Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Sunday 23 October 2011

ரீதி கௌளை - ஒரு அலசல் | Reethi Gowlai raga - an analysis

து 22ஆவது ‘மேளகர்த்தா’வான ‘கரஹரப்ரியா’வின் ஜன்ய ராகமாகும். (தீட்சிதர் மரபில் ‘நாரீ ரீதிகௌள’என்று பெயர்.)
உபாங்க – வக்ர ராகமான ‘ரீதி கௌள’ அதிகாலையில் பாடப் பொருத்தமானது.



பெண்பால் ராகமான இதன் ஸ்வரங்களாவன :

ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம்,பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் மற்றும் கைஷிகி நிஷாதம்

ஆரோஹணம் : ஸ க ரி க ம நி த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நிதம கமபம கரிகஸ

(ஆரோஹணத்தில் பஞ்சமம் இல்லை)


6. “கரஹரப்ரியா”

இது 22வது ‘மேளகர்த்தா’ராகமாகும்.இந்த ராகம் முன்னதாக தமிழிசை மரபில்‘செம்பாலைப் பண்’என்று
அறியப்பட்டது.இந்தஸ்தானி இசை மரபில்‘இந்துஸ்தானி காஃபி தாட்’என்றழைக்கப்படும்

இதன் ஸ்வரங்கள்:

ஷட்ஜமம்,சதுஸ்ருதி ரிஷபம் சாதாரண காந்தாரம்,சுத்த மத்யமம்,பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,கைஷிகி நிஷாதம்.

ஆரோஹணம் : ஸ ரி க ம ப த நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த ப ம க ரி ஸ

ரீதி கௌளை ராகத்தை நல்ல கூரல்  வளம் உள்ளவர்கள் மட்டுமே  பாட முடியும் . கூரல்  வளம் இல்லாதவர்கள் தப்பித்தவறி பாடினால் ஆனந்த பைரவி இராகம் வந்தாலும் வரும்  இல்லாவிடல்  ஸ்ரீ இரஞ்சனி வந்தாலும் வந்து விடும்  காரணம் ரீதிகௌளை ஆரோகணத்தில் மத்யமத்திலிருந்து நிஷாதத்திற்கு quantitate  செய்ய வேண்டும் அதாவது ஒரே தாவாக தாவ வேண்டும் hurdles race  மாதிரி இல்லையேல் பிரச்சனை.

இப்பொழுது ரீதி கௌளை இராகத்தில் உள்ள பாடல்களையும் சில கருத்துகளையும் நோக்குவோம் :

ரீதிகௌளை இராகப் பாடல்களைப் நோக்கும் முன்பு கரகரப்பிரியா இராகத்தை சற்று நோக்குவோம்:

புதிய முகம் ( ௨௦௦௯ | 2009) மலையாளம்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன்
இசை: தீபக் தேவ்



கரகப்ப்ரியா இராகத்திற்கும் ரீதி கௌளை இராகத்திற்கும் ஒரு ஸ்வரம் வித்யாசம். நானே பலமுறை இந்த வித்யாசம் தெரியாமல் கரகரப்ப்ரியவை ரீதி கௌளை என்றும் ரீதி கௌளையை கரகரப்பிரியா என்றும் கூறியுள்ளேன் !

ரீதி கௌளை இராகத்தில் அதிகப் பாடல்கள் எனக்கு தெரிந்தவரை இளையராஜா அவர்கள் படைத்துள்ளார். மேலும், இந்த இராகத்தில் திருவாளர்கள் வித்யாசாகர், ஏ.ஆர். ரகுமான் , ரவீந்திரன் மாஸ்டர், ஜேம்ஸ் வசந்தன்,சரத் மற்றும் கார்த்திக் இராஜா ஆகியோரும் சில பாடல்களை படைத்துள்ளனர்.

அப்பாடல்களை நோக்குவோம்:

ஒரு பொண்ணு ஒரு பையன் - இப்பாடல் ரீதி கௌளை இராகப் சாயலில் (ஸ்கேல்) உள்ள பாடல் திரு. கார்த்திக் இராஜாவின் இசையில்.



இசைப்புயல் ரீதி கௌளையை விட்டு விடுமா? ஏ ஆர் ரகுமான் கர்னாடக இசையைப் பெரும்பாலும் இந்த தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுப்பவர். மேற்கத்திய மற்றும் ஹிந்துஸ்தானி இசைக் கூறுகள் அதிகம் தென்படும் இவர் பாடல்களிலும் அவ்வப்போது சுத்தமான கர்னாடக இசையைக் காணலாம் as a tenuity/slenderness. முதல்வன் படத்தில் ரீதி கௌளையில் ஒரு நல்ல பாடல்

அழகான ராட்சசியே - முதல்வன் ௧௯௯௯ | 1999



என்ற அந்தப் பாடலில் 'குயிலே ஆலங்குயிலே ' என்று இழுக்கும் இடம் தான் ரீதி கௌளையை ரிஃப்ளெக்ட் செய்கிறது / தூக்கி காட்டுகிறது.

ரீதிகௌளை லேசாக ஒலித்தாலும் கண்டுபிடித்து விடலாம். தாழம்பூ வாசம் மாதிரி கூப் என்று இருக்கும். வித்யாசாகர் நல்ல கர்னாடக இசை நுணுக்கம் அறிந்தவர். தூய கர்னாடக இசையைத் தருபவர் இராஜாவை போல் !! 'தம்பி' என்ற படத்தில் ஒரு மெல்லிய ஹிந்துஸ்தானி ஜாடையில் ரீதிகௌளையைப் கொடுத்து இருப்பார். டிப்பிக்கல் வித்யாசாகர் பாணி.'காதலித்துப் பார்' என்ற இடத்தில் இராகமுத்திரை இருக்கிறது.

தீண்ட  தீண்ட - துள்ளுவதோ இளமை திருவாளர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் விஜி மனுவேல். இப்பாடல் ரீதிகௌளை இராகத்தின் சாயலில் உள்ள பாடல் அதாவது இராகத்தின் ஸ்கேல் !!!

சுடும் நிலவு....சுடாத சூரியன் ! தம்பி மற்றும் ஒரு நல்ல ரீதிகௌளை புதிய இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் இருந்து : இராகம் என்பது ஒரு சமையல் குறிப்பைப் போன்றது. என்னென்ன பொருட்களைச் சேர்க்கலாம் என்று கூறும். சமையல் குறிப்பைப் பின்பற்றி நூறு பேர் உணவு சமைத்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாய் இருக்கும். அது போலவே மெட்டுக்களும். ப்ரதொச்மி குருவாயூர் .... - சிந்தூர ரேக்ஹா இசை: சரத் பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத் இசையில் ஒண்ணாம் ராகம் பாடி - தூவான தும்பிகள் ௧௯௮௭ | 1987  அபிமன்யு ௧௯௯௦ | 1990 - ரவீந்திரன் மாஸ்டர் இசையில் கண்டு நான்..... இப்பொழுது இசை அரசன் அவர்கள் ரீதிகௌளை இராகத்தில் செதுக்கிய பாடல்களைப் காண்போம் : கவிக்குயில் ௧௯௭௭|1977 - சின்ன கண்ணன் ௧) ௨) ௩  ) ஒரு ஓடை நதியாகிறது 1983 | ௧௯௮௩ - தலையைக் குனியும் தாமரையே ௪ ) கே. விஸ்வநாத் அவர்கள் தெலுங்கில் நல்ல இசையம்சமுள்ள படங்களைத் தந்தவர். ௧௯௮௫ல்|1984 அவர் இயக்கத்தில் வந்த சிப்பிக்குள் முத்து (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்) படத்தில் ரீதிகௌளையில் இசை ஞானியும் எஸ். பி. பாலசுப்ரமணியமும் பின்னி எடுத்த 'சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப் பட்ட நாளிலே, ஜனகனின் மண்டபத்திலே மாலை ஏந்தி வந்த ஜானகியை வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க ஸ்ரீ ரா....மச்சந்த்ர முர்த்தி ,கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதா தேவியின் செல்லத்தோழிகள்.' என்று தொகையறாவாகப் (வசனத்தை இராகத்துடன் பாடுதல்) பாடியிருக்கும் இடத்தில் இராகமும் குரலும் இணைந்து கலக்கும் ஸ்வாதி முத்யம் - இராமா கனவேமிரா / இராமன் கதை கேளுங்கள்  ௫ ) மீட்டத ஒரு வீணை - பூந்தோட்டம் ௨௦௦௭ | 2007 எந்த இசை அமைப்பாளர் ரீதி கௌளைல் பாடலை தந்தாலும் எனது மதிப்பெண் மேஸ்ட்ரோ இளையராஜாவை சாரும் ! அவரைப்போல ஒருவரும் இந்த இராகத்தை செதுக்கியது இல்லை !!! இருவரை ஐந்து ரீதிகௌளை பாடல்களை தந்து உள்ளார் ஒவ்வென்றும் ஒரு சாயல் - ஒரு பரிமாணம். இசை ஞானிக்கு இப்பாடல் சமர்ப்பணம் பிற ரீதி கௌளை பாடல்கள் ( மலையாளம்) Ellupaadam [Neelamizhiyaal ] - Vidhichathum Kothichathum (Kasthoori)1982 - Ravendran Master Pon Kinaavinu - Kinginikkombu - Raveendran - 1983 Hridaya sarovaramunarnnu - Mounaraagam 1983

தீண்டாதே தீண்டாதே - பார்த்தேன் ரசித்தேன் . இசை : பரத்வாஜ்

Thursday 20 October 2011

சென்னை 368 கொஸப்பேட்ட குப்ஸாமி கவிதை

சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு

ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு



கண்குளிர சைட்டடிக்க குயின்மேரிஸு

கண்டதுமே தெரிச்சு ஓட மீனாட்சிகாலேஜு

மனுசனோட புத்திய தீட்ட கன்னிமாரா

சும்மா இருக்குறவன சுத்தல்ல வுடுற சுண்டக்கஞ்சி



சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு

ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு



காத்து வாங்க இருக்கதைய்யா மெரினா பீச்சி

மணி ஏழடிச்சா காட்டிடுமே ஏ படக்காச்சி

முண்ணூறு வருஸமான செண்ட்ஜார்ஜு கோட்ட

இன்னிக்கும் இஸ்ட்ராங்கா நிக்கிதய்யா அடிதடியோட



சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு

ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு



சாம்பார் இட்டிலி துண்ணனுமா சரவணபவன் இருக்கு

சால்னாவும் பரோட்டாவும் ரவுண்டு கட்ட முனியாண்டி விலாஸு

சைனீஸு நூடுல்ஸுக்கு இருக்குபாரு அஞ்சாறு நூடுல்ஸு ஹவுஸு

அஞ்சப்பரும் பொன்னுசாமியும் அங்கங்கே இருந்தும்

ஐய்யா கையேந்திபவன் நாஷ்தா டேஷ்ட்டு கொறையல இன்னும்



சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு

ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு



மூண்ணூத்தி அறுவத்தெட்டு வர்ஸமென்னா

உனுக்கு எண்ணூறு வர்ஸமானாலும் ஜொலிப்பு காட்டுவா

சிலுசிலுன்னு சிங்காரமா இருக்குற பொண்ணு

ஒன்னோட ரவுஸும் மவுஸும் என்னைக்குமே கொறையல கண்ணு

- கொஸப்பேட்ட குப்ஸாமி

Tuesday 18 October 2011

கூடங்குளத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தியை துவக்க ஏற்பாடு

கூடங்குளத்தில் அடுத்த மாதம் மின் உற்பத்தியை துவக்க ஏற்பாடு: அணுசக்தி கமிஷன் தலைவர்

""கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அடுத்த மாதம், மின் உற்பத்தியை துவங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அணுமின் நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடையே பிரசாரத்தை மேற்கொள்வதற்காக, ஒரு நடுநிலையான வல்லுனர் குழு, தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,'' என, அணுசக்தி கமிஷனின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையத்தில், கடந்த செப்டம்பரிலேயே மின் உற்பத்தியை துவக்கி இருக்க வேண்டும். ஆனால், அங்கு நடக்கும் போராட்டங்களால், உற்பத்தியை துவக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.போராட்டக்காரர்களின் கோரிக்கையான, "கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும்' என்பதை, மத்திய அரசால் ஏற்க இயலாது. அணுமின் நிலைய பணிகள் துவக்கப்பட்டுவிட்டதால், அதை நடுவில் கைவிட முடியாது. இதை கைவிட்டால், வேறு சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.எரிபொருள் கம்பிகளை, அணு உலையில் ஏற்றுவதற்கு மத்திய அரசின் அனுமதியை கோரியுள்ளோம்; அனுமதி கிடைத்தவுடன், மேலும் சில பணிகளை துவக்கி, அடுத்த மாதத்தில் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்

.

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பிரசாரம் செய்ய, ஒரு நடுநிலையான வல்லுனர் குழு, தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், அணுசக்தி கமிஷனின் விஞ்ஞானிகள் இடம்பெற மாட்டார்கள்.பூகம்பம், சுற்றுச்சூழல், மீன்வளத்துறை, அணு உலைகள் தொடர்பான நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழக அரசும் , தன் நிபுணர்களையும், போராட்டக் குழு உறுப்பினர்களையும் இந்த வல்லுனர் குழுவில் சேர்த்து கொள்ளலாம்.மாநில அரசு ஒப்புதல் கொடுத்த பின், இந்த வல்லுனர் குழு, கூடங்குளம் அருகில் உள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இடிந்தக்கரை கிராமத்தில், இக்குழு தனிக் கவனம் செலுத்தும்.இப்போராட்டத்தை சில கிறிஸ்துவ அமைப்புகள் வழி நடத்திச் செல்கின்றன. அவர்களிடமும் வல்லுனர் குழு பிரசாரம் செய்ய உள்ளது.இவ்வாறு பானர்ஜி கூறினார்.

Saturday 8 October 2011

சலிக்கவே சலிக்காத மனிதர் என்றல் அது இளையராஜா !!!

நன்றி: http://ragadhevan.blogspot.com/2009_10_01_archive.html
ஓவியம் நன்றி: திரு. பரணி! http://thamizhparavai.blogspot.com

இசைஞானி பற்றி சில சுவையான குறிப்புகள்:-


தேனி மாவட்டம் பண்ணபுரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்கிற ராசையா. ஜூன் 2, 1943-ல் பிறந்தார். தனது மிக இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்றவர், இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்கிறார், தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல்! ராஜாவின் முதல் படம் அன்னக்கிளி வெளியாகி 33 வருடங்களாகிறது. இந்த 33 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1000 படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிப் படங்களிலும் ராஜாவின் ஆர்மோனியத்துக்கு முக்கியப் பங்குண்டு. மலேஷியா வாசுதேவன் என்ற அற்புதமான பாடகர் தொடங்கி எத்தனையோ கலைஞர்களை, பாடலாசிரியர்களை உருவாக்கியவர் இளையராஜா. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு. ஒரு முறை இத்தாலியில் இளையராஜா நிகழ்த்திய இசை நிகழ்ச்சியில் அவர் வாசித்த 'ஒன் நோட்' இசைத் துணுக்கில் அடங்கியிருந்த நுட்பத்தைப் பார்த்து, பிரபல இசை விமர்சகர் டங்கன் கிளண்டே, "இந்த மனிதர் என்னமோ ஜாலம் செய்கிறார். அது என்னவென்றுதான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்ற விமர்சகர்களின் கண்களுக்கும் அறிவுக்கும் எட்டாததாக உள்ளது அந்த இசையின் நுட்பம்" என்று எழுதினார். இந்தியாவின் இசை விமர்சகரான சுப்புடு, "இளையராஜா வேலி தாண்டாத வெள்ளாடு மாதிரி... அவரால் இந்த இசை மரபு வேலியை ரொம்ப சேப்டியா, சுலபமா தாண்ட முடியும். பல சாகஸங்கள் செய்ய முடியும். ஆனா, இசை மரபுகளை மதிக்கிறதோட, அந்த மரபுக்குள்தான் அதிசயங்கள் நிகழ்த்தணும் என்ற வைராக்கியத்தோடு வாழும் உன்னத கலைஞர் அவர்.




சிந்து பைரவியில் 'மரிமரி நின்னே...'வை அவர் கொடுத்த அழகு, நம்ம இசை மரபு எந்த அளவு சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்கிறது என்பதற்கான அடையாளம்" என்றார். சில ஆண்டுகளுக்கு முன் திருவாசகம் ஆரட்டோரியோ ஒலித் தட்டை பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கொடுக்க இளையராஜாவை அழைத்துச் சென்றார் வைகோ. அப்போது, 'சார்... இவர்தான் எங்களின் கலாச்சாரக் குரலாக உலகெங்கும் ஒலிப்பவர்!' என்று இளையராஜாவை அறிமுகப்படுத்தினார் வைகோ. அதற்கு பிரதமர் சொன்ன பதில்: "I Know...Mr. Vaiko". எந்த விருதையும் 'வாங்காத' அல்லது விருதுக்கு வணங்காத உயர்ந்த கர்வத்துக்கு சொந்தக்காரர் இசைஞானி. தனது இசையை சர்வதேச அரங்கில் லாபி பண்ண வேண்டும் என்ற 'திறமையை' வளர்த்துக் கொள்ள இன்றுவரை முயற்சித்தவரில்லை அவர். இருந்தும் மூன்று தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார் (சாகர சங்கமம், சிந்து பைரவி மற்றும் ருத்ர வீணை). ஆனால் ஆறு முறை அவருக்கு கிடைக்க வேண்டிய விருதுகள் இறுதி நேர 'ஜூரி ஆட்டத்தில்' கிடைக்காமல் போயிருக்கின்றன (மூன்றாம் பிறை, காதல் ஓவியம், நாயகன், தேவர் மகன், காலாபாணி மற்றும் ஹே ராம்). இந்திப் படவுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் இளையராஜாவின் இசையை அப்பட்டமாகக் காப்பியடித்தே பிழைப்பை ஓட்டுகின்றனர் பல இசையமைப்பாளர்கள். பிரபல இசையமைப்பாளர் அனு மாலிக் தனது 'போல் ராதா போல்' (ஓ ப்யா ப்யா...) படங்களில் ராஜாவின் மிகப் புகழ்பெற்ற பாடல்களை அப்படியே உல்டா செய்து பெயர் வாங்கினார். அனாரி (சின்னத்தம்பி), விராசட் (தேவர் மகன்) படங்களில் அப்படியே ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்திக் கொண்டனர் பாலிவுட்டில். இந்த லிஸ்ட் ரொ...ம்ம்ம்பப் பெரியது! இதுபற்றி ஒரு முறை ராஜாவிடம் கேட்டபோது, 'விடுங்கய்யா... இதுக்காக நான் சண்டை போட ஆரம்பிச்சா, இசை அமைக்க நேரம் இருக்காது. உருவாக்கிக் கொடுக்கறது என் சுபாவம்... திருடுவது அவர்கள் சுபாவம். எதில் யாருக்கு இன்பமோ அதைத் தொடர்கிறார்கள்!," என்றார் அமைதியாக. இன்றைக்கு புதிய படங்களில் இளையராஜாவின் பிரபலமான பின்னணி இசையைப் பயன்படுத்துவதே ட்ரெண்டாகி விட்டது. சுப்பிரமணியபுரம், பசங்க, சர்வம் என பல படங்களில் 'இசை - இளையராஜா' என்று போடும் அளவுக்கு ராஜாவின் முந்தைய இசைக் கோர்வைகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். ராஜா என்ற கலைஞனின் இசை காலத்தை வென்றது என்பதை உணர்த்தும் செயலாகவே இதை பலரும் பார்க்கிறார்கள். சர்வதேச அளவில் சிம்பனி மற்றும் ஆரட்டோரியோ ஆகிய இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான் என்பது பிரிட்டன் இசை நடத்துடன் ஜான் ஸ்காட்டின் கருத்து. ராஜா இசையமைத்த சிம்பனி இசை வெளிவராததில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவது உண்மையே.




ஆனால் அதற்கான உண்மையான காரணத்தை ராஜா சொன்னால் தவிர வேறு யாருக்கும் தெரியப் போவதில்லை. இதுபற்றி ஒருமுறை அவரிடம் கேட்ட போது, 'என்றைக்கு அந்த இசை வெளிவர வேண்டும் என்று விதி இருக்கிறதோ அன்றைக்கு வந்துவிட்டுப் போகட்டும்' என்றார். அந்த சிம்பனி இசை வெளியீட்டு உரிமை ஏவிஎம் நிறுவனத்திடம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான திருவாசம் இசைக் கோர்வை, ராஜாவின் ஆரட்டோரியோ வடிவம். "ஒருவன் ஒழுக்க சீலனாக, நல்ல எண்ணம் கொண்ட மனிதனாக மாற ராஜாவின் இந்த திருவாசகம் இசைத் தொகுப்பை தினமும் காலையில் கேட்டால் போதும்" என உளமாரச் சொன்னவர் இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இசை அன்பர்கள் பலருக்கும் அவரது 'ஹவ் டு நேம் இட்', 'நத்திங் பட் விண்ட்' பேன்ற வெகு சில ஆல்பங்கள்தான் தெரியும். ஆனால் உண்மையில் 30க்கும் ,சினிமா இசை தவிர்த்த ஆல்பங்களை உருவாக்கியுள்ளார் இளையராஜா. அவற்றையெல்லாம் முழுசாகத் தொகுத்து வெளியிடும் முயற்சியும் நடக்கிறது. 'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை!' என்பது ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல கவிஞர் குல்சாரின் கருத்து. இசைஞானியை சந்திக்க விரும்புபவர்கள் முன் அனுமதி பெற்று கீழ்கண்ட விலாசத்தில் சந்திக்கலாம். இளையராஜா 38,முருகேசன் தெரு தியாகராய நகர். ராகவையா ரோடு அருகில் சென்னை-17 போன்:-+91-44- 2828 3209

Wednesday 5 October 2011

நான் அன்றி யார் வருவார் Naan Andri Yaar Varuvaar

Film: Maalai Itta Mangai (1958) [Bride who enters into wedlock]
Music: Viswanathan - Ramamurthy
CAST: T.R. Mahalingam, Mainavathy
Song: Naan Andri Yaar Varuvaar
Ragam: Abohgi & Valaji
Artists: T.R. Mahalingam, A.P. Komalam
Lyricist: Kannadasan









The song starts with a racy savour of Abhogi and is then gently nudged into Valajii later on. The charanam in my opinion completely bevvied in Valajii and then again towards the end of it hoicked / yanked back to sounding like Abhogi. Apparently there was some discussion about this song on a Television music based talent hunt some years back and the verdict was that it had both Abhogi and Valajii ragam mollified on it ( experts can confirm).




Mahalingam singing in an unusual lower sruthi. MSV-TKR are the composers. Manorama made her debut in this movie. This movie had the terrific hit song senthamizh thenmozhiyal which is a great hit even now.
Abhogi:

Aarohanam: S R2 G2 M1 D2 S
Avarohanam: S D2 M1 G2 R2 S
Valaji :

ārohaṇa : S G3 P D2 N2 S 
avarohaṇa : S N2 D2 P G3 S

The displacement of each swara in the arohanam, from its harbinger. The first swara is ‘sa’. The second swara (or) note is displaced by a ‘full tone’, i.e. two semi-tones. The third note is displaced from the second by a semi-tone. Tout de suite, the ‘m1′, is a full note away from ‘g2′. Moving on, the ‘d2′ is 2 notes away, and finally another 1.5 - 2 note gap completes the set.

When sorted as a line analysis, it looks some what like this: S R2 G2 M1 D2 S

On the contrary, the decending note also considering the voids to be fixed, the ‘panchamam’ or the ‘Pa’ swaram.


When re-arranged to a better fit, P D2 N2 S G3 P, close to definition gives, S G3 P D2 N2 S. Considering the arohanam and to complete the notations, invert the complete chronological sequence. Writing the ascending and descending notes together in a more pertinacious fashion,

Arohanam: S G3 P D2 N2 S
Avarohanam: S N2 D2 P G3 S,

The above notations are of ragam
Valaji . I deeply cerebrate this is as why roughly film songs fuddle many. When this song sounded like Valachi and people say it is Abhogi. Konja Neram Konja neram came there were claims that it is Abhogi. Hunky-dory, it is not Abhogi, because of presence of the Ni (N2), which eventually Sri Ranjani S R2 G2 M1 D2 N2 S .

My mind was saying it is not as said by many and probably might be Ragam Valachi, with a some stray notes. I hashed out with some musician friends on this. corollary Sri Ranjani ragam can be similar to another ragam that I recently stumbled upon when I was browsing through some sites .

Sri Ranjani:

Arohanam: S R2 G2 M1 D2 N2 S
Avarohanam: S N2 D2 M1 G2 R2 S

Applying the similar psychoanalysis, Sri Ranjani breaks down to S R2 G2 M1 D2 N2 S. Further, the Pa as the broach of the chronological sequence, we arrive at the following set of notes: P D2 N2 S G3 M1P. Re-arranging we get, S G3 M1 P D2 N2 S. I bumbled on a ragam called Pravriti a Chakravaham derivative.

Pravriti:

Arohanam: S G3 M1 P D2 N2 S
Avarohanam: S N2 D2 P M1 G3 S

Chakravaham:

Arohanam: S R1 G3 M1 P D2 N2 S
Avarohanam : S N2 D2 P M1 G3 R1 S

However, film music is that the composers might had a totally different notation. this song Naan andri yaar varuvar meticulously follows the grammar of the ragas. A.P. Komalam had indeed said in a TV programme the song is a Abogi and 
Valaji blend.

Being a novice in Carnatic and use only sounds to find the raga, these points were compiled with help of my musician friend whose help I have to commend!

Monday 27 June 2011

இந்திய தேசிய கவி - பாரதியார் ஆத்திச்சூடி


காப்பு - பரம்பொருள் வாழ்த்து
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்தல் ஒழி
12. ஔடதம் குறை
13. கற்றது ஒழுகு
14. காலம் அழியேல்
15. கிளைபல தாங்கேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
17. குன்றென நிமிர்ந்து நில்
18. கூடித் தொழில் செய்
19. கெடுப்பது சோர்வு
20. கேட்டிலும் துணிந்து நில்
21. கைத்தொழில் போற்று
22. கொடுமையை எதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கல்வியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்
26. சாவதற்கு அஞ்சேல்
27. சிதையா நெஞ்சு கொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
30. சூரரைப் போற்று
31. செய்வது துணிந்து செய்
32. சேர்க்கை அழியேல்
33. சைகையில் பொருளுணர்
34. சொல்வது தெளிந்து சொல்
35. சோதிடந்தனை இகழ்
36. சௌரியம் தவ§Èல்
37. ஞமலிபோல் வாழேல்
38. »¡Â¢Ú §À¡üÚ
39. ஞிமிரென இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
41. ஞேயம் காத்தல் செய்
42. தன்மை இழவேல்
43. தாழ்ந்து நடவேல்
44. திருவினை வென்று வாழ்
45. தீயோர்க்கு அஞ்சேல்
46. துன்பம் மறந்திடு
47. தூற்றுதல் ஒழி
48. தெய்வம் நீ என்று உணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வு செய்
51. தொன்மைக்கு அஞ்சேல்
52. தோல்வியில் கலங்கேல்
53. தவத்தினை நிதம்புரி
54. நன்று கருது
55. நாளெல்லாம் வினை செய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநூல் பயில்
58. நுனியளவு செல்
59. நூலினைப் பகுந்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
61. நேர்ப்படப் பேசு
62. நையப் புடை
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
65. பணத்தினை பெருக்கு
66. பாட்டினில் அன்பு செய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடம் கொடேல்
69. புதியன விரும்பு
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிது கொள்
72. பேய்களுக்கு அஞ்சேல்
73. பொய்ம்மை இகழ்
74. போர்த்தொழில் பழகு
75. மந்திரம் வலிமை
76. மானம் போற்று
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமாறு உணர்ந்து கொள்
79. முனையிலே முகத்து நில்
80. மூப்பினுக்கு இடங்கொடேல்
81. மெல்லத் தெரிந்து சொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவம் செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந்தனைக் கொல்
86. யவனர்போல் முயற்சிகொள்
87. யாவரையும் மதித்து வாழ்
88. யௌவனம் காத்தல் செய்
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜஸம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசிபல வென்றுணர்
93. ரூபம் செம்மை செய்
94. ரேகையில் கனிகொள்
95. ரோதனம் தவிர்
96. ரௌத்திரம் பழகு
97. லவம்பல வெள்ளமாம்
98. லாவகம் பயிற்சி செய்
99. லீலை இவ்வுலகு
100. உறுத்தரை இகழ்
101. உலோக நூல் கற்றுணர்
102. லௌகிகம் ஆற்று
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூல் பயிற்சிகொள்ள
105. விதையினைத் தெரிந்திடு
106. வீரியம் பெருக்கு
107. வெடிப்புறப் பேசு
108. வேதம் புதுமை செய்
109. வையத் தலைமைகொள்
110.வௌவுதல் நீக்கு


Sunday 26 June 2011

தமிழ்ப் புலவி - ஔவையாரின் கொன்றை வேந்தன்




கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.



உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.



ககர வருக்கம்

14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.



சகர வருக்கம்

26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.



தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.




நகர வருக்கம்

48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.



பகர வருக்கம்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.



மகர வருக்கம்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.




வகர வருக்கம்

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.