Saturday, 8 September 2012

ஸ்ரோதஸ்வனி - Srotaswini Raga


இந்தக் கட்டுரை ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சுப் செய்யப்பட்டுள்ளது. சில விஷயங்கள் தமிழுக்கு மற்றம் செய்ய முடியவில்லை ஆகவே !!

ஸ்ரோதஸ்வனி இராகதிற்குப் செல்லும் முன் பெயர் காரணம் மற்றும் அறிவியல் சார்ந்த அலகுகளையும் சற்று நோக்குவோம் : Before we go to the raga, we just have an glance on the naming reasons!

'srotas' means flow of a river. srotaswini is the name of a river and is also a rare raga of Carnatic music. Srothaswini - S G2 M1 P N3 S | S N3 P M1 G2 S . Srotas, or Shrotas (pronounced /ˈʃroʊtɑːs/ US dict: shrō′·tâs, n.pl., from Sanskrit स्रोतस् srótas - the current, stream, torrent, channel, course ) -- in Ayurveda, the 13 types of channels used to convey dhatus and malas. Any injury to the shrotas leads to poor circulation, thus resulting in disease. Eridanus constellation is called srotaswini in Sanskrit. Srotaswini  is a pentatonic raga : S G2 M1 P N3


Eridanus /ɨˈrɪdənəs/ is a constellation. It is represented as a river; its name is the Ancient Greek name for the Po River. It was one of the 48 constellations listed by the 2nd century astronomer Ptolemy, and it remains one of the 88 modern constellations. It is the sixth largest of the modern constellations.




The stars that correspond to Eridanus are also depicted as a river in Indian astronomy starting close to the head of Orion just below Auriga. Eridanus is called Srotaswini in Sanskrit, srótas meaning the course of a river or stream. Specifically, it is depicted as the Ganges on the head of Dakshinamoorthy or Nataraja, a Hindu incarnation of Siva. Dakshinamoorthy himself is represented by the constellation Orion.

ஸ்ரோதஸ்வனி என்ற அபூர்வ ராகமானது, கீரவாணி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். சரியான பெயர் ஸ்ரோதஸ்வனியா அல்லது ஸ்ரோதஸ்வினியா என்று தெரியவில்லை.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம் - S G2 M1 P N3 S
அவரோகணம் - S N3 P M1 G2 S

இந்த அபூர்வ ராகம், கர்னாடக இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்த இராகத்தில் ஐந்து  சினிமாப்பாடல்கள் இசைஞானி இளையராஜா சமைத்துள்ளார்.

கர்நாடக இசையில் இந்த இராகத்தைக் கேட்க வேண்டுமென்றால், வயலின் எம்பார் கண்ணனும், கீ போர்ட் சத்யநாராயணவும் சேர்ந்து வாசித்துள்ள ஒரு அருமையான ஆலாபனையைக் கேட்க வேண்டும். கடந்த வருடம் லாஸ் ஏஞ்கல்ஸ் நகரில் இதனை வாசித்துள்ளார்கள். இந்த ஆலாபனையைக் கேட்கும்போது யாராக இருந்தாலும் சில நிமிடங்களுக்காவது பரவச நிலை அடைவது நிச்சயம்.




இசைஞானி இளையராஜா இந்த இராகத்தில் சமைத்து உள்ள ஐந்து திரை இசைப் பாடல்கள் :

முதல் பாடல் "நீங்கள் கேட்டவை" என்ற படத்தில் இடம் பெற்ற "ஓ. வசந்த ராஜா" என்ற பாடலாகும். இதுவும் ஸ்ரோதஸ்வனியில் அமைந்த ஒரு இனிமையான பாடலாகும்.



இரண்டாவது பாடல் "பூந்தோட்டக் காவல்காரன்" என்ற படத்தில் இடம் பெரும், "சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு" என்ற பாடல். ஜேசுதாஸ் மற்றும் சுசீலா குரலில் பாடப்பட்ட ஒரு இனிமையான பாடல்.



மூன்றாவது பாடல்:

நீதானா அந்தக் குயில் படத்தில் பூஜை கேத்த பூ விது




நான்காவது பாடல்:


Jai Chiranjeeva Jagadeka Veera - Jagadeka Veerudu Athiloka Sundari (Telugu)

 



ஐந்தாவது பாடல்:


sumam sumam prathi sumam sumam – Maharishi ( Telugu) 



கனகாங்கி / Kanakangi Swaravahini


கனகாங்கி கருநாடக இசையின் முதல் மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் முதல் இராகத்திற்கு கனகாம்பரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்


 ஆரோகணம்: ஸ ரி1 க1 ம1 ப த1 நி1 ஸ் அவரோகணம்: ஸ் நி1 த1 ப ம1 க1 ரி1 ஸ
  • 72 மேளகர்த்தா திட்டத்தில் முதல் மேளம்.
  • இது இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம்(நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
  • இது ஒரு விவாதி மேளம்.
  • நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடாத ராகம்.
  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் சாலகம் (37) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரிஷப சுரம் முறையே காமவர்த்தனி மேளம் (51) தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
  • இந்த மேளத்தில் சில ஜன்ய இராகங்கள் உண்டு.


Kanakangi (pronounced Kanakāngi, Sanskrit: कनकांगि,Kannada: ಕನಕಾಂಗಿ, Telugu: కనకాంగి, Tamil: கனகாங்கி, The Golden Bodied One) is a rāgam in Carnatic music (musical scale of South Indian classical music). It is the 1st Melakarta rāgam in the 72 melakarta rāgam system of Carnatic music. It is called Kanakāmbari in the Muthuswami Dikshitar school.

It is 1st rāgam in the 1st chakra Indu. The mnemonic name is Indu-Pa. The mnemonic phrase is sa ra ga ma pa dha na.[1] Its ārohaṇa-avarohaṇa structure (ascending and descending scale) has all shuddha swaras, as follows (see swaras in Carnatic music for details on below notation and terms):
  • ārohaṇa: S R1 G1 M1 P D1 N1
  • avarohaṇa: S N1 D1 P M1 G1 R1
(the notes are shuddha rishabham, shuddha gandharam, shuddha madhyamam, shuddha dhaivatham, shuddha nishadham)
It is a sampurna rāgam – a rāgam that has all seven swaras (notes). It is the shuddha madhyamam equivalent of Salagam, which is the 37th melakarta.

Asampurna Melakarta
Kanakāmbari is the 1st Melakarta in the original list compiled by Venkatamakhin. The notes used in the scale are the same, but the ascending scale is different. It is an audava-sampurna raga (5 notes in ascending scale, while full 7 are used in descending scale).[3]
  • ārohaṇa: S R1 M1 P D1 S'
  • avarohaṇa: S N1 D1 P M1 G1 R1 S

Janya rāgams
Kanakangi has a few janya ragams associated with it, of which Karnātaka shuddha sāveri and Lavangi (a recent addition to Carnatic music by Dr. M. Balamuralikrishna) are a little popular. Kanakangi's notes when shifted using Graha bhedam, yields Kamavardani. Graha bhedam is the step taken in keeping the relative note frequencies same, while shifting the shadjam to the next note in the rāgam.

உள்ளம் உருகி சுத்தானந்த பாரதியார் ரூபகம் தளம்

http://www.youtube.com/watch?v=hTpki7HKPJk

யேசுதாஸ் பாடிய ஒரு கிருதி

http://www.youtube.com/watch?v=pTq97w72Sgc


இசைஞானி இந்த இராகத்தில் சமைத்த ஒரு பாடல்

http://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்


ஒவ்வொரு முறையும் டாஸ்மாக்கை தாண்டி போகும்போதெல்லாம் மனசும் வயிறும் எரியும்.

தமிழகத்தில் ரேசன் கடைக்குப் போக மறுக்கும் ஆண்களின் கூட்டம் டாஸ்மாக்கில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் சனிக்கிழமை என்றால் கூட்டம் இன்னும் அதிகமாகும்.




முன்பெல்லாம் குடிகாரர்களைக் கேவலமா பார்ப்பார்கள். ஆனால் இன்று கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகு குடியை fantasy-யாக மாற்றி விட்டார்கள்.

சினிமா, டிவி, பத்திரிகை என அனைத்து ஊடகங்களிலும் குடி கொண்டாடப்படுகிறது. ஹீரோக்களின் எண்ட்ரியே பாட்டில் ஓபனீங்கில் தான் ஆரம்பிக்கிறது.. ஃபேஸ் புக்கில் தண்ணியடிப்பதை சிலாகிக்கிறார்கள் சில நண்பர்கள்..

சாராய வியாபாரம் செய்வது ரவுடிப்பயலுக வேலையா இருந்ததை மாற்றி அதைப் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்தார்கள் திராவிட ஓட்டுப்பொறுக்கிகள் .





நண்பர்கள் கூட்டத்தில் ``நீங்க தண்ணியடிப்பீங்களா பாஸ்’’ என்று திடிரென எழும் கேள்விக்கு, ``இல்ல’’ என்று பதில் சொல்பவர்கள் வெட்கப்பட வேண்டிய சூழல். ``அட என்ன பாஸ்.. தண்ணியடிக்காம நீங்களெல்லாம் எதுக்கு உயிர் வாழ்றீங்க..’’ என்ற நக்கல் வேறு வரும்.


இதில் குடிக்கும் நண்பர்கள் தவறாமல் ஒரு டயலாக்கை சொல்வார்கள்.. ``ஐயோ பாஸ்.. எப்பவாவது தான் குடிக்குறது.. அதுக்கு அடிமையாவெல்லாம் ஆக மாட்டோம்’’என்று. அதைக் கேட்டுக்கும் போதெல்லாம் அவர்களை நினைத்து பரிதாபமாக இருக்கும்.

ஒருவனுக்குச் செக்ஸ் விசயத்திலோ, லஞ்சம், ஊழல், திருட்டுத் தனம் பண்ணுவதில் வீக்னஸ் இருக்கிறது என்றால், என்றாவது ஒருநாள் அவன் சிக்கும் போது அவமானத்தில் மனம் திருந்த வாய்ப்புண்டு. கவுன்ஸ்லிங்க் மூலமாகத் திருத்தலாம். ஆனால் குடி அப்படியல்ல.. அவனின் அத்தனை நரம்புகளும் அதற்கு அடிமையாக்கப்பட்டு அதில்லாமல் அவனில்லை என்ற நிலைக்குத் தள்ளிவிடும். நூற்றில் ஒரு கேஸ் தான் தானா அறிவு வந்து திருந்துவதுண்டு.



இந்தாண்டு 18 ஆயிரம் கோடிக்கு வித்துருக்கோம் என்று சாராய வியாபாரத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தைச் சாதனையாகச் சொல்கிறார் ஜெயலலிதா. நாட்டில் இன்னும் குடிக்காமல் இருக்கும் அத்தனை பேரையும் எப்படிக் குடிகாரர்களாக்கலாம் என்று அரசாங்கம் திட்டம் தீட்டுகிறது.


சிலர் திருட்டுத்தனமாகச் சாராய வியாபாரம் செய்தபோது குடித்தவர்களின் எண்ணிக்கை கவர்மெண்டே வியாபாரம் செய்ய ஆரம்பித்தப்பிறகு நினைத்துப்பார்க்க முடியாதளவுக்கு உயர்ந்திருக்கிறது.



குடியை சகஜமாக்கியதன் விளைவு ஒருவேளை நாளை தமிழகத்தில் டாஸ்மாக் மூடப்பட்டால் தமிழகமே மனநோயாளிகளின் கூடாரமாக மாறியிருக்கும். அந்தளவுக்குக் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது அரசின் சாராய வியாபாரம்.




டாஸ்மாக்கில் சிறுவர்களோ, பொம்பளப்பிள்ளையோ காசை நீட்டுனா பாட்டில்.. அது மட்டும் தான் ஓட்டுப்பொறுக்கிகளின் பாலிஸி. பணம்.. பணம்.. எப்படியாவது மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் விஷமாகி குடிகாரர்கள் இறக்கிறார்கள் என்பதற்காகக் கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்வதை எப்படி ஏற்க முடியும். ஒரு தவறை திருத்த நடவடிக்கை எடுப்பது சரியா.. இல்லை ஸ்லோ பாய்ஸன் தயாரிப்பது சரியா..


இதில் ஆட்டோ டிரைவரும் ஐ.டி.காரனும் ஒண்ணா தண்ணியடிக்குறதை தடுக்கு எலைட் பார் வேறு.



கருணாநிதி ஜெயலலிதாவுக்கிடையே பரஸ்பரம் எவ்வளவு கொலைவெறி இருந்தாலும் இந்தச் சாராய வியாபாரத்துல மட்டும் அவ்வளவு ஒற்றுமை. எந்த ஆட்சி மாறினாலும் அதற்கு மட்டும் தடையில்லை. கருணாநிதி ஆட்சியிலும் சசியின் மிடாஸில் இருந்து தான் சரக்கு சப்ளையானது.

ஒரு குடும்பத் தலைவனைக் குடிக்கு அடிமையாக்கி அவனின் பாக்கெட்டில் இருந்து நூறு ரூபாயை ஆட்டையப்போடும் அரசு, அதில் ஒரு ரூபாயை அரிசி, மிக்ஸி, ஃபேன் என்று இலவசங்கள் கொடுக்கப் பயன் படுத்துகிறது. எவ்வளவு கேவலமான திருட்டு.. பணம் கிடைக்கிறது என்பதற்காக எங்கள் தலைமுறையையே போதைக்கு அடிமையாக்குறார்கள்.
வீச்சருவாளும் கையுமா பனங்காட்டுக்கு நடுவிலும், ஒடங்காட்டுக்கு நடுவிலும் போலீசுக்கு தெரியாமல் பதுங்கியிருந்து வெள்ளை கேனில் சாராயம் வித்தவர் கந்தையா அண்ணாச்சி. சிறுவனாக இருந்த போது ஒரு முறை தாத்தா ஒருவருக்காகப் பாக்கெட் சாராயம் வாங்க நண்பனோடு போனபோது, ``சாராயம் வாங்க வர்ற அளவுக்குப் பெரியாளாயிட்டிங்களாடா.. போய் பெரியவங்கள வந்து வாங்க சொல்லுங்க’’னு பொடதில தட்டி விரட்டுனார் கந்தையா அண்ணாச்சி.

அவர் என்றைக்கும் ஒரு சின்னப்பயனுக்குச் சாராயம் கொடுத்து பார்த்ததில்லை.

ஆனால் பணம் கிடைக்கிறது என்பதற்காகச் சிறுவர்களைக் கெடுத்துவிடக்கூடாது என்று நினைத்த படிக்காத கந்தையாக்களிடம் இருந்த நேர்மை, இந்த ஓட்டுப்பொறுக்கிகளிடம் இல்லை..
இதை எழுதுவதற்கு உனக்கென்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறீர்களா.. ஒரு குடிகாரரின் பிள்ளை என்ற சிறப்பான தகுதி எனக்குண்டு.. :(
Posted by cartoonist bala in his blog ( மேல் உள்ள கருத்துக்கள் கார்டூனிஸ்ட் பாலாவின் குமுறல்கள் ) [ பலரின் குமுறலும் அதுதான் ]


                                                           



பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை தனியாரிடம் விட்டுவிட்டு அரசுகள் மதுக்கடைகளை நடத்தத் தொடங்கியுள்ளன. அரசு எந்திரம் இலக்கு வைத்து மதுபான விற்பனையை அதிகப்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், கோயில், மருத்துவமனை, குடியிருப்பு ஏன் சமத்துவபுரங்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கக்கப்படுகின்றன.




சாலையோரங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக்கடையில் குவாட்டர் வாங்கி மூடியைத்திறந்து அப்படியே ராவாக மடமடவென்று குடித்துவிட்டு அப்படியே நிதானமிழந்து வீழ்பவர்களை நாம் தினந்தோறும் பார்க்க முடியும். இதன் காரணமாக நிகழும் சாலை விபத்துகள் ஏராளம். மதுவைத் தவிர பிற காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் பாதசாரிகளின் உயிருக்கு உத்திரவாதமின்றி அமைக்கப்படுகின்றன. சைக்கிளில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் முன்னேறியிருக்க சைக்கிள் பின்புற பிரதிபளிப்பான் (indicators) இன்னும் பழையபடிதான் உள்ளது. அதுகூட எதேனும் லேசாக மோதினால்கூட நொறுங்கிவிடும். சாலைகளில் மரங்களில் ஒட்டப்படும் பிரதிபளிப்பான் கூட பரவாயில்லை. சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏன் இவற்றை கவனிக்க மறுக்கின்றன. பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் சாலைகளில் சென்று வீடு திரும்புவது உறுதியில்லாத நிலை உள்ளது.
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிபோதை சாலை விபத்துகள் நடந்தேறுகின்றன. சென்ற ஆண்டில் மணலி கிராமத்திற்கருகே நடந்த சாலை விபத்தொன்றால் நான் பல கிலோ மீட்டர் தூரம் நடந்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி திருவாரூர் நெடுஞ்சாலையில் ஆலத்தம்பாடி, மணலி ஆகிய கிராமங்களுக்கு இடையில் பழையங்குடி ஊராட்சிப் பகுதியில் தலைவர் ஏ.எஸ்.பாண்டியன் மதுபான கடைப்பகுதி என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளார். தமிழகமெங்கும் இந்த மாதிரி எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டும். தலித் குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. குடிபோதை விபத்துகள் அடிக்கடி நிகழும் இப்பகுதியில் வேறுவழியின்றி ஊ.ம.தலைவர் எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வேகத்தடைகள் அமைக்க கோரிக்கைகள் வரலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளிக்கூடப் பகுதிகளில்கூட வேகத்தடைகள் வைக்கப்படுவதில்லை.
பள்ளிப்பகுதிகளில் வருங்கால அப்துல் கலாம்கள் நடமாடும் இடம் என்று பல இடங்களில் விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகளை இதைவிட மோசமாக இழிவுபடுத்தமுடியும் என எனக்குத் தோன்றவில்லை. இதைப்போல ஒவ்வொரு டாஸ்மாக் கடை அருகே சாலைகளில் மாநில அரசின் வருவாயைப் அதிகரிக்கும் புரவலர்கள் நடமாடும் இடம் வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் என்றுஅறிவிப்புப் பலகைகள் வைக்கலாம்.
மக்கள் நலனைக் கணக்கில்கொள்ளாது வருவாயை மட்டும் நம்பி அரசு நடத்தும் டாஸ்மாக் சூதாட்டத்தில் அப்பாவி ஏழை கூலித்தொழிலாளிகள் பலியாவது வேதனையான உண்மை. கள்ளுக்கடைகளை மூடிவிட்டு சசிகலா, விஜய் மல்லையா போன்ற சாராய முதலைகள் நலன்கள் மட்டும் அரசால் பாதுகாக்கப்படுகின்றன.



100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் கூலித்தொகையில் பெரும்பகுதி டாஸ்மாக் கடைகளையே சென்றடைகிறது. குடியால் உடல்நலம் கெட்டு மரணமடைவது ஒருபுறமிருக்க குடிபோதை விபத்துகள் நடப்பதால் பல்லாயிரம் உயிர்கள் மாண்டுபோகிறது. ஜெ.ஜெயலலிதாக்களும் மு.கருணாநிதிகளும் இந்நிலை நீடிக்கவே விரும்புகிறார்கள்.



அப்போதுதான் குவாட்டர் பாட்டிலில் குடிமகனின் வாக்கைத் தக்கவைக்க முடியும் என்பது இவர்களது அசாத்திய நம்பிக்கை. இதை மாற்றக்கூடிய சக்தி நமது குடிமகன்களிடம் இருக்கிறதா என்பதே நம்முன் எழும் மிகப்பெரிய கேள்வி.

டாஸ்மாக் தான் இந்த மாநிலத்தின் விலாசமாகி போனது என்றால் அது மிகையல்ல.
ஆம் தெருக்கு மூணு டாஸ்மாக்கை திறந்துக் கொண்டிருக்கும் அரசின் போக்கு அப்படித்தான் உள்ளது. டாஸ்மாக் என்ன பாரம்பர்ய கம்பெனியா?

இல்லவே இல்லை- அதன் ஆரம்பம் வெறும் 29 வருடங்களுக்கு முன்புதான்.

1937 ஆம் ஆண்டு தமிழகத்திற்க்கு மதுவிலக்கை கொண்டு வந்தது சி ராஜாகோபாலச்சாரிதான். ஆனால் டாஸ்மாக் என்னும் மொத்த குத்தகை சாராய வியாபாரியை உரு ஆக்கிய பெருமை எம்ஜிஆரை தான் சேரும்.

1983 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த நிறுவனம் முதலில் எல்லா தயாரிப்பாளர்களின் உற்சாக பானத்தையும் மொத்தமாக வாங்கி தமிழகத்தின் எந்த ஒரூ மூலை முடுக்கு ஹோட்டல்கள் மற்றும் பார்களுக்கும் சப்ளை செய்து வந்தது.

சி ராஜகோபால் கொண்டு வந்த மதுவிலக்கு என்ன ஆயிற்று என கேட்டால்- ஆம் அது 1937 – 2001 ஆம் ஆண்டு வரை இருந்தது.

இந்நிலையில் அதை உடைத்து முதன் முதல் தமிழகத்தில் குடிமகனாக உருவாக்கிய பெருமை கலைஞருக்குத்தான் சேரும்.

ஆம் அவர் அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு இறந்த போது இடைக்கால முதலமைச்சரானார். அடுத்து நான் முதலைமச்சராக வந்தால் மதுவிலக்கை ஒழிப்பேன் என்பது ஒரு மெயின் தேர்தல் அஜென்டா ஆக்கி 1971 ஆம் ஆண்டு ஆட்சி கட்டிலில் உட்கார்ந்த போது தமிழகத்தில் முழு மதுக்கொள்கையை கொண்டு வந்து அதை 1974 முடிவுக்கு கொண்டு வந்த பின் 1976 தேர்தலில் தோற்றும் போனார்.

அதை ஒரு பெரிய அஜென்டாவாக்கி முதலைமச்சர் ஆனார் எம்ஜிஆர்- 1977 ஆம் ஆண்டு.
ஆனால் மது என்ற போதை வஸ்து இல்லாமல்போனால் நம்மின் அடுத்த ஆட்சி சந்தேகத்திற்க்கு உள்ளாகும் என தெரிந்து 1981 – 1987 ஆம் ஆண்டு வரை அது தமிழகத்தை அழிவு பாதைக்கு கொண்டு சேர்த்தது.

இதற்க்கிடையில் சாராய வியாபாரியாக சில உடையார்கள் படையார்கள் உலா வந்த நேரத்தில் தான் 1983 ஆம் ஆண்டு மது உண்டு ஆனாலும் அது அரசின் கேட் வே மூலம் என்று டாஸ்மாக் உதயமாயிற்று.

பழைய குருடி கதவை திறடி கதை தான் மதுவிலக்கு

ஆட்சி கட்டிலில் உட்கார்ந்த ஒரே வருடத்தில் மீண்டும் மதுவியாபரத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான் 1990 – 91.

இப்படியே ஒவ்வொரு முதலமைச்சரும் பந்தாடிய ராஜாகோபாலாச்சாரியின் மதுவிலக்கு 2001 ஆம் நிரந்தரமாக அடக்கம் செய்யபட்டது.
அரசு சாராயக்கடை – கடா மார்க் ஊருக்கு ஒரு அரசு சாராய ஃபாக்டரி எல்லாம் இந்த காலகட்டத்தில் தான்.

இருந்தாலும் ஒரு கிளாஸ் 8 ரூவா ஒரு முழு பாட்டில் 40 ரூவா வரை இருந்த சாராய வியாபாரத்தால் பெரிதாக சாதிக்கமுடியாமல் போனதால் அரசே இந்த நவீன சுடுகாட்டை தெருக்கு தெரு கொண்டு வந்து சேர்த்து மட்டுமில்லாமல் உலகின் நெ-1 பிராஃபிட் அரசு கம்பெனியாக உருவெடுத்தது என்றால் மிகையில்லை.

சார்ந்த ஒயின்ஷாப், ஜாதிக்காரர்களின் ஒயின்ஷாப் ஆதிக்கம், உள் அடி விலை வைத்து ஏலத்தை ஏய்ப்பது எடுத்தவனை வெட்டுவது என தனியார் ஒயின்ஷாப்பை முதலில் இரும்பு கரம் கொண்டு அடக்கி தமிழகத்தில் திராவிட அரசே பெரிய தில்லாலங்கடி இதுல நீங்க எதுக்குன்னு முதன் முதலாய் 29 நவம்பர் 2003 ஆண்டு அரசு விற்க வேண்டிய கல்வியை தனியாருக்கு கொடுத்து தனியார் விற்க வேண்டிய சாராய பிஸினஸை அரசு எடுத்து கொன்டு ஆரம்பித்த தனிகாட்டு பிஸினசை 2004 ஆண்டு முதல் எல்லா பிரைவேட் ஒயின்ஷாப்புகளுக்கும் அரசின் பச்சை பெயிண்ட் அடிக்கபட்டு கையகப்படுத்தபட்டது.


2003 – 2004 ஆம் ஆண்டு வருமானம் 2828.09 கோடியாய் இருந்த வியாபரம் வருடத்திற்க்கு 100% சதவிகிதம் என அதிகரித்து 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக.
இப்போது பிஸினஸ் 7300 கோடியாய் இருக்கும் இந்த தங்க சுரங்கத்தை மூடினால் அதில் கிடைக்கும் 58 – 73% சதவிகித வரி பணத்தை இழக்க தயாராய் இல்லாமல் அதற்க்கு உரம் போட்டு வளர்த்து இன்றோடு 9 வருட டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் சுமார் 21,000 கோடிகளாய் நின்றால் உலகின் முதல் லாபத்தோடு இயங்கும் அரசு கம்பெனி இதை தவிர வேறு என்ன இருக்கமுடியும்.

சாதாரண சரக்குக்கு 58% வரை வரி, ஃபாரின் லிக்கருக்கு 73% வரி இந்த பிஸினஸை தவிர வேறு எதனால் தரமுடியும் என வளர்த்த கட்சிகளோ அல்லது அதை தாங்கி பிடித்த கூட்டணி கட்சிகளும் இப்போது நீலி கண்ணீர் வடித்தால் என்ன செய்ய முடியும்.
மது விலக்கு இப்போது அமுலுக்கு மட்டும் வந்தால் பலரின் நிலமை என்னவாகும் என்று யாருக்கு தெரியாது???

ஆனால் விளைவுகள் முதல் இரண்டு வருடங்களில் வருமானம் ஆகட்டும், கள்ள சாராயமாகட்டும், பர்மாபஜார் சரக்கு வியாபாரம் ஆகட்டும் ஒரு பெரிய சவால்தான்.
ஆம் ஒரு விஷயம் தமிழகத்தில் 92% சதவிகிதம் கள்ள சாராயம் காய்ச்சுவது ஒழிந்தாலும் இன்று ஆயிரம் மடங்கு வளர்ந்து நிற்கும் குடிகாரர்களின் நிலைமை……………


55. கொடுங்கோல் மன்னவன் நாட்டின் ......

படுங்கோலம் அறியாமல் தண்டலையார்
திருப்பணிக்கும் பங்கம் செய்வார்!
நெடுங்கோளும் தண்டமுமாய் வீணார
வீணனைப்போல் நீதி செய்வார்!
கெடுங்கோபம் அல்லாமல் விளைவுண்டோ?
மழையுண்டோ? கேள்வி யுண்டோ?
கொடுங்கோல்மன்னவன் நாட்டிற் கடும்புலிவா
ழுங்காடு குணமென் பாரே!


(தொ-ரை.) படும் கோலம் அறியாமல் தண்டலையார் திருப்பணிக்கும்
பங்கம் செய்வார் - அடையப்போகும் தன்மையை உணராமல் தண்டலையாரின் திருத்தொண்டுக்கும் குறைவு புரிவார்கள், வீணார வீணனைப்போல் நெடுங்கோளும் தண்டமுமாய் நீதிசெய்வார் - வீணார வீணன் என்பானைப் போலப் பெரிய கொலையும் தண்டனையுமாக அரசியல் புரிவர், (இதனால்) கெடும்கோபம் அல்லாமல் விளைவு உண்டோ மழை உண்டோ கேள்வி உண்டோ - (தம்மைக் கெடுக்கும்) சீற்றமேயன்றி நாட்டில் விளைவும் மழையும் கேள்விமுறையும் இருக்குமோ?, கொடுங்கோல் மன்னவன் நாட்டில் கடும்புலி வாழும் காடு குணம் என்பார் - முறைதவறிய அரசன் வாழும் நாட்டில் வாழ்வதினும் கொடிய புலி வாழும் காடு நலந்தரும் என்று அறிஞர் கூறுவர்.

(வி-ரை.) கோள் - கொலை. அரசன் ஆட்சி நன்றாயிருப்பின்
மழைபெய்து விளைவு பெருகி நாடு வளமுற்றிருக்கும். இன்றேல் இவை
அழியும் என்று உலகம் கூறும். ‘கொடும்கோல் மன்னன் வாழும் நாட்டில்
- கடும்புலி வாழும் காடு நன்றே' என்று வெற்றி வேற்கை கூறும்.
வீணன் : வீணாறு என்னும் ஆற்றை வெட்டியவன்.
இவ் உலகில் சாராயம் விற்கும் இரு அரசுகள் கேரளா , தமிழ்நாடு.
என் தமிழ்நாடே ! உன் மனம் நிம்மதி அடைந்ததோ !
எஞ்சி இருந்த மானமும் குடித்துக் குடித்துக் குடித்துக்கொண்டே மண்ணாகி போனதே !
நடை பிணமாய் வாழ்ந்தென்ன ! மனங்கேட்டவர்களே !
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !

பி கு : கூல்ட்ரிங்க்ஸ் மாதிரி டாஸ்மாக் ஆகாமல் இருந்தால் சரிதான்




இனியவை நாற்பது


இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள 'நாற்பது' எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன் ஆவார். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அந்நூலாசிரியருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.

இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப் பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.

வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

    கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே;
    தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே;
    முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச்
    சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.


தாள் - திருவடி தொழல் - வணங்குதல்

மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.

பாடல்: 01 (பிச்சை புக்காயினும்...)

    பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
    நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
    முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
    தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1


இனிது - நல்லது சேர்வு - சேர்தல்

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.
பாடல்: 02 (உடையான்...)

    உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
    மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
    நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
    தலையாகத் தான் இனிது நன்கு. 2


வழக்கு - ஈகை துறத்தல் - விடுதல்

பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. நிலையாமையை ஆராய்ந்து முற்றும் துறத்தல் நன்கு இனிது.
பாடல்: 03 (ஏவது மாறா...)

    ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;
    நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;
    ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,
    தேரின், கோள் நட்புத் திசைக்கு. 3


ஏவல் - ஏவுதல் வேளாண்மை - உழவு

சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.
பாடல்: 04 (யானையுடை...)

    யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
    ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;
    கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,
    மானம் உடையார் மதிப்பு. 4


அடை - முல்லை

அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.
பாடல்: 05 (கொல்லாமை...)

    கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,
    செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,
    எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்
    பொல்லாங்கு உரையாமை நன்கு. 5


யார் மாட்டும் - யாவரிடத்தும்

கொல்லாமை முன் இனிது. அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை இனிது. செங்கோலனாக இருப்பது இனிது. யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை மிக இனிது.
பாடல்: 06 (ஆற்றும்...)

    ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
    பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
    வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
    காப்பு அடையக் கோடல் இனிது. 6

மாண்பு - மாட்சிமை

கூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.
பாடல்: 07 (அந்தணர்...)

    அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
    பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
    தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
    கொண்டு அடையான் ஆகல் இனிது. 7

பந்தம் - உறவு ஆண்மை - வீரம்

பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.
பாடல்: 08 (ஊரும் கலிமா...)

    ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
    தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
    கார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
    ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை,
    பேதுறார், கேட்டல் இனிது. 8


கலிமா - குதிரை தார் - மாலை

வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.
பாடல்: 09 (தங்கண்...)

    தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;
    அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
    பங்கம்இல் செய்கையர் ஆகி, பரிந்து யார்க்கும்
    அன்புடையர் ஆதல் இனிது. 9


அகல் நிலா - விரிந்த நிலா காண்பு - காணுதல்

தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.
பாடல்: 10 (கடம்உண்டு...)

    கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே;
    நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;
    மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
    எனை மாண்பும் தான் இனிது நன்கு. 10


நீக்கல் - விலக்குதல் அஞ்சி - பயம்

கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.
பாடல்: 11 (அதர்...)

அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே; குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே; உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப் பெருமைபோல் பீடு உடையது இல். 11


அதர் சென்று - வழி சென்று குதர் சென்று - தவறான வழி

தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.
பாடல்: 12 (குழவிபிணி...)

    குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே;
    கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;
    மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
    திருவும், தீர்வு இன்றேல், இனிது. 12


குழவி - குழந்தை திரு - செல்வம்

குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.
பாடல்: 13 (மானம்...)

    மானம் அழிந்தபின், வாழாமை முன் இனிதே;
    தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே;
    ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை
    மானிடவர்க்கு எல்லாம் இனிது. 13


ஊனம் - குறைபாடு

மானம் அழிந்தபின் வாழாமை மிக இனிது. செல்வம் சிதையாதபடி செல்வத்திற்குள் அடங்கி வாழ்தல் இனிது. குறைபாடு இல்லாத சிறந்த செல்வத்தைப் பெற்று வாழ்வது மிக இனிதாகும்.
பாடல்: 14 (குழவி...)

    குழவி தளர் நடை காண்டல் இனிதே;
    அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
    தவினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து,
    மனன் அஞ்சான் ஆகல் இனிது. 14


தளர் நடை - தளர்ந்த நடை

குழந்தைகளது தளர்ந்த நடையைக் காணுதல் இனிது. அவர்களின் மழலைச் சொல் கேட்டல் இனிது. தீயவர்களின் சினத்தைக் கண்டபோதும் மனம் அஞ்சாமல் இருப்பது இனிது.
பாடல்: 15 (பிறன்மனை...)

    பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது ஆற்ற;
    வறன் உழக்கும் பைங் கூழ்க்கு வான் சோர்வு இனிதே;
    மற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை
    மத முழக்கம் கேட்டல் இனிது. 15


பீடு - பெருமை

பிறனுடைய மனைவியை திரும்பிப் பாராத பெருமை இனிது. நீரில்லாமல் வாடும் பசிய பயிர்களுக்கு மழை பொழிதல் இனிது. வீரத்தையுடைய அரசர்களின் அரண்மனையில் பிளிற்றொலியைக் கேட்பது இனிது.
பாடல்: 16 (கற்றார்...)

    கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;
    மிக்காரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
    எள் துணையானும் இரவாது தான் ஈதல்
    எத்துணையும் ஆற்ற இனிது. 16


ஈதல் - கொடுத்தல்

கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. அறிவின் மேம்பட்டவர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது. எவ்வளவு சிறிதாயினும் தான் இரவாது பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும் விட இனிதாகும்.
பாடல்: 17 (நட்டார்க்கு...)

    நட்டார்க்கு நல்ல செயல் இனிது; எத்துணையும்
    ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே;
    பற்பல தானியத்ததாகி, பலர் உடையும்
    மெய்த் துணையும் சேரல் இனிது. 17


நட்டார் - நண்பர்

நண்பர்களுக்கு இனியவற்றைச் செய்தல் இனிது. அதனைவிட எள் அளவும் நட்பு இல்லாதவர்களை நண்பர்களாக்கிக் கொள்வது அதனைவிட இனியது. எல்லாவகைப் பொருட்களை உடையவராய் சமயத்தில் உதவும் நண்பர்களைத் துணையாக வைத்துக் கொள்வது இனிது.
பாடல்: 18 (மன்றில்...)

    மன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே;
    தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே;
    எஞ்சா விழுச் சீர் இரு முது மக்களைக்
    கண்டு எழுதல் காலை இனிது. 18


தந்திரம் - நூல் முதுமக்கள் - அறிவுடையோர்

அறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது. அறநூல்படி வாழும் முனிவர்களின் பெருமை இனியது. தாய் தந்தையரைக் காலையில் கண்டு வணங்குதல் இனிது.
பாடல்: 19 (நட்டார்ப்...)

    நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே;
    பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே;
    முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
    தக்குழி ஈதல் இனிது. 19


பேணி - பாதுகாத்து ஈதல் - கொடுத்தல்

நட்பு கொண்டவர்களைப் பற்றி புறம் கூறாமல் இருத்தல் இனியது. சத்தியத்தை பேணிப் பாதுகாத்து வாழ்தல் மிக இனியது. பெரும் பொருளைத் தேடி அதனைத் தக்கவர்களுக்கு ஈதல் மிக இனிது.
பாடல்: 20 (சலவரை...)

    சலவரைச் சாரா விடுதல் இனிதே;
    புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
    மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
    தகுதியால் வாழ்தல் இனிது. 20


சலவரை - வஞ்சகரை ஞாலத்து - பூமியில்

வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.
பாடல்: 21 (பிறன்கை...)

    பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே;
    அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
    மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
    திறம் தெரிந்து வாழ்தல் இனிது. 21


வௌவான் - அபகரிக்காமல் மயரிகள் - அறிவிலிகள்

பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.
பாடல்: 22 (வருவாய்...)

    வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
    ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
    பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
    திரிபு இன்றி வாழ்தல் இனிது. 22


வழங்கல் - கொடுத்தல் ஊக்கம் - மனவெழுச்சி

தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.
பாடல்: 23 (காவொடு...)

    காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
    ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே;
    பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
    சூதரைச் சோர்தல் இனிது. 23


தொட்டல் - வெட்டுதல் ஆ - பசு

சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.
பாடல்: 24 (வெல்வது...)

    வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
    ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
    இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
    செய்வது செய்தல் இனிது. 24


வெகுளி - கோபம் பொறை - பொறுத்தல்

மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.
பாடல்: 25 (ஐவாய...)

    ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;
    கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;
    நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
    புல்லா விடுதல் இனிது. 25


வேட்கை - ஆசை புல்லா - சேராது

ஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும் கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனியது.
பாடல்: 26 (நச்சி...)

    நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே;
    உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே;
    எத் திறத்தானும் இயைவ கரவாத
    பற்றினில் பாங்கு இனியது இல். 26


நசை - விருப்பம் பாங்கு - அன்பு

ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.
பாடல்: 27 (தானம்...)

    தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
    மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
    ஊனம் கொண்டாடார், உறுதி உடையவை
    கோள் முறையால் கோடல் இனிது. 27


ஆண்மை - பெருமை

அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.
பாடல்: 28 (ஆற்றானை...)

    ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;
    கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
    ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
    தேர்ச்சியில் தேர்வு இனியது இல். 28


ஆற்றானை - செய்யமாட்டாதவனை கூற்றம் - எமன்

ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.
பாடல்: 29 (கயவரை...)

    கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே;
    உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
    'எளியர், இவர்!' என்று இகழ்ந்து உரையாராகி,
    ஒளி பட வாழ்தல் இனிது. 29


கயவரை - கீழ்மக்களை இகழ்ந்து - அவமதித்து

கீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.
பாடல்: 30 (நன்றி...)

    நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
    மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
    'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
    நன்றியின், நன்கு இனியது இல். 30


மாண்பு - மாட்சிமை வௌவாத - அபகரியாத

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.
பாடல்: 31 (அடைந்தார்...)

    அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;
    கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
    சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
    அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது. 31


கூரா - துன்பம்

தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.
பாடல்: 32 (கற்றறிந்தார்...)

    கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே;
    பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே;
    தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப்
    பத்திமையின் பாங்கு இனியது இல். 32


தெற்றனவு - ஆராய்ந்து

கற்று அறிந்தவர்கள் உறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.
பாடல்: 33 (ஊர்முனியா...)

    ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;
    தானே மடிந்து இராத் தாளாண்மை முன் இனிதே;
    வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
    தானை தடுத்தல் இனிது. 33


தாள் - முயற்சி

ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.
பாடல்: 34 (எல்லிப்...)

    எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
    சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
    புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை
    கொள்ளா விடுதல் இனிது. 34


கேண்மை - நட்பு சோர்வு - மந்தி

இரவில் செல்லாமல் இருப்பது இனியது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.
பாடல்: 35 (ஒற்றினான்...)

    ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;
    முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
    பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல்
    வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது. 35


ஒற்று - வேவு உற்று - சமமாக

வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.
பாடல்: 36 (அவ்வித்து...)

    அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
    செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
    கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
    வவ்வார் விடுதல் இனிது. 36


அழுக்காறு - பொறாமை

மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.
பாடல்: 37 (இளமையை...)

    இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
    கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
    தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
    விடம் என்று உணர்தல் இனிது. 37


கிளைஞர் - சுற்றத்தார் பணை - மூங்கில்

தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.
பாடல்: 38 (சிற்றாள்...)

    சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
    நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
    எத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
    கற்றா உடையான் விருந்து. 38


நட்டார் - நண்பர்கள் ஆ - பசு

ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.
பாடல்: 39 (பிச்சைபுக்குண்பான்...)

    பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
    துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
    உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
    ஒற்கம் இலாமை இனிது. 39


பிளிற்றாமை - கோபம்கொள்ளாமை ஒற்கம் - மனத்தளர்ச்சி

பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.
பாடல்: 40 (பத்து...)

    பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
    வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
    பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
    கற்றலின் காழ் இனியது இல். 40


வித்து - விதை

பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.



பூதஞ்சேந்தனார்

நாற்பது வெண்பாக்கள் கொண்ட நூல்; நல்லவை இவை இவை என்று எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று பெயர். இன்று 41 வெண்பாக்கள் இருக்கின்றன. முதற்பாட்டு கடவுள் வாழ்த்து. சிவன், திருமால், நான்முகன் மூவரையும் வாழ்த்துகின்றது. இவ்வாழ்த்து பிற்காலத்தாரால் பாடிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்நூலைச் செய்த ஆசிரியர் பெயர் பூதஞ்சேந்தனார். இவர் இயற்பெயர் சேந்தனார்; இவர் தந்தை பெயர் பூதனார்; இந்தப் பூதனார் மதுரையில் வாழ்ந்தவர். இவர் தமிழ் ஆசிரியர். ஆதலால் இந் நூலாசிரியரை மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று அழைத்தனர்.

இந்நூல் வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பெற்று வாழ்வதற்கான நல்லறங்களைக் கூறுகின்றன. பெரும்பாலான வெண்பாக்களில் மூன்று செய்திகள்தாம் சொல்லப்படுகின்றன. சில சிறந்த நீதிகள் இதில் உண்டு. இவ்வெண்பாக்கள் அவ்வளவு கடினமானவையல்ல. எளிதில் பொருள் தெரிந்து கொள்ளக்கூடியவை. மோனையும், எதுகையும் அமைந்த அழகிய வெண்பாக்கள், சில பஃறொடை வெண்பாக்களும் இதில் உண்டு.

When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and Interstellar Wanderers

When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and Interstellar Wanderers When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and I...