டல்மண் அல்லது இரும்பகக் களிமண் சேர்ந்த வண்டல் மண்ணில் இது செழிப்பாக வளரும். இதில் அடங்கியுள்ள சத்துக்க்கள் பின்வருமாறு,
புரதம் 8.6
கொழுப்பு 6.4
கால்சியம் 0.1
பாஸ்பரஸ் 0.15
இரும்பு 0.011
சோடியம் 0.03
பொட்டாசியம் 1.4
கலோரி மதிப்பு 100 கிராம் அளவில் 300 கலோரி அளவு
உயிர்ச்சத்துக்கள் (Vitamins) A 1175U, B1 0.05 மி.கி., B2 0.13 மி.கி., நியாசின் 0.9 மிகி, C 12 மி.கி.

சித்தர்கள் இதற்கு விடமுடியாத அமுதம் என்று காரணப் பெயரிட்டுள்ளார்கள். சுக்குக்கு புறணி ஆதாவது மேல் தோல் நச்சு. அதை நீக்கினால் உள்ளிருப்பது அமுதம். இது ஏகநிவாரணி என்றும் அழைக்கப்படும். இதன் முக்கியப்பணி வெப்பமுண்டாக்கி, பசித்தீயைத் தூண்டி வாயுவை அகற்றுதல். ஒரு துண்டு சுக்கு வாயிலிட்டு மெல்ல பல்வலி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல் தீரும். சுக்குப்பொடியை சிறு முடிச்சாகக் கட்டி காதில் சொருகிவைக்கக் காதடைப்பு, வலி, சீதளம் நீங்கும். தாய்ப்பால் அல்லது பால்விட்டரைத்து பற்றுப்போட தலைவலி தீரும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து பால்விட்டரைத்து மூட்டுவலி, இடுப்பு வலிக்குப் பற்றுப்போட நலமடையும்.
சுண்டைக்காயளவு சுக்குப்பொடி எடுத்து தூய்மையான வெள்ளைத்துணியில் முடிந்து, 5 மில்லி லிட்டர் அளவு பாலில் ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து முடிச்சை எடுத்துவிட்டு அந்தப்பாலை இரண்டு கண்களிலும் சில சொட்டுக்கள் விட்டால் அதிகக்கோபம், மன அழுத்தம், மன நோயாளிகளின் வெறியாட்டம் ஆகியவை தீர்ந்து மன அமைதி ஏற்படும். (இவ்வாறு செய்யும்போது முதலில் எரிச்சலுண்டாகும் பின் குளிர்ச்சியாக மாறும்). தலைவலி, சீதளம் நீங்கி மன அகங்காரத்தை ஒடுக்கும்.

ஒரு குவளை பாலில் 2 கிராம் அளவு சுக்குப்பொடியும் சர்க்கரையும் சேர்த்து காலை மாலை பருகினால் மூட்டுவலி, வாயு, அசதி நீங்கி உடற்சுமை குறையும்.

உப்பைத்தண்ணீர் விட்டரைத்து சுக்கின்மேல் கவசம் போல்தடவிக் காயவைத்து, கரிநெருப்பில் சிறிது சுட்டு எடுத்து நன்கு சுரண்டிவிட்டு பொடித்து கண்ணாடிக்கலனில் மூடிவைக்கவும். இதனைச் சுண்டைக்காயளவு காலை, மாலை உணவுக்கு முன் புளித்த மோரில் கலந்துதர பசிக்குறைவு, வயிற்றுப்பொருமல், இரைச்சல், சூட்டுப் பேதி நீங்கும்.

இந்தப்பொடி 50 கிராம் அளவு, மிளகுப்பொடி 10 கிராம் அளவு எடுத்து அதனுடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை சிறிது நெய் விட்டு இடித்து சுக்குருண்டை செய்துவைத்துக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை மாலை உட்கொண்டு வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வாயு, இருமல், வாந்திபேதி, பேதி, குமட்டல், சுவையின்மை, அடிக்கடி வரும் காய்ச்சல், இதய நோய்கள், நரம்பியல் பிணிகள் நீங்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் பொரியும் சுக்குப்பொடி உருண்டையும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவருவதால் சீதளம் நீங்கிக் கருப்பை தூய்மையாகி குழந்தைக்கு நல்ல பாலும் உடலில் உற்பத்தியாகும். சர்க்கரைக்கு மாற்றாக பனை வெல்லம் சேர்ப்பது இன்னும் சிறப்பானதாகும்.
சுக்குப்பொடி 200 கிராம், வறுத்த மிளகு, திப்பிலி, வகைக்கு 25 கிராம் அளவு அதிமதுரப்பொடி, சிறியாநங்கைப் பொடி வகைக்கு 25 கிராம், இந்துப்பு 5 கிராம் அளவு கலந்து வைத்துக்கொண்டு, காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து உண்டு பின் வெந்நீர் குடிப்பதால் கொழுப்பும் உடல் பருமனும் குறையும். பித்தம், வாயு, கபம் குறையும்.

இது உலர்த்தப்படாமல் இஞ்சியாக இருக்கும்போது, தோல் சீவி சாறு எடுத்து 10 நிமிடங்கள் தெளியவைத்து சம அளவு எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 5 மணிக்கும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிடுவதால் வாய்க்கசப்பு, பித்தம், தலைச்சுற்றல், உதிரக் கொதிப்பு, செரியாமை, பசியின்மை நீங்கி குழந்தைகளும் பெரியவர்களும் முறையாகப் பசித்து சாப்பிடுவார்கள்.
சாப்பிடாத குழந்தைகளை அடித்து விரட்டுவதைவிட்டு இதைச் செயலபடுத்திப் பயனடையுங்கள். இது ஜம்பீர மணப்பாகு என்ற பெயரில் நமது மையத்தில் கிடைக்கிறது.

இஞ்சியைத் தோல் சீவி சிறுவில்லைகளாக அறுத்து தேனில் போட்டு சிலநாட்கள் வெய்யிலில் வைத்தெடுத்துக் கண்ணாடிக்கலன்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இந்த இஞ்சித்தேனூறலை காலை வெறும் வயிற்றில் 5 துண்டு சாப்பிடுவதால் மேற்கண்ட நன்மைகளைப் பெறலாம். இது ஒரு கற்பமுறை. செரியாமைக் கோளாறுகளை விரட்டிவிட்டால் வேறெந்த நோயும் நம்மை அணுகாது. எனவே இஞ்சியையும் சுக்கையும் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்


காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.

ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.

இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.


அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.

இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.

மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.

ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும்.

மூலிகை குடிநீர் (சுக்கு காபி)

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.

காலை மாலை இனிய பானம்:

பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையில் தவிப்போருக்கு உதவுவது சுக்கு காபி. சூடாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை நிறைவு செய்கிறது. காரமும் இனிப்பும் இருப்பதால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. காலை மாலை பானங்களுக்கு பொருத்தமானது இந்த சுக்கு காபி.

பவுடர் தயாரிப்பு:

சுக்கு, கொத்தமல்லி, சீரகம் மூன்றும் முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம். பூக்கள், வேர்கள், பட்டைகள், வாசனைப் பொருள்கள், என விரும்பிய எதுவும் சேர்க்கலாம்.


அவையாவன:

கருங்காலி, செஞ்சந்தனம், ரோஜா இதழ், தாமரை இதழ், செம்பருத்தி, ஆவாரம் பூ, ஏனம், ஜாதிக்காய், மிளகு, குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி, வெட்டிவேர், நன்னாரி வேர், வாய் விளங்கம், பதிமுகம், இருவேலி, துளசி, வெள்ளருகு, ஆரஞ்சுத் தோல் முதலியன. இவற்றைக் காய வைத்து அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.

ஒரு டம்ளர் தயாரிக்க

ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் தூளும், இரு ஸ்பூன் கரும்புச் சர்க்கரையும், (நாட்டுச் சர்க்கரை/ பழுப்பு சர்க்கரை/ கருப்பட்டி/ வெல்லம்) போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி மூடி வைத்து நன்கு ஆறின பின்பு வடிக்கட்டி சாப்பிடலாம். சிறிது பால் அல்லது தேங்காய் பால் கலந்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் சாப்பிடலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.

செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்.

Friday, 4 January 2013

இயற்கையாய் உடல் சூட்டை தணிக்க


சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்பார்கள்.

உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு!

உடற்காங்கை தான் பல நோய்களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள் வாய்வுத்தொல்லை, மூலம் இவைகள் உண்டாகும் காரணங்களில் அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம். உடல் உஷ்ணம் கண்களை பாதிக்கும்.

உடற்காங்கை அதிகமாக காரணங்கள் கோபம், மனக்கவலை, பயம், தாபம் இவை உடற்சூட்டைக் கூட்டும். உள்ளங்கை, விலா, தலை நெற்றி இவற்றை தொட்டுப்பார்த்தால் சூடு தெரியும்.

அடுத்த முக்கிய காரணம் உடலிலிருந்து வெளியேறாமல் தங்கி விடும் மலப்பொருட்கள் தான். உடலில் நச்சுப் பொருட்கள் தங்குவது எப்போது கெடுதலை வினைவிக்கும்.
1. உடலுக்கு எண்ணை பதமிடுதல் அவசியம். தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க, உடற்சூட்டினால் பொலிவிழக்கும் தலைமுடி மீண்டும் கருமையடையும். இளநரையை தவிர்க்கலாம். ஈரமுள்ள தலையில் எண்ணை தடவாமல், உலர்ந்த கேசத்தில் எண்ணை தடவி பின் குளிக்க வேண்டும். தலையின் எண்ணை தடவாமல் ஸ்நானம் செய்வதும், ஸ்தானத்திற்கு பின் ஈரத்தலையில் எண்ணை தடவுவதும், நீர்கோர்வை, சளி, நரை இவற்றை வரவழிக்கும். கேசத்திலும், தோலிலும், எண்ணைப் பசை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது உடல் உஷ்ணம் குறையும்.

2. இரவு படுக்கப் போகும் போது உள்ளங்கால்களில் நல்லெண்ணை தடவி, தேய்த்து பிடித்து விட்டுக் கொண்டால், கண்களின் எரிச்சல், காங்கை குறையும்.

3. எண்ணை குளியலுக்கு உகந்தவை சூடாக்கப்பட்ட நல்லெண்ணை, திரிபலாதி தைலம், பிருங்காமல தைலம், பொன்னாங்கண்ணி தைலம், போன்றவை பல பலன்களை அளிக்கும். ஆயுர்வேத மருத்துவரின் உதவியோடு, உங்களுக்கு பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுக்கவும். கரிசிலாங்கண்ணி, இலைகள், நெல்லி முள்ளி, மருதாணி, எள், இவற்றை தனியாக அரைத்தோ, இல்லை பால்விட்டு அரைத்தோ, சிறிது சூடு செய்து, குளியலுக்கு உபயோகிக்கலாம்.

4. உடலில் தங்கியுள்ள விஷமாகும் கழுவுப் பொருட்களை வெளியேற்ற விரேசன மருந்துகளை, டாக்டரின் அறிவுரைப்படி உட்கொள்ளவும். தினமும் மலம் கழிக்க இவை உதவும். மாதம் ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டால், வயிறு சுத்தமாகும். திராஷை கஷாயம் போன்றவை இயற்கையாக பலன்தரும்.

5. எண்ணை குளியலை மேற்கொள்ளும் போது, எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்வதே நல்லது. மிளகு, ஓமம், இவற்றை போட்டு எண்ணையை காய்ச்சுவது வழக்கம். கொம்பரக்கை போட்டு காய்ச்சிய எண்ணையை உபயோகித்தால் உடற்காங்கை குறையும்.
6. எண்ணை தேய்த்துக் கொண்டு குளிக்கையில் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும்.

7. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.

8. மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.

9. தினமும் இரண்டு மூன்று நெல்லிகாயை உட்கொள்ளவும்.

10. வெள்ளரி சாறு, கேரட் சாறு, இவைகள் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

11. இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பது சிறந்தது.

12. கசகசா விதைகளை பாலில் அரைத்து இந்த களிம்பை தலையில் தடவிக் கொண்டு குளிக்கலாம்.
13 . மேகம் முற்றினால் வெள்ளை, வெள்ளை முற்றினால் வெட்டை,வெட்டை முற்றினால் கட்டை.-கிராமத்து பழமொழி.

மேகம் என்றால் சூடு, உஷ்ணம் என்று பொருள். உடலில் உஷ்ணம் அதிகரித்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் தோன்றும்.இந்நிலை நீடித்தால் வெள்ளை,வெட்டையாக மாறும். இந்நிலை நீடித்தால் உடல் மெலிந்து வேறு பல நோய்கள் தோன்றி இறக்கும் நிலை உருவாகும்.

சரி இதற்கு பழமொழியில் உள்ள மருத்துவம் எது என்றால்,இதில் உள்ள கடைசி வார்த்தைதான் மருந்து, அதாவது கட்டை இது சந்தனக்கட்டையை குறிப்பதாகும். இன்று சராசரியாக அதிகமாக பெண்களிடம் காணப்படும் நோய்களில் இதுவும் ஒன்று....

முற்றிய நிலை வெள்ளை வெட்டைக்கு தரமான சந்தன கட்டையை சிறிது பன்னீர் விட்டு அம்மியில் தேய்க்க தேய்க்க விழுது போல் வரும்.அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரிஜினல் சந்தன அத்தர் மூன்று சொட்டு விட்டு ஒரு தம்ளர் பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்

இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட அதிக நாள்பட்ட வெள்ளை வெட்டை நோய் குணமாகும்....அம்மா சொல்படி கேட்டு,வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் அரப்பு போட்டு குளிச்சீக்கிட்டு இருந்தா,உடல் சூடும் ஆகாது..வெட்டையும் வராது.. ஷாம்பு போட்டு குளிச்சிட்டு,மென்மையான உணவான இட்லியை மறந்து ஜீரணமாகாத பீட்ஸா வை சாப்பிட்டா எல்லாமே வரும்!!


14 . உடல் சூட்டை தணிக்க : இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும் ! 50 கிராம் பிசின் 24 ரூபாய் ! அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் !
 
இயற்கையாய் உடல் சூட்டை தனித்து உடல் அழகும், ஆரோக்கியமும் பெற மேல் உள்ள குறிப்புகள் உதவலாம் ! மேல் உள்ள குறிப்புக்கள் ஒரு கைடு அவ்வளவே! 

When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and Interstellar Wanderers

When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and Interstellar Wanderers When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and I...