Labels

About Me (1) Astronomy (27) General (21) பொது (28)
Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday 27 February 2024

The Indian Astronauts

The Bharatiya Prime Minister Narendra Damodar Das

 

Modi inaugurates three space projects startup. Ganganyan orbital mission will be the first. 

1. Indian Space Station 
2. Indian landing on the moon
3. Ganganyan orbital mission.

Indian Astronauts will be called ' Vyomanauts'

A. Vyomanaut 1. GROUP CAPTAIN PRASANT NAIR

B. Vyomanaut 2. GROUP CAPTAIN AJIT KRISHNAN

C. Vyomanaut 3. GROUP CAPTAIN ANGAD PRATAP

D. Vyomanaut 4. WING COMMANDER SHUBANSHU SHUKLA

They will be going to space by 2025 end from Bharat. 

Sunday 14 March 2021

Difference between an Air-Conditioner and an Air-Cooler

I am seeing lots of Air Coolers advertisements for many years. Many outlets are also selling them without giving an important reason. They're actually hiding those for their sales. 

 

Air Coolers are humidifiers technically. They induce humidity in dry areas like those places in interior like Salem, Vellore, Nagpur, Delhi etc. Where room AC won't help while a central AC can help. Interior areas have very less humidity, so they’ll feel hot. When we induce humidity, we feel a cooling effect as humidity goes up.

 

Whereas in coastal areas, air conditioners will help and work as they dehumidify the air. Because the coastal areas have lots of humidity, it needs to be reduced. When reduced, we feel a cooling effect as AC will also suck moisture on your skin. 

 

While a central AC is a different animal. It is a hybrid of Air cooler and an air-conditioner. 

 

One thing, if you have low or high blood pressure, have cardiac issues, please be careful when you come out of an AC room. Temperature difference between inside and outside during peak summer will be drastic. It will take time for your body to adjust. That gap may kill you as changes/ shift will be sudden & extreme and body will try to adjust by trying to rush blood on emergency to skin and brain. But it can't do that instantly. So heart is put onto maximum strain and it may lead to cardiac arrest or even a brain stroke. 

 

In 2000/2001 I experienced that physically. I was shopping in Spencer's. Mall was 22° C and immediate outside temperature was 43° C. A difference of almost 21° C, my body struggled to adjust and I was about to get knocked down unconscious. 

 

Especially people with comorbidities, aged should be careful in an air-conditioned environment. Same effect may be felt in reverse during winters.

 

The Air Conditioners maintain an ambient temperature of 20 to 24° C. During winters, many areas experience colder temperatures, the room temperature will be pretty warm and outside temperature will be cold. This difference in temperature may also induce similar health issues I marked above.   

 

In French the Air Conditioner is called CLIMATISEUR & for Air Coolers REFROIDISSEUR D’AIR which says their original intended usage and purpose.

Monday 3 December 2018

Ilaiyaraaja royalty issue

Research post by Mr. Vvbala Bala on the Ilaiyaraaja royalty issue. The contents reproduced with due credits. Please don't copy w/o credits

இது ஒரு மீள் பதிவு. சென்ற வருடம் எஸ்பிபி அவர்களுக்கும் இளையராஜா அவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் போது எழுதப்பட்டது. இப்பொழுது மறுபடியும் ராயல்டி பிரச்சனை. இன்னும் எத்தனை முறை இந்த பதிவை மீள வேண்டுமோ தெரியவில்லை.
இளையராஜாவும் உரிமையும்
****************************
நேற்றிலிருந்து பலர் இதை பற்றி எழுதி விட்டார்கள்.
இருந்தாலும் நான் என் கருத்தை கூறுவது அவசியம் என்று நினைக்கிறேன்.
ராஜா அவர்களின் இசை உரிமை சார்ந்த வழக்குகளின் போக்கை தொடர்ந்து கவனித்து வருபவன், வழக்கறிஞன்,இசையில் ஈடுபாடு உள்ளவன், இசைக்கருவிகள் வாசிப்பதோடு இல்லாமல் இசைக்குழுமத்தையும் நடத்திய அனுபவம் உள்ளவன், பல இசைக்குழுக்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதால் இந்த நினைப்பு.

பெரும்பாலான கருத்துக்கள் தவறான புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டவை..
இந்த விவகாரத்தில் பலர் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

1. ராஜா பாலுவின் நண்பரில்லையா, அவர் இப்படி செய்திருக்கலாமா? இது துரோகமில்லையா?

2. ராஜா கர்நாடக மும்மூர்த்திகளுக்கு என்ன ராயல்டி கொடுத்தார்?

3. ராஜா காப்பி அடித்ததில்லையா? அவர் அப்போது காப்பி அடித்த கலைஞர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா?

4. ராஜாவுக்கு ஆணவம் அதிகம். வயதாகி விட்டதால் மூளை மழுங்கி விட்டது இத்யாதிகள்.

5. ராஜா தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி கொண்டுதானே இசை அமைத்தார். அப்போது அவருக்கு எப்படி உரிமை இருக்கும்?

6.MSV, KVM போன்றோர் இப்படி கேட்கவில்லையே. இவருக்கு மட்டும் ஏன் பேராசை?

7. பாடலை பாடியதால் பாடகருக்கு பாடலில் உரிமை இல்லையா? SPB வழக்கு போட்டால் ராஜா டங்குவார் கிழிஞ்சுடும் போன்றவை.

இவை எல்லாவற்றிற்கும் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இதில் பல கேள்விகள் நம் மக்களின் அறிவுக்குறைபாட்டையே பறைசாற்றுகின்றன. இந்த ஒரு விவகாரத்தில் தர்க்கபூர்வமான பதில்களை கூறுவதின் மூலம் தமிழ் சூழலில் ஒரு அறிவுபெருக்கத்தை ஏற்படுத்தி விட முடியாது என்பது ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற பல விஷயங்களில் பொதுக்கருத்தாக்கங்களை பார்த்து நொந்து போன நான் கொண்ட விரக்தியான முடிவு.

அதனால் ஒரு சில விஷயங்களுக்கு மட்டும் பதில் கூறுகிறேன். மற்றவைகளுக்கு ஒரு சில வரிகள் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.
மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதில் கூறுவதற்கு முன்னால் ஒரு சில விஷயங்களை கூறிவிடுகிறேன். நம் ஊரில் IPRS என்று ஒரு அமைப்பு இருக்கிறது. indian performing Rights society என்ற இந்த அமைப்பு எங்கெல்லாம் கலை நிகழ்ச்சிகள் தொழில் முறையில் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் இருந்து ஒரு தொகையை வசூலித்து அதை மொத்தமாக வருடத்திற்கு ஒரு முறை சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு அவர்கள் பங்கை சேர்ப்பிப்பதர்க்காக ஏற்படுத்தப்பட்டது.

இதில் இருந்தே புரிந்திருக்கும் படைப்பாளிகளே இதற்கு தகுதியானவர்கள் என்று. பணம் போடும் தாயரிப்பாளர்கள் அல்ல. அவர்களின் உரிமை படத்தை தியேட்டரில் வெளியிட மற்றும் பல நவீன ஊடகங்களில் வெளியிட மட்டுமே. இசையை பொறுத்தவரை திரையிடலை தவிர ஒலித்தகடு விற்பனை, காஸட் விற்பனை, Radio மற்றும் TV சானல்களில் ஒளி/ஒலிபரப்பு, போன்றவற்றிற்கான உரிமை இதில் அடங்காது. பெரும்பாலும் அதற்கென தனி ஒப்பந்தங்கள் போடப்படும்.

ராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் இத்தகைய உரிமையையும் படத்தின் தயாரிப்பாளருக்கே கொடுத்திருக்கலாம் அல்லது அவை இசைத்தட்டு வெளியிடும் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம். ராஜா வந்த பிறகு நிலைமை வேறு. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக வானொலியில் மட்டுமே பாட்டு கேட்டு கொண்டிருந்த நாம் நமக்கு பிடித்த பாடல்களை காசட்டில் வீட்டில் டேப் ரிக்கார்டரில் கேட்க்கும் வசதி வந்தது இக்காலத்தில் தான்.

அதற்க்கு முன்பு இசைத்தட்டுக்கள் தான். அவற்றை பெரும்பாலும் சவுண்ட் சர்வீஸ் எனப்படும் ஒலிப்பெருக்கி வாடகைகடைகள்தான் வாங்கும். ஹோட்டல்களும் க்ளப்களும் கூட உண்டு என்றாலும் எண்ணிக்கை குறைவு. ஆகவே அவற்றிற்கு என பெரிய வியாபார தளம் இருக்கவில்லை, அவர்களும் (அக்கால இசை அமைப்பாளர்கள்) அது குறித்து பெரிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. IPRS அமைப்பு (1969) இந்த காலகட்டத்தில் தான் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு படைப்புக்களில் உரிமை உள்ளவர்களுக்கு எந்த விதத்திலும் அவை பயன்படுத்தப்படும்போது பலன் அளிக்கும் விதத்தில் செயல்படவில்லை.

அங்கத்தினர்கள் பலர் இதில் மனக்குறை கொண்டிருந்தார்கள். இந்த அமைப்பு தன் நோக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் செயல்படுவதில்லை என்று கூறி அங்கத்தினர்களை் ஒன்று கூட்டி இசை அமைப்பாளர் MBஸ்ரீநிவாசன் என்பவரால் முழுவதுமாக கட்டுப்பாடுக்குள் எடுக்கபட்டது இந்த அமைப்பு. இவர் ஒரு இடதுசாரி, Trade unionist. அதன் பிறகு இதன் செயல்பாடு மாறியதா என்றால் இல்லை. ஆனால் எங்கெல்லாம் கச்சேரி அது மேற்கத்திய இசை நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, திரை இசை பாடல்களை இசைக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அங்கு சென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர்களை சந்தித்து என்னென்ன பாடல்களை பாட போகிறீர்கள் என்று கேட்டு அதற்கு ஒரு தொகையை கூறி வசூல் செய்து விட்டு வந்து விடுவார்கள். தொகை நிகழ்ச்சியின் தன்மை அது நடக்கும் இடம் இவற்றிற்கு ஏற்ப மாறும். இந்த தொகையை அவர்கள் சம்பந்தப்பட்ட கலைஞர் களுக்கு ஒழுங்காக கொடுப்பதில்லை என்பதே ராஜாவின் குற்றச்சாட்டு.

அதற்காகவே அவர் வழக்கையும் போட்டார். அதை தவிர தனக்கு ராயல்டி தராமல், மேலும் ஒப்புக்கொண்ட தொகையை முழுவதுமாக குடுக்காத ஒப்பந்ததாரர்கள் மேலும் அவர் வழக்கு போட்டார். இதில் உயர்ந்நீதிமன்றதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. அதன் பிறகே அவர் ராயல்டியை எனக்கு தந்து விட்டு நீங்கள் நிகழ்ச்சியை நடத்திகொள்ளுங்கள் என்றார். அதை தவறாக புரிந்து கொண்ட பல லைட் ம்யூசிக் குழுக்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பினர். தங்கள் வாழ்க்கையே அவரால்தான் அமைந்தது என்பதை மறந்து. ஆனால் அவரோ டிக்கட் போட்டு கமர்ஷியலாக நடத்தப்படும் நிகழ்சிகளுக்கே இது பொருந்தும் என்று விளக்கம் கொடுத்தார். கொதித்தவர்கள் தணிந்தனர். இதுதான் பின்னணி.

இந்த IPRS என்ற அமைப்பு பல கோடி ரூபாய்களை கலைஞர்களுக்கான உரிமை பணம் என்று கூறு வசூல் செய்து விட்டு அதில் இருந்து சொற்ப தொகையையே கொடுத்து வருகிறது என்பது பல படைப்பாளிகளின் மனக்குமுறல்.

இடதுசாரிகள் ஒரு அமைப்பை கையிலெடுத்தால் என்ன செய்வார்கள் என்று தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது. ஆனால் கலைஞர்களுக்கு இடது வலது என்ற பேதமெல்லாம் தெரியாது. அவர்கள் உலகம் சிறியது. அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பதால் அவர்கள் இதை குறித்து கேள்வி எழுப்பவில்லை. முதன்முதலில் IPRS அமைப்பு படைப்பாளிகளுக்கு என்று கூறி வசூல் செய்யும் பணத்தை முறையாக அவர்களிடம் கொடுப்பதில்லை, இந்த பணத்தை கொண்டு அவர்கள் பல செலவுகளை செய்கிறார்கள். நிர்வாக செலவுகள் என்று அவர்கள் கூறும் கணக்கு ஒப்புகொள்ள முடியாத அளவு அதிகமாக இருக்கின்றது என்று கூறி எதிர்த்தவர் ராஜா. ஒரு உதாரணதிற்கு இந்த புள்ளிிவிவரத்தை பாருங்கள்.
கடந்த ஆண்டு IPRS அமைப்பு licence feeஎன்று வசூல் செய்த தொகை கிட்டத்தட்ட 35கோடி ரூபாய்கள்.

 அதில் அவர்கள் ராயல்டியாக கலைஞர் களுக்கு கொடுத்த தொகை கிட்டத்தட்ட ஆறரை கோடி. மீதம் எல்லாம் அந்த அமைப்பின் டைரக்டர்களின் fee, மற்றும் இதர நிர்வாக செலவுகள். இதன் லட்சணம் இப்போதே உங்களுக்கு புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். புரியவில்லை என்றால் தொடர்ந்து படிக்காதீர்கள்.

இத்தகைய சூழலில்தான் ராஜா இந்த அமைப்பிடம் நீங்கள் ராயல்டி தொகையை கொடுக்காதீர்கள், மாறாக என்னிடமே நேரடியாக கொடுத்து விடுங்கள் என்று கூறினார். இதில் என்ன தவறு இருக்கிறது ?
இதுதான் இந்த விவகாரத்தின் பின்புலம்.
இப்போது சமூக வலைதளங்களில் தொடுக்கப்படும் கேள்விகளுக்கு வருவோம்.

1. ராஜா பாலுவின் நண்பரில்லையா, அவர் இப்படி செய்திருக்கலாமா? இது துரோகமில்லையா?
இதில் நட்பு, துரோகம் எல்லாம் எங்கு வருகின்றது? தான் சம்பாதிக்கும்போது அதற்கு காரணமான தன் நண்பனிடம் அனுமதியோ அல்லது அதற்கான ராயல்டியோ கொடுத்து விட்டால் தீர்ந்தது பிரச்சினை. ராஜா அவருக்கு பணம் எதுவும் பெறாமலேயே கூட அனுமதி கொடுத்துவிடலாம். ஆனால் அனுமதி கேட்கபடாமல் அவை பயன்படுத்தபட்டால் அதுவே முன்னுதாரணமாக கொண்டு பல நிகழ்வுகளுக்கு காரணம் ஆகும்.

2. ராஜா கர்நாடக மும்மூர்த்திகளுக்கு என்ன ராயல்டி கொடுத்தார்?
இது காப்பிரைட் சட்டத்தை பற்றிய விஷயஞானம் எதுவும் இல்லாமல் எழுப்பப்படும் பாமரத்தனமான கேள்வி. நீங்கள் காப்புரிமையை பதிவு செய்தாலே அது குறிப்பிட்ட காலத்துக்குத்தான் செல்லுபடியாகும்.பிறகு அது நீட்டிக்கப்பட வேண்டும். அதுவும் அறுவது ஆண்டுகளுக்குத்தான். அதன் பிறகு அவை பொதுவுடமைதான். சங்கீத மும்மூர்த்திகளின் படைப்புகள் படைப்புரிமை பெறப்படாதவை. அது வேற காலகட்டம். சங்கீத மும்மூர்த்திகள் பற்றி கேள்வி எழுப்பும் நபர்கள் அவர்களுக்கு காலத்தால் மூத்தவர்களான பண்ணிசை மும்மூர்த்திகள் எனப்படும் அருணாச்சல கவி, முத்துத்தாண்டவர்,மாரிமுத்தா பிள்ளை பற்றி எதுவும் பேசுவதில்லையே ஏன்? அவர்களுக்கு ராயல்டி தரப்பட வேண்டாமா?

3. ராஜா காப்பி அடித்ததில்லையா? அவர் அப்போது காப்பி அடித்த கலைஞர்களுக்கு ராயல்டி கொடுத்தாரா?
இது மறுபடியும் காப்புரிமை சட்டம் பற்றிய ஞானம் மற்றும் இசை படைப்புரிமை பற்றிய போதிய தகவல் ஞானம் இல்லாமையால் எழுப்பப்படும் கேள்வி. காப்புரிமை சட்டம் ஒரு படைப்பை அதற்கு முந்தய வேறொரு படைப்பை தழுவியது என்று கூற அதில் Chord progressions, Rhythm pattern மற்றும் lead arrangements ஆகியவை substantialலாக முந்தையதை ஒத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த விவரம் ரொம்பவும் தெளிவாக அதாவது எழுத்தென்றால் இத்தனை வரிகள், இசையென்றால் இதனை வினாடிகள் என்று கூறாமல் கொஞ்சம் குழப்பமாக இருப்பதால் உலகெங்கும் இந்த விஷயத்தை ஒட்டியே பல வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த substantial similarities குறித்து பல வழக்குகள் நடந்து இருந்தாலும் ஒரு பிரபல வழக்கை உங்களுக்கு சொல்கிறேன்.

பிரபல பாப் பாடகர் Roy Orbison இயற்றிய Pretty womenஎன்ற பாடலை Richard Gere, Julia Roberts நடித்த Pretty womenபடத்தில் பயன்படுத்தி இருந்தனர். அதற்கு வழக்கு போடப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அதனை fair use என்று கூறி படத்தாயரிப்பாளருக்கு( உரிமம் அவரிடம் இருந்ததால்) சாதகமான தீர்ப்பை கொடுத்தது. இரண்டு பாடலையும் கேட்டவர்களுக்கு இரண்டாவது பாடல் எப்படி அந்த legality யை கடந்தது என்பது புரியும். எனக்கு தெரிந்த வரை ராஜா அன்றைய காலகட்டத்தில் மிக பிரபலமாக இருந்த சில பாடல்களை (சில என்றால் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்துதான் இருக்கும்,) அடியொற்றி ஆனால் அதேநேரம் அவற்றை indianise பண்ணி இசைத்திருக்கிறார். ( கனவு காணும் வாழ்க்கை யாவும் பாடல் இதில் சேராது, அது உரிமம் வாங்கி பண்ணப்பட்டது) இதை inspiration என்று கூறலாம். அவரை பிடிக்காதவர்கள் இதை காப்பி என்றும் கூறலாம். இரண்டிலுமே கொஞ்சம் உண்மையும் நெறைய மனச்சாய்வுமே இருக்கும்.

4. ராஜாவுக்கு ஆணவம் அதிகம். வயதாகி விட்டதால் மூளை மழுங்கி விட்டது இத்யாதிகள்.....!!
இதுபோன்ற வெறுப்பு உமிழ்தல்களுக்கு பதில் தேவை இல்லைதான் என்றாலும் ஓரிரு வரிகள் கூறுவேன் என்று கூறிய காரணத்தால் இதை எழுதுகிறேன். ராஜாவுக்கு ஆணவம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் நமக்கு என்ன? அதை பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் அவருடன் இருப்பவர்கள். நாமல்ல. ஆணவம் இல்லாத நாம் ஆணவம் கொண்ட அவர் சாதித்ததில் நூறில் ஒரு சதவிகிதமாவது சாதித்திருகிறோமா என்று கேட்டுகொள்வோம். இல்லையென்றால் அத்தகைய ஆணவத்தை நமக்கும் தர இறைவனை வேண்டுவோம். அப்படியாவது எதாவது உருப்படியாக செய்ய முடிகிறதா என்று பார்ப்போம். ஆணவம் கொண்ட மனிதர் MSV அவர்களின் குடும்பத்திற்கு என ஒரு நிகழ்ச்சி மூலம் ஒரு கணிசமான தொகையை வசூலித்து கொடுத்தது இத்தகையவர்கள் மனதில் என்றும் நினைவில் இருக்க வேண்டுகிறேன். அத்தகைய ஒரு நிகழ்வு அதற்க்கு முன்பும் பின்பும் திரைத்துறையில் நடந்ததில்லை.

5. ராஜா தயாரிப்பாளரிடம் பணம் வாங்கி கொண்டுதானே இசை அமைத்தார். அப்போது அவருக்கு எப்படி உரிமை இருக்கும்?
ஒரு காலத்தில் இத்தகை இசை உரிமைகள் இசைதட்டை வெளியிடும் நிறுவனங்கள் தாங்களே வைத்து கொண்டிருந்தன. அவர்கள் பணம் ஒழுங்காக கொடுப்பதில்லை என்ற காரணத்தினால்தான் ராஜா தன் நண்பரை கொண்டு echo என்ற இசை வெளியிடும் நிறுவனத்தை ஆரம்பித்தார் என்று செய்தி. ஆனால் அதிலும் பிரச்சினை ஏற்பட்டு பிறகு ராஜா காசட்ஸ், பிறகு வேறொரு நிறுவனம் என்று பல ஏற்ற இறக்கங்கள். ஆனால் உயர்நீதிமன்றம் ராஜவிடமே உரிமை இருப்பதாக கூறிய தீர்ப்பில் இடைக்கால தடை எதவும் மேல்முறையீட்டில் வழங்க படவில்லை என அறிகிறேன். அதானாலேயே அவர் தன் Attorney மூலமாக இத்தகைய நோட்டீஸ்களை அனுப்புகிறார். உரிமை இல்லாத விஷயத்தில் உரிமை கோருமளவுக்கு அவர் முட்டாளல்ல என்பதை நாம் நினைவில் இருத்த வேண்டும்.
ஆனால் இந்த விவகாரங்களில் பல ஆண்டுகளாக அவர் தவறாக வழிநடத்தப்டுகிராரோ என்ற ஐயம் எனக்கு உண்டு. ஆனால் அதனால் அவர் இப்போது கோரும் உரிமை தவறு எண்டு ஆகி விடாது.

6.MSV, KVM போன்றோர் இப்படி கேட்கவில்லையே. இவருக்கு மட்டும் ஏன் பேராசை?
இதற்கு ஏற்கனவே பதில் கூறியாகி விட்டது என்று நினைக்கிறேன்.

7. பாடலை பாடியதால் பாடகருக்கு பாடலில் உரிமை இல்லையா? SPB வழக்கு போட்டால் ராஜா டங்குவார் கிழிஞ்சுடும் போன்றவை.
காப்புரிமை சட்டம் கீழ்கண்டவாறு கூறுகிறது,
AUTHORSHIP AND OWNERSHIP
Whose rights are protected by copyright?
Copyright protects the rights of authors, i.e., creators of intellectual property in the form of literary, musical, dramatic and artistic works and cinematograph films and sound recordings.
Who is the first owner of copyright in a work?
Ordinarily the author is the first owner of copyright in a work.
Who is an author?
In the case of a literary or dramatic work the author, i.e., the person who creates the work.
In the case of a musical work, the composer.
link: http://copyright.gov.in/documents/handbook.html
இதன் அடிப்படையில் வைரமுத்து பாடல்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வரும்போது அவர் author, ஆனால் அதுவே இசையுடன் கூட வரும்போது ராஜா தான் author. பாடகர்களுக்கும் இது பொருந்தும்.
பின்னுரை:
************
எனக்கும் ஒரு ராஜா ரசிகனாக அவர் சக இசைக்கலைஞர்களை அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும், இன்றைய இளம் இசை அமைப்பாளர்களை பாராட்டி பேச வேண்டும், ரஹ்மானுக்கு நடந்த ஆஸ்கர் பாராட்டு விழாவில் இசை சம்பந்தமாக பேசி விட்டு போகாமல் ரஹ்மானை இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்திருக்கலாம் என்றெல்லாம் சீரியல் பார்க்கும் பெண்களை போல உணர்ச்சி பூர்வமான அல்ப ஆசைகள் உண்டுதான்.
ஆனால் அதே நேரம் அவரை அவராக புரிந்து கொண்டு ஏற்றுகொள்வதுதான் யதார்த்தம். நாம் விருப்பும்படிஎல்லாம் நாம் இருப்போம். மற்றபடி அவரின் இசையை ரசிப்போம். இப்படிப்பட்ட ஒரு யுக கலைஞனுக்கு நாம் செலுத்த கூடிய நன்றி, அவருடைய இசையை காசு கொடுத்து வாங்குவது. அவர் மீது சேற்றை வாரி வீசாமல் இருப்பது.

Monday 19 May 2014

இசைக்கூறுகள் : மேளகர்த்தா ராகங்கள்

எல்லாவிதமான ராகங்களும் ஜன்ய (தாய்) ராகங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஹிந்துஸ்தானி இசை பாணியில் இதை ‘தாட்’ எனக் கூறுவர். இந்த ‘தாட்’ களிலிருந்து பலவிதமான ராக அமைப்புக்களை ஹிந்துஸ்தானி இசை பெற்றுள்ளது. மொத்தம் பத்துவகையான தாட்களே இருந்தாலும், நம் கர்நாடக இசையில் 72 தாய் ராகங்கள் (மேளகர்த்தா ராகங்கள்) இருக்கின்றன.

அடிப்படையில் ஸ்வர வரிசையின் பல வடிவப் பிணைப்புகளே இந்த மேளகர்த்தா ராகங்களாகும். இந்த மேளகர்த்தா ராக சூத்திரத்தை அறியுமுன், நாம் சில அடிப்படைகளை நிறுவ வேண்டும். ஸ்வர வரிசைகளில் ஏன் ஏழு ஸ்வரங்களே இருக்கின்றன என்பது பல இசை வல்லுனர்களைக் குழப்பியபடியே உள்ளது. இதற்கான காரணத்தை நவீன கணிதம் மற்றும் இயற்பியல் சார்ந்த அலைக் கோட்பாடுகளின் (wave theory) படி ஆராய முடியும். ஆனாலும், பண்டைய காலத்தில் இதற்கான அடிப்படையை எப்படிக் கண்டடைந்தார்கள் என்பது இன்றளவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

ஸ்வரங்களின் ஒலியை குறிப்பிட்ட நுண்ணலைகளாக (அலைவரிசை) பிரிக்க முடியும். இயற்பியலில் மனித காதுகளால் வித்தியாசத்தை உணரக்கூடிய அலைவரிசைகள் என்று ஒரு பாகுபாடு உள்ளது. நம்மால் கேட்கக்கூடிய அலைவரிசை 16 ஹெர்ட்ஸ் (Hz) முதல் 16, 384 ஹெர்ட்ஸ் வரை மட்டுமே. இதற்குள்ளாகவே நம்மால் ஒலியை உணர்ந்து, பகுக்க முடியும். குறிப்பாக 240 ஹெர்ட்ஸ் முதல் நம் காதுகளால் அலைவரிசை மாற்றங்களை நன்றாக உணர முடியுமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக, 240 ஹெர்ஸ் என்பதை நம்முடைய முதல் ஒலிக்கான அலைவரிசையாகக் கணக்கிடலாம். இதன் மூலம் ஹார்மானிக்ஸ் (Harmonics) எனப்படும் மற்ற அலைவரிசைகளைக் கணக்கிடமுடியும்.

இயற்பியலின் படி ஒவ்வொரு அலைவரிசையும் பலதரப்பட்ட ஹார்மானிக்ஸ்களைக்கொண்டுள்ளது. இவை அனைத்தையும் நம்மால் உணர முடியாது. Fourier Series எனப்படும் கணித இயலின் படி இதைக் கண்டறிய முடியும். ஆனால், நம் காதுகளால் இந்த அனைத்து விதமான ஒலிகளின் அலைவரிசையின் வித்தியாசத்தை உணர முடியாது. நம் காதுகள் ஒலியை மற்ற ஒலிகளோடு ஒப்பிடும்போது அதன் அலைவரிசை மூலமே வித்தியாசப்படுத்த முடியும். ஒரு ஒலியமைப்பானது மற்றொன்றைவிட இரு மடங்கு அதிகமான அலைவரிசையில் இருக்கும்போது நம் காதுகளுக்கு ஒன்றாகவே இருக்கும். இதனாலேயே நாம் Octaves எனக் கூறுவது அடிப்படை அலைவரிசைக்கும் அதைவிட இரு மடங்கு அதிகமாக இருக்கும் அலைவரிசைக்கும் இடையே இருக்கும் ஒலிகளே ஆகும்.

அதாவது – 240 ஹெர்ட்ஸ் முதல் 480 ஹெர்ட்ஸ் வரை.

நாம் முன்னரே பார்த்த படி, நம் காதுகளால் வித்தியாசத்தை உணரக்கூடிய ஒலியமைப்புகள் harmonic series இல் அமைவதாய் இருக்கும். 240க்கும அடுத்த ஒலிநிலை இருப்பது Geometric progression என்ற விதிப்படி வகுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ச முதல் நி வரை இருக்கும் ஒலியமைப்பு இவ்விதமாக அமைகிறது:

ச ரி க ம ப த நி ச: 240 256 300 320 360 384 450 480



கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள்

சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் பின்வரும் பாடல் உள்ளது -



‘ச ரி க ம ப த நி யென்று ஏழெழுத்தால் தானம்

வரிபரந்த கண்ணினாய் வைத்துத் – தெரிவரிய

ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்

சூழ்முதலாம் சுத்தத் துளை’

ஏழு சுரங்களுக்கு தமிழிசையில் போடப்பட்ட நமக்கு கிடைத்த முதல் வாக்கியங்கள் இவையே. ச-ப வரிசையை குரல்-இளி என தமிழிசையில் குறிப்பிட்டு வந்துள்ளனர்.



அகநிலைக்குரிய நரம்பின திரட்டி

நிறை, குறை கிழமை பெறுமென மொழிப.

மேற்கூறிய சிலப்பதிகார வரிகள்படி, சுர வரிசையை குறை, நிறை எனப் பகுத்துள்ளனர் எனத் தெரிகிறது. அதாவது கீழே உள்ள பட்டியல் படி, சுரங்களை குறை, நிறையென 12 சுரங்களாய் வகுத்துள்ளனர். ஆங்கில எழுத்துக்கள் மூலம் சுலபமாக இவற்றைக் குறிக்க முடியும்.

ச – ஷட்ஜம் – குறை, நிறை கிடையாது – S



ரி – சுத்தரிஷபம் -குறை – R2

ரி – சதுசுருதிரிஷபம் – நிறை. – R3



க – சாதாரண காந்தாரம் -குறை – G2 = R3

க – அந்தரகாந்தாரம் – நிறை – G3



ம – சுத்தமத்யமம் – குறை -M1

ம – பிரதிமத்யமம் – நிறை – M2

ப -பஞ்சமம் -P



த – சுத்த தைவதம் – குறை – D1

த – சதுசுருதி தைவதம் – நிறை – D2=N1



நி – கைசிகி நிஷாதம் – குறை – D3=N2

நி – காகலி நிஷாதம் – நிறை- N3

இதில் ச-ப எனும் ஒலி நிலைகளில் நிறை/குறை நிலைகள் கிடையாது. ஷட்ஜம் முதல் நிஷாதம் வரையிலான சுரக்கோர்வையை ஸ்தாயி எனக்கூறுவர். தமிழிசை மரபில் இதற்கு மண்டிலம் என்றும் பெயருண்டு.



‘வட்டம் என்பது வகுக்கும் காலை

ஓர் ஏழ் தொடுத்த மண்டிலம் ஆகும்’

- சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை.

முதல் மண்டிலத்தின் அலைவரிசை 240 ஹெர்ட்ஸ் எனக்கொண்டால், இரண்டாவதை 480 ஹெர்ட்ஸ் எனப் பண்டைய தமிழிசையில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு இரட்டித்த குரல் என்றும் பெயர்.

இப்படியாக ஏழு சுரங்கள் பன்னிரண்டாகப் பிரிவது போல், இந்தப் பன்னிரண்டும் நுண்ணிய சுரங்களாய் இருபத்திரண்டு ஆகப் பிரிக்கலாம். ஆபிரகாம் பண்டிதர் போன்றோர் சங்க கால இலக்கியங்கள் மூலம் இதனை நிரூபித்துள்ளனர்.

இதுவரை நாம் பார்த்தவை மேளகர்த்தா ராக அமைப்புக்கு அடிப்படையாகும்.

மேளகர்த்தா ராகம் அமைப்பு

மேளகர்த்தா ராக அமைப்புகளை அடைய, சில அடிப்படை விதிகள் உள்ளன.



1. ஒவ்வொரு தாய் ராகத்திலும், எல்லா சுரங்களும் இருத்தல் அவசியம்.

2. ஆரோஹணம் (ஏறுநிரல்), அவரோஹணம் (இறங்குநிரல்) – இவை இரண்டிலும் சுரங்கள் வரிசைப்படி இருக்க வேண்டும்.

3. மேல் ச, கட்டாயம் இருத்தல் வேண்டும்.

ஆக, கண்டிப்பாக ஒரு ச, ப இருத்தல் வேண்டும். இரண்டு ’ம’க்களில் (மத்யமம்) ஒன்றாவது இருத்தல் வேண்டும். இரண்டு ரி, க வில் ஒன்றாவது இருத்தல் வேண்டும். ஒரு த, நி இருத்தல் வேண்டும்.

மேளகர்த்தா ராகங்கள் மொத்தம் 72 ஆகும். இவற்றை நாம் கடபாயதி என்ற முறைப்படி சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இந்த முறைப்படி, சமஸ்கிருத எழுத்துக்களின் எண்களை ராகத்தின் பெயரோடு இணைத்துப் படிக்க வேண்டும். சமஸ்கிருத மொழிப்படி:

1 2 3 4 5 6 7 8 9 0 Ka kha Ga Gha Nga Ca Cha Ja Jha Nya Ta Tha Da Dha Na Ta Tha Da Dha Na Pa Pha Ba Bha Ma - - - - - Ya Ra La Va Sha Sha Sa Ha - -

1. ராகத்தின் முதல் இரு எழுத்துக்களை தனியாக எடுத்து, அதற்கான எண்களை இந்த கட்டத்தின் மூலம் நிரப்பவேண்டும்.

72 ராகங்களில் முதலாவதாக இருக்கும் கனகாங்கி ராகம்.

கனகாங்கி -முதல் இரு எழுத்துகள் – க, ன (1, 0)

2. இரண்டாம் விதிப்படி, இந்த எண்களை கடைசியிலிருந்து படிக்க வேண்டும். (பழைய இந்திய முறைப்படி)

கனகாங்கி – 01.

ஆக, இது முதல் மேளகர்த்தா ராகம்.

இப்போது இந்த எண்ணிலிருந்து, சுர அமைப்பை பெற என்ன விதியைக் கடைபிடிப்பது? இதற்கும் விதிகள் உண்டு.



1. ஒன்று முதல் 36 வரை உள்ள மேளகர்த்தா எண்களுக்கு – M1.

2. 37 முதல் 72 வரை – M2

3. கிடைக்கும் மேளகர்த்தா எண் 36ஐ விடக் குறைவாக இருந்தால், அந்த எண்ணில் ஒன்றைக் குறைத்துக்கொண்டு, ஆறால் வகுக்க வேண்டும். 36ஐ விட அதிகமாக இருந்தால், அந்த எண்ணிலிருந்து 36ஐக் கழித்துக் கிடைக்கும் எண்ணில் ஒன்றைக் குறைத்துக் கொண்டு ஆறால் வகுக்க வேண்டும்.

இப்படி வகுத்துக் கிடைக்கும் ஈவு (Quotient) எண்ணையும், மீத எண்ணையும் வைத்து மற்ற சுரங்களைக் கணக்கிடலாம்.

ஈவு எண் ரி க 0 R1 G1 1 R1 G2 2 R1 G3 3 R2 G2 4 R2 G3 5 R3 G3 மிச்ச எண் த நி 0 D1 N1 1 D1 N2 2 D1 N3 3 D2 N2 4 D2 N3 5 D3 N3

இதன்படி கனகாங்கி ராகத்தின் அமைப்பை கண்டுபிடிக்கலாம்.



1. தாய் ராகம் ஆதலால் ச, ப கண்டிப்பாக உண்டு.

2. முதல் மேளகர்த்தா எண்ணானதால் இதற்கு – M1

3. மேளகர்த்தா எண் 1; 36ஐ விட சிறியது. எனவே (1-1)/6. ஈவு:0, மிச்சம் – 0

4. ஆகையால் R1, G1, D1, N1 ஆகிய சுரங்களே சேரும்.

5. இதன்படி கனகாங்கி ராகத்தின் சுர அமைப்பு :



ஆரோஹணம் – ச ரி க ம ப த நி ச:

அவரோஹணம் – ச:நி த ப ம க ரி ச

என்ற வரிசைக்கிரமப்படி அமைந்துள்ளது.

அடுத்தது இன்னொரு உதாரணத்தின் மூலம் கடயபாதி வழக்கத்தை எடுத்தாளலாம்.

ராகம் – ஹேமாவதி.



1. மேளகர்த்தா எண் -ஹே, மா – ha, ma – 8, 5

2. இதன் மேளகர்த்தா எண் – 58.

3. மேளகர்த்தா எண் 37க்கு மேல் உள்ளதால் – இதில் M2 உள்ளது.

4. மற்ற சுரங்களைக் கண்டுபிடிக்க: 36ஐ விட 58 பெரியது; எனவே 58-36 = 22. (22-1)/6. ஈவு, 3 மிச்சம் 3.

5. இதனால் மேலேஇருக்கும் கட்டத்தின் மூலம்- R2, G2, D2, N2 என்ற சுர அமைப்புகளை அடைகிறோம்.



ஆரோஹணம் -S, R2, G2, M2, P, D2, N2, S

அவரோஹணம் – S, N2, D2, P, M2, G2, R2, S

சுலபமான சில பயிற்சிகள் மூலம், இதை எளிதில் கணக்கிட முடியும்.

சக்கரம்

இந்த 72 மேளகர்த்தா ராகங்களை, பனிரெண்டு குழுக்களாக பிரித்துள்ளனர். இதைச் சக்கரங்கள் எனக் கூறுவர். ஆக மொத்தம் 12 சக்கரங்கள். ஒவ்வொன்றிலும் ஆறு ராகங்கள் இருக்கும்.



மேளகர்த்தா ராக சக்கரம்

ஒவ்வொரு சக்கரத்திலும் இருக்கும் ராகங்களில் தைவதமும், நிஷாதமும் மட்டுமே மாறுபடும். இந்தப் பன்னிரண்டு சக்கரங்களுக்கும் கீழ்க்கண்டவாறு பெயர்கள் இடப்பட்டுள்ளன. இந்தப் பெயர்கள் அந்தச் சக்கரத்தின் எண்ணைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள்.




1. இந்து (நிலவு , ஒரே நிலவு)

2. நேத்ரம் (இரு கண்கள்)

3. அக்னி (மூன்று வகை வேள்வித் தீ, முத்தீ).

4. வேதம் (நான்கு வேதங்கள்)

5. பாணம் (மன்மதனின் 5 பாணங்கள்)

6. ருது ( 6 ருதுக்கள், அதாவது பருவ காலங்கள்)

7. ரிஷி (சப்த ரிஷிகள்)

8. வசு (அஷ்ட வசுக்கள்)

9. பிரம்மா (நவ பிரம்மாக்கள்)

10. திசி (பத்து திசைகள், வழக்கமான 8 திசைகளோடு, மேல், கீழ் இரண்டும் சேர்த்து).

11. ருத்ரர் (ஏகாதச ருத்ரர்கள்)

12. ஆதித்யர் (துவாதச ஆதித்யர்கள்).

 மிக்க நன்றி : தமிழ் ஹிந்து.காம்/2009/08/இசைக்கூறுகள் 04/


Monday 18 March 2013





சுக்கில் இருக்கு சூட்சுமம் !!!

========================

மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு எப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில் ‘‘சுக்கு’’ முதலிடம் பெறுகிறது.
சுக்கிலிருக்குது சூட்சுமம்’’ என்னும் பழமொழி இதன் மருத்துவ குணங்களை, முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அன்றாட சமையலில், பண்டம் பலகாரங்களில் சுக்கு மணம், சுவை ஊட்டுகிறது. சுக்கு, கருப்பட்டி இட்டு ‘‘சுக்கு நீர்’’ தயாரித்துக் குடிப்பது தமிழ் நாட்டில் பண்டைக்காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளது. இது உடல்நலம் தரும் தமிழ்நாட்டு பானம் என்பர்.

சுக்கைத் தயாரிக்கும் பக்குவம்:

இஞ்சியை பக்குவம் செய்து கிடைப்பது ‘‘சுக்கு’’. அறுவடை செய்த இஞ்சியை ஒருநாள் முழுதும் நீரில் ஊற வைத்து, மூங்கில் குச்சிகளைக் கொண்டு, இஞ்சியின் மேல் தோலை நீக்கி, பின்னர் ஒருவாரம் சூரிய ஒளியில் நன்கு காயவைத்துக்கிடைப்பதுதான் ‘‘சுக்கு’’. இஞ்சியின் தரத்தைப் பொறுத்தும், வகைகளைப்
பொறுத்தும் 100 கிலோ இஞ்சியிலிருந்து 18 முதல் 25 கிலோ காய்ந்த சுக்கு கிடைக்கும். சுக்கை நன்கு சேமித்து வைத்தால், ஒரு வருடம் வரை அவ்வவ்போது பயன்படுத்தலாம்.

சுக்கு மொழிகள் பத்து:

1. தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை, சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை.

2. சுக்கு சுவையில் மிகக் காரம், பயனில் மிக இனிமை.

3. சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுதந்திரத்திற்கு மிஞ்சிய உயர்வில்லை.

4. மசக்கை உள்ளவளுக்கு ஏலக்காய், சுக்கைத் தின்றவளுக்கு சுகப்பிரசவம்.

5. சுக்கு அறியாத கஷாயம் உண்டா?

6. இஞ்சி காய்ந்தால் சுக்கு, எப்போதும் சோம்பி இருப்பவன் மக்கு.

7. பல்வலிக்கு கிராம்பு, பக்கவாதத்திற்கு சுக்கு.

8. சுக்கும், தேனும் மக்குப்பிள்ளையையும் சுறுசுறுப்பாக்கும்.

9. சுக்கை நம்பியவன் எக்காலத்தும் நோய்க்கு அஞ்சான்.

10. சுக்கிடம் தஞ்சமடையும் அஜீரணம்.

பொதுப்பயன்கள்:

பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

மருத்துவப் பயன்கள்:

1.சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்l


சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. முறைப்படி உலரவைத்த இஞ்சிதான் சுக்கு. இந்தியாவின் ஐந்து இன்றியமையாத நறுமணப் பொருட்களில் ஒன்று. Gingiber Officnallinn எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த மூலிகை இந்தியமக்களின் அன்றாட உணவிலும் மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது.

புவியில் உற்பத்தியாகும் அளவில் 50 விழுக்காடு இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது. அதில் கேரளாவில் 70 விழுக்காடு விளைகிறது. அதிலும் கொச்சியில் விளையும் வகைதான் புவியிலேயே சிறந்ததாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஐம்பது நாடுகளிக்கு சராசரியாக 7 ஆயிரம் டன் அளவுவரை சுக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

தொன்மைக்கால கிரேக்கர்களும், ரோமாபுரி மக்களும் இதை விரும்பி செங்கடல் வழியாக அரேபிய வணிகர்களிடமிருந்து வரப்பெற்றார்கள். செம்மண் சேர்ந்த வண்டல்மண் அல்லது இரும்பகக் களிமண் சேர்ந்த வண்டல் மண்ணில் இது செழிப்பாக வளரும். இதில் அடங்கியுள்ள சத்துக்க்கள் பின்வருமாறு,
புரதம் 8.6
கொழுப்பு 6.4
கால்சியம் 0.1
பாஸ்பரஸ் 0.15
இரும்பு 0.011
சோடியம் 0.03
பொட்டாசியம் 1.4
கலோரி மதிப்பு 100 கிராம் அளவில் 300 கலோரி அளவு
உயிர்ச்சத்துக்கள் (Vitamins) A 1175U, B1 0.05 மி.கி., B2 0.13 மி.கி., நியாசின் 0.9 மிகி, C 12 மி.கி.

சித்தர்கள் இதற்கு விடமுடியாத அமுதம் என்று காரணப் பெயரிட்டுள்ளார்கள். சுக்குக்கு புறணி ஆதாவது மேல் தோல் நச்சு. அதை நீக்கினால் உள்ளிருப்பது அமுதம். இது ஏகநிவாரணி என்றும் அழைக்கப்படும். இதன் முக்கியப்பணி வெப்பமுண்டாக்கி, பசித்தீயைத் தூண்டி வாயுவை அகற்றுதல். ஒரு துண்டு சுக்கு வாயிலிட்டு மெல்ல பல்வலி, தொண்டைக்கட்டு, குரல் கம்மல் தீரும். சுக்குப்பொடியை சிறு முடிச்சாகக் கட்டி காதில் சொருகிவைக்கக் காதடைப்பு, வலி, சீதளம் நீங்கும். தாய்ப்பால் அல்லது பால்விட்டரைத்து பற்றுப்போட தலைவலி தீரும். இதனுடன் சிறிது பெருங்காயம் சேர்த்து பால்விட்டரைத்து மூட்டுவலி, இடுப்பு வலிக்குப் பற்றுப்போட நலமடையும்.
சுண்டைக்காயளவு சுக்குப்பொடி எடுத்து தூய்மையான வெள்ளைத்துணியில் முடிந்து, 5 மில்லி லிட்டர் அளவு பாலில் ஊறவைத்து 5 நிமிடங்கள் கழித்து முடிச்சை எடுத்துவிட்டு அந்தப்பாலை இரண்டு கண்களிலும் சில சொட்டுக்கள் விட்டால் அதிகக்கோபம், மன அழுத்தம், மன நோயாளிகளின் வெறியாட்டம் ஆகியவை தீர்ந்து மன அமைதி ஏற்படும். (இவ்வாறு செய்யும்போது முதலில் எரிச்சலுண்டாகும் பின் குளிர்ச்சியாக மாறும்). தலைவலி, சீதளம் நீங்கி மன அகங்காரத்தை ஒடுக்கும்.

ஒரு குவளை பாலில் 2 கிராம் அளவு சுக்குப்பொடியும் சர்க்கரையும் சேர்த்து காலை மாலை பருகினால் மூட்டுவலி, வாயு, அசதி நீங்கி உடற்சுமை குறையும்.

உப்பைத்தண்ணீர் விட்டரைத்து சுக்கின்மேல் கவசம் போல்தடவிக் காயவைத்து, கரிநெருப்பில் சிறிது சுட்டு எடுத்து நன்கு சுரண்டிவிட்டு பொடித்து கண்ணாடிக்கலனில் மூடிவைக்கவும். இதனைச் சுண்டைக்காயளவு காலை, மாலை உணவுக்கு முன் புளித்த மோரில் கலந்துதர பசிக்குறைவு, வயிற்றுப்பொருமல், இரைச்சல், சூட்டுப் பேதி நீங்கும்.

இந்தப்பொடி 50 கிராம் அளவு, மிளகுப்பொடி 10 கிராம் அளவு எடுத்து அதனுடன் சம அளவு நாட்டுச்சர்க்கரை சிறிது நெய் விட்டு இடித்து சுக்குருண்டை செய்துவைத்துக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காலை மாலை உட்கொண்டு வருவதால் பசியின்மை, வயிற்றுவலி, வாயு, இருமல், வாந்திபேதி, பேதி, குமட்டல், சுவையின்மை, அடிக்கடி வரும் காய்ச்சல், இதய நோய்கள், நரம்பியல் பிணிகள் நீங்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்கள் பொரியும் சுக்குப்பொடி உருண்டையும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவருவதால் சீதளம் நீங்கிக் கருப்பை தூய்மையாகி குழந்தைக்கு நல்ல பாலும் உடலில் உற்பத்தியாகும். சர்க்கரைக்கு மாற்றாக பனை வெல்லம் சேர்ப்பது இன்னும் சிறப்பானதாகும்.
சுக்குப்பொடி 200 கிராம், வறுத்த மிளகு, திப்பிலி, வகைக்கு 25 கிராம் அளவு அதிமதுரப்பொடி, சிறியாநங்கைப் பொடி வகைக்கு 25 கிராம், இந்துப்பு 5 கிராம் அளவு கலந்து வைத்துக்கொண்டு, காலை மற்றும் இரவு உணவுக்கு முன் 2 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து உண்டு பின் வெந்நீர் குடிப்பதால் கொழுப்பும் உடல் பருமனும் குறையும். பித்தம், வாயு, கபம் குறையும்.

இது உலர்த்தப்படாமல் இஞ்சியாக இருக்கும்போது, தோல் சீவி சாறு எடுத்து 10 நிமிடங்கள் தெளியவைத்து சம அளவு எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 5 மணிக்கும் 1 தேக்கரண்டி அளவு சாப்பிடுவதால் வாய்க்கசப்பு, பித்தம், தலைச்சுற்றல், உதிரக் கொதிப்பு, செரியாமை, பசியின்மை நீங்கி குழந்தைகளும் பெரியவர்களும் முறையாகப் பசித்து சாப்பிடுவார்கள்.
சாப்பிடாத குழந்தைகளை அடித்து விரட்டுவதைவிட்டு இதைச் செயலபடுத்திப் பயனடையுங்கள். இது ஜம்பீர மணப்பாகு என்ற பெயரில் நமது மையத்தில் கிடைக்கிறது.

இஞ்சியைத் தோல் சீவி சிறுவில்லைகளாக அறுத்து தேனில் போட்டு சிலநாட்கள் வெய்யிலில் வைத்தெடுத்துக் கண்ணாடிக்கலன்களில் அடைத்து வைத்துக்கொள்ளவும். இந்த இஞ்சித்தேனூறலை காலை வெறும் வயிற்றில் 5 துண்டு சாப்பிடுவதால் மேற்கண்ட நன்மைகளைப் பெறலாம். இது ஒரு கற்பமுறை. செரியாமைக் கோளாறுகளை விரட்டிவிட்டால் வேறெந்த நோயும் நம்மை அணுகாது. எனவே இஞ்சியையும் சுக்கையும் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்


காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு!

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வச்சீங்கன்னா அடியில (வெ‌ள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்துல) வண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேல தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீயில போட்டும் குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.

ரத்த அழுத்தம், இருதயக்கோளாறுக‌ள் சரியாகும். வயித்துப்புண்... அதுதான் அல்சர்னு சொல்றாங்களே, அது இருந்தா குடிக்காதீங்க. மத்தபடி சாதாரணமா குடிக்கலாம். தினமும் குடிக்கணும்னு அவசியம் இல்லை. பாதிப்புக‌ள் இருக்குறவங்க ஒரு மண்டலம் (48 நா‌ள்) குடிக்கலாம். பிறகு வாரத்துல ஒருநா‌ள் குடிச்சிட்டு வந்தாலே போதும். ரத்த அழுத்தம் குறையும்போது இஞ்சி சாறை குடிக்கலாம். இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலை வலிச்சிக்கிட்டு உட்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம ஒரு மாதிரி பண்ணும். அப்போ இஞ்சி சாறோட தேன் கலந்து குடிச்சா 5 இல்லைனா 10 நிமிஷத்துல தலைவலி நிக்குறதோட ரத்த அழுத்தம் சரியாயிரும். அதுக்கு அப்புறம் தேவையானத சாப்பிட்டு ரத்த அழுத்தத்தை சரி செஞ்சா பிரச்சினையில்லை.

இஞ்சியை துவையல் செஞ்சும் சாப்பிடலாம். இஞ்சி ரசம், இஞ்சி குழம்பு, இஞ்சி ஜூஸ் சாப்பிடலாம். இஞ்சி ஜூஸ் எப்பிடி செ‌ய்யணும்னா இஞ்சியை சாறு எடுத்து வடிகட்டி அதோட எலுமிச்சை சாறு, நெல்லிக்கா‌ய் சாறு, தேன், சர்க்கரை சேர்த்தா ஜூஸ் ரெடி. இதை காலை நேரத்துல குடிச்சா வயிறு எரிச்சல் இல்லாம ஆரோக்கியமா இருக்கும். இஞ்சி ஜூஸை புதுசா சாப்பிட்டா சில பேருக்கு ஒத்துக்கிடாது. அதனால முதல்ல வாரத்துல ஒருநா‌ள் சாப்பிடுங்க, பிறகு விருப்பம்போல சாப்பிடுங்க. இஞ்சி முரப்பாவும் சாப்பிடலாம்.


அடுத்ததா.. கடும்பகல்ல சுக்கு சாப்பிடுங்க. கடும்பகல்ல அவனவன் வேலை பாத்திட்டு இருக்கும்போது இதயெல்லாம் எங்க செ‌ய்யுறது. சாயங்கால நேரத்துல செ‌ய்யுங்க. ஆமா... சுக்கை வெறுமனே எப்பிடி சாப்பிடுறது? சுக்கு காபி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும். இதுக்கு என்னென்ன தேவைனா மிளகு ஒரு பங்கு அதைவிட 2 மடங்கு சுக்கு, இந்த சுக்குக்கு இன்னொரு பங்கு கொத்தமல்லி... அதாவது தனியா. கொஞ்சம் ஏலக்கா‌ய் சேர்த்துக்கோங்க. இதை எல்லாத்தயும் பொடி பண்ணி வச்சிக்கோங்க. அதோட துளசி, தூதுவளை, நொச்சி, ஆடாதொடை, ஓமவல்லி இலைக‌ள் கிடைச்சா சேர்த்துக்கலாம்.

இது எல்லாத்தையும் தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வச்சி வடிகட்டி கருப்பட்டி... அதாவது பனைவெல்லம் சேர்த்து குடிச்சீங்கன்னு வச்சிக்கோங்க. ஜலதோஷம், சளி, இருமல், தொண்டைக்கட்டு எல்லாம் சரியாகிடும். மழைக்காலத்துல இத குடிச்சிட்டு வந்தாலே போதும். வைத்தியரு, டாக்டருனு அலைய வேண்டியதில்லை. இந்த சுக்கையும் ரசம் வைக்கலாம், குழம்பு வைக்கலாம். ஜலதோஷம் தொடங்குற நேரத்துல வர்ற தலைவலினாலும் சரி, வேற சில காரணங்களால வர்ற தலைவலினாலும் சரி சுக்கை கொஞ்சம் தண்ணி விட்டு ஒரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா அஞ்சே நிமிஷத்துல தலைவலி பஞ்சா பறந்துரும்.

மாலையில் கடுக்கா‌ய். சாயங்காலம் சுக்கை சாப்பிட்டுட்டு கடுக்கா‌ய் சாப்பிடணுமானு நீங்க ‘ஙே’னு முழிக்கிறது புரியுது. ராத்திரியில வச்சிக்கோங்க. சாப்பிட்டுட்டு தூங்கப்போற நேரத்துல கடுக்கா‌ய் கசாயம் குடிங்க. காலையில் எந்த பிரச்சினையும் இல்லாம காலைக்கடனை கழிக்கலாம். கடுக்காயை சாப்பிடுறதுலயும் ஒரு முறை இருக்கு. கடுக்கா‌ய் முழு கடுக்காயையும் போட்டுறக்கூடாது. ரெண்டு தட்டு தட்டி தோலை மட்டும் எடுத்துக்கோங்க, கொட்டையை தூர போட்டுருங்க.

ஒரு ஆளுக்கு ரெண்டு கடுக்கா‌ய் போதும். தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைங்க. நல்லா சுண்டினவுடனே சூடு ஆறினதும் மடக்குனு குடிச்சிருங்க. துவர்ப்பா இருக்கும். வாந்தி கீந்தி எடுத்திராதீங்க. பாக்கு, பான்பராக்குனு எந்தெந்த கருமத்தையெல்லாமோ சாப்பிடும்போது இதை சாப்பிடுறதில தப்பே இல்லை. காலையில ரெண்டு கடுக்காயோட பலனை நல்லாவே உங்களால உணர முடியும்.

மூலிகை குடிநீர் (சுக்கு காபி)

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. இதுவே சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு வெந்நீர், சுக்கு மல்லி காபி, கொத்து மல்லி காபி, என்று பலவாறாக ஆகியது.

காலை மாலை இனிய பானம்:

பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையில் தவிப்போருக்கு உதவுவது சுக்கு காபி. சூடாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை நிறைவு செய்கிறது. காரமும் இனிப்பும் இருப்பதால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. காலை மாலை பானங்களுக்கு பொருத்தமானது இந்த சுக்கு காபி.

பவுடர் தயாரிப்பு:

சுக்கு, கொத்தமல்லி, சீரகம் மூன்றும் முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம். பூக்கள், வேர்கள், பட்டைகள், வாசனைப் பொருள்கள், என விரும்பிய எதுவும் சேர்க்கலாம்.


அவையாவன:

கருங்காலி, செஞ்சந்தனம், ரோஜா இதழ், தாமரை இதழ், செம்பருத்தி, ஆவாரம் பூ, ஏனம், ஜாதிக்காய், மிளகு, குங்குமப்பூ, ஜாதிப் பத்திரி, வெட்டிவேர், நன்னாரி வேர், வாய் விளங்கம், பதிமுகம், இருவேலி, துளசி, வெள்ளருகு, ஆரஞ்சுத் தோல் முதலியன. இவற்றைக் காய வைத்து அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.

ஒரு டம்ளர் தயாரிக்க

ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் தூளும், இரு ஸ்பூன் கரும்புச் சர்க்கரையும், (நாட்டுச் சர்க்கரை/ பழுப்பு சர்க்கரை/ கருப்பட்டி/ வெல்லம்) போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி மூடி வைத்து நன்கு ஆறின பின்பு வடிக்கட்டி சாப்பிடலாம். சிறிது பால் அல்லது தேங்காய் பால் கலந்து சாப்பிடலாம். மிக சுவையாக இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன்/ பின் என எந்த நேரமும் சாப்பிடலாம். டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில்/டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.

செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்.

Friday 4 January 2013

இயற்கையாய் உடல் சூட்டை தணிக்க


சிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை உடற்காங்கை என்பார்கள்.

உடலுக்கு இயற்கையான சூட்டை தருவது உணவு. உடல் இயங்கிக் கொண்டே இருப்பதால், சூடு ஒரே நிலையில் இருக்கும். இந்த சூடு வேறு, உடற்காங்கை என்பது வேறு!

உடற்காங்கை தான் பல நோய்களுக்கு காரணமாகிறது. அஜீரணம், மூட்டுவலி, இளநரை, பாலியல் கோளாறுகள், மாதவிடாய் கோளாறுகள் வாய்வுத்தொல்லை, மூலம் இவைகள் உண்டாகும் காரணங்களில் அதீத உடல் உஷ்ணமும் ஒரு காரணம். உடல் உஷ்ணம் கண்களை பாதிக்கும்.

உடற்காங்கை அதிகமாக காரணங்கள் கோபம், மனக்கவலை, பயம், தாபம் இவை உடற்சூட்டைக் கூட்டும். உள்ளங்கை, விலா, தலை நெற்றி இவற்றை தொட்டுப்பார்த்தால் சூடு தெரியும்.

அடுத்த முக்கிய காரணம் உடலிலிருந்து வெளியேறாமல் தங்கி விடும் மலப்பொருட்கள் தான். உடலில் நச்சுப் பொருட்கள் தங்குவது எப்போது கெடுதலை வினைவிக்கும்.
1. உடலுக்கு எண்ணை பதமிடுதல் அவசியம். தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க, உடற்சூட்டினால் பொலிவிழக்கும் தலைமுடி மீண்டும் கருமையடையும். இளநரையை தவிர்க்கலாம். ஈரமுள்ள தலையில் எண்ணை தடவாமல், உலர்ந்த கேசத்தில் எண்ணை தடவி பின் குளிக்க வேண்டும். தலையின் எண்ணை தடவாமல் ஸ்நானம் செய்வதும், ஸ்தானத்திற்கு பின் ஈரத்தலையில் எண்ணை தடவுவதும், நீர்கோர்வை, சளி, நரை இவற்றை வரவழிக்கும். கேசத்திலும், தோலிலும், எண்ணைப் பசை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது உடல் உஷ்ணம் குறையும்.

2. இரவு படுக்கப் போகும் போது உள்ளங்கால்களில் நல்லெண்ணை தடவி, தேய்த்து பிடித்து விட்டுக் கொண்டால், கண்களின் எரிச்சல், காங்கை குறையும்.

3. எண்ணை குளியலுக்கு உகந்தவை சூடாக்கப்பட்ட நல்லெண்ணை, திரிபலாதி தைலம், பிருங்காமல தைலம், பொன்னாங்கண்ணி தைலம், போன்றவை பல பலன்களை அளிக்கும். ஆயுர்வேத மருத்துவரின் உதவியோடு, உங்களுக்கு பொருந்தும் தைலத்தை தேர்ந்தெடுக்கவும். கரிசிலாங்கண்ணி, இலைகள், நெல்லி முள்ளி, மருதாணி, எள், இவற்றை தனியாக அரைத்தோ, இல்லை பால்விட்டு அரைத்தோ, சிறிது சூடு செய்து, குளியலுக்கு உபயோகிக்கலாம்.

4. உடலில் தங்கியுள்ள விஷமாகும் கழுவுப் பொருட்களை வெளியேற்ற விரேசன மருந்துகளை, டாக்டரின் அறிவுரைப்படி உட்கொள்ளவும். தினமும் மலம் கழிக்க இவை உதவும். மாதம் ஒரு முறை பேதி மருந்து உட்கொண்டால், வயிறு சுத்தமாகும். திராஷை கஷாயம் போன்றவை இயற்கையாக பலன்தரும்.

5. எண்ணை குளியலை மேற்கொள்ளும் போது, எண்ணையை காய்ச்சி தேய்த்துக் கொள்வதே நல்லது. மிளகு, ஓமம், இவற்றை போட்டு எண்ணையை காய்ச்சுவது வழக்கம். கொம்பரக்கை போட்டு காய்ச்சிய எண்ணையை உபயோகித்தால் உடற்காங்கை குறையும்.
6. எண்ணை தேய்த்துக் கொண்டு குளிக்கையில் சூடான நீரையே பயன்படுத்த வேண்டும்.

7. ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.

8. மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நாட்களுக்கு சாப்பிடவும்.

9. தினமும் இரண்டு மூன்று நெல்லிகாயை உட்கொள்ளவும்.

10. வெள்ளரி சாறு, கேரட் சாறு, இவைகள் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

11. இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பது சிறந்தது.

12. கசகசா விதைகளை பாலில் அரைத்து இந்த களிம்பை தலையில் தடவிக் கொண்டு குளிக்கலாம்.
13 . மேகம் முற்றினால் வெள்ளை, வெள்ளை முற்றினால் வெட்டை,வெட்டை முற்றினால் கட்டை.-கிராமத்து பழமொழி.

மேகம் என்றால் சூடு, உஷ்ணம் என்று பொருள். உடலில் உஷ்ணம் அதிகரித்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் தோன்றும்.இந்நிலை நீடித்தால் வெள்ளை,வெட்டையாக மாறும். இந்நிலை நீடித்தால் உடல் மெலிந்து வேறு பல நோய்கள் தோன்றி இறக்கும் நிலை உருவாகும்.

சரி இதற்கு பழமொழியில் உள்ள மருத்துவம் எது என்றால்,இதில் உள்ள கடைசி வார்த்தைதான் மருந்து, அதாவது கட்டை இது சந்தனக்கட்டையை குறிப்பதாகும். இன்று சராசரியாக அதிகமாக பெண்களிடம் காணப்படும் நோய்களில் இதுவும் ஒன்று....

முற்றிய நிலை வெள்ளை வெட்டைக்கு தரமான சந்தன கட்டையை சிறிது பன்னீர் விட்டு அம்மியில் தேய்க்க தேய்க்க விழுது போல் வரும்.அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரிஜினல் சந்தன அத்தர் மூன்று சொட்டு விட்டு ஒரு தம்ளர் பாலில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்

இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட அதிக நாள்பட்ட வெள்ளை வெட்டை நோய் குணமாகும்....அம்மா சொல்படி கேட்டு,வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் அரப்பு போட்டு குளிச்சீக்கிட்டு இருந்தா,உடல் சூடும் ஆகாது..வெட்டையும் வராது.. ஷாம்பு போட்டு குளிச்சிட்டு,மென்மையான உணவான இட்லியை மறந்து ஜீரணமாகாத பீட்ஸா வை சாப்பிட்டா எல்லாமே வரும்!!


14 . உடல் சூட்டை தணிக்க : இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும் ! 50 கிராம் பிசின் 24 ரூபாய் ! அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் !
 
இயற்கையாய் உடல் சூட்டை தனித்து உடல் அழகும், ஆரோக்கியமும் பெற மேல் உள்ள குறிப்புகள் உதவலாம் ! மேல் உள்ள குறிப்புக்கள் ஒரு கைடு அவ்வளவே! 

Wednesday 12 December 2012

என்னடி முனியம்மா - வாங்க மாப்பிளை வாங்க 1984

அட என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி... யாரு வச்ச மையி... இது நான் வச்ச மையி...' என்ற உண்மையான கிராமியப்பாடல் ! 1984 ஆம் வருடம் வந்த வாங்க மாப்பிளை வாங்க என்ற படத்தில் டி.கே. எஸ். நடராஜனின் கணிர்க் குரலில் வந்து சூப்பர் டுபர் ஹிட் ஆனது இராஜாவின் இசை ஆளுமையும் மீறி ! அப்போது இந்த பாடலைப் பாடி ஈவ் டீசிங் நடக்கும். இதுவரை இந்த பாடலை நான் சுமார் நான்கு முறை மட்டுமே பார்த்துள்ளேன் . சிவா சங்கர் என்பவற்றின் தயாரிப்பு , கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் , நடிப்பில் சங்கர் - கணேஷ் இசையில் வந்த படம். சிவசங்கர் கங்கை அமரன் இசையில் " கரடி " என்று படமும் அதே வருடம் எடுத்தார் அதிலும் இதிலும் அவருக்கு ஜோடி தேவிஸ்ரீ ! 
 
 
 
 

Saturday 8 September 2012

சென்னை என்பது தமிழ் பெயரா ?


1996ல் திரு. கருணாநிதி அவர்கள் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் இனி ஒன்றாக அழைக்கப்படும் என்று கூறி மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றினார் ! அதற்கு அவர் பல வரலாற்றுச் சான்றுகளைச் கூறினார் அனால் உண்மையில் மெட்ராஸ் என்பதும் சென்னை என்பதும் தமிழ் பெயர்கள் அல்ல!

மெட்ராஸ் என்பது Portuguese போர்ச்சுக்கீசியப்  பெயர் சென்னை என்பது தெலுங்குப் பெயர்!
1636 வரை இங்கு ஒரு நகரமே இல்லை! ஆங்கிலேயர்கள் புதிதாக நிர்மாணித்த ஒரு நகரம் இது! மெட்ராஸ் என்பது புனித ஜார்ஜ் கோடையில் வாழ்ந்த போர்ச்சுக்கீசியப் மாதேராஸ் குடும்பப் பெயர் மற்றும் பரங்கியர்களுக்கு (Burghers) மீன் பிடித்துக் கொடுத்த செம்படவர் திரு. மதராசன்னின் பெயர்!
எங்கிருந்து வந்தது சென்னை என்ற தமிழ் பெயர்? சென்னை என்பது சென்னப்ப நாயகர்  என்னும் தெலுங்குப் வாணிபத் தலைவரின் பெயர் .

மதராசப்பட்டினம் பரங்கியர்கள் குடியிருப்பு  WHITE'S TOWN  கோட்டைக்கு உள்ளே ! சென்னைப்பட்டினம் - பெரும்பான்மையான தெலுங்கு பேசும்  மக்களின் "கறுப்பர் நகரம் " BLACKS' TOWN கோட்டைக்கு வெளியே.

நன்றி: எஸ். முத்தையா - Madras discovered

இப்போழுது சொல்லுங்கள் திரு கருணாநிதி அவர்கள் சொன்ன  வரலாற்றுக்  காரணம் உண்மையா இல்லையா என்று ?

கட்டளைய கீதம் எனும் தமிழ் இசை வடிவில் உருவான பாடல்:


ஷண்முகப்ரியா என்னும் கர்நாடகப் இராகத்தில் அமைந்துள்ள பாடல் என்றாலும் இது கட்டளைய கீதம் எனும் தமிழ் இசை வடிவில் உருவான பாடல் என்று கூறலாம் .








இங்குக் கூறப்படும் கட்டளையைச் சந்தம் என்று கூறலாம். பாடலில் வரும் எழுத்தோசை அளவுக் கூறுகளைக் கட்டளை என்பர்.
 கட்டு + அளவு - கட்டப்பட்ட அளவு - கட்டளை
இயல் தமிழில் கட்டளைக் கலித்துறை, கட்டளைக் கலிப்பா என்ற பாவகைகள் உள்ளன. இவை எழுத்து எண்ணிப் பாடப்படும் பாடலாகும். இயல் தமிழில் வரும் கட்டளை எழுத்து எண்ணிக்கை உடையது. இசைத்தமிழில் வரும் கட்டளை எழுத்தோசை பற்றியதாகும். செய்யுளில் வரும் கட்டளை யாப்புப் பற்றியது. இசையில் வரும் கட்டளை தாளம் பற்றிய சந்தமாகும்.


கட்டளைய கீதம்

  இசைத்தமிழில் கட்டளைய கீதம் என்ற இசை உருப்படி பற்றி அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். (சிலம்பு 3:10-11) தாளத்திற்கு ஏற்ப எழுத்தசைவுகளையமைத்துக் கட்டிய சிறு பாடலைக் கட்டளைய கீதம் என்பர். தற்காலத்தில் இதனைக் கீதம் என்று அழைக்கின்றனர். இது தாளத்திற்கேற்ற எழுத்தளவு உடைய உருப்படியாகும். இவ்வாறு தாள அனுமானத்துடன் எழுத்துகளைக் காட்டும் பொழுது நெடிலைக் குறிலாகவும் குறிலை நெடிலாகவும் ஒலிக்கும் சூழலும் தோன்றும். இங்கு, தாளச் சந்த அமைதியே முக்கிய இடம் பெறும். உதாரணமாக, திருப்புகழ்ப் பாடலில் ஒரு தொடரைக் காண்போம்.

தத்தன தனதன தத்தன தனதன  


தத்தன தனதன தனதான
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி


இதில் கைத்தல என்ற சொல்லின் முதலில் வரும் கை என்பது நெடிலாகும். ஆனால் சந்தத்தில் இரு மாத்திரை பெறும் நெடிலாக இடம் பெறாமல் ஒரு மாத்திரை பெறும் குறிலே சந்தமாக வந்துள்ளது. இசை மரபில் எழுத்துகள் தத்தமக்குரிய மாத்திரை அளவிலிருந்து மாறி ஒலிப்பதும் ஒற்றெழுத்துகள் நீட்டி ஒலிப்பதும் ஆகிய மரபுண்டு என்று தொல்காப்பியரும் கூறியுள்ளார்.

அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்.எழுத்து. 33)
This is called Akshara chanda and Matra chanda Respectively. A Reference to this by my friend and Mirthanga vidvan Poovalor Srinivasan Sriji. That's the reason great seer of Conjivaram did not recommend Mantras to be sung in a raga and for tala, because Matra calculation will change, nullifying the effect of Mantras....


http://yogasangeeta.org/images/Music%20Articles/Laya%20-%20Nada.pdf

Raga: Shanmukhapriya

யாழ்முரி = அட்டன இராகம் aatana ragam



இப்பாடல் தியாகராஜா சுவாமிகள் அட்டன  இராகத்தில்  அருளிய பாடல் ஆகும் . இளையராஜா அவர்கள் இப்பாடலை சகர சங்கமம் என்னும் திரை ஓவியத்தில் பயன் படுத்தியிருப்பார் . இது தமிழ் இசை மரபில் யாழ்முரி என்னும் வகையைச் சேர்ந்தது. 

"யாழ்முரி" என்று இதற்குப் பெயர் வரக் காரணம் என்ன? யாழ் இசைக் கருவியை வைத்துப் பாட வேண்டிய பாடலா இது? அதனால் தானோ இப் பெயர்? 

முரி - ஒருவகை இசைப் பாடல். யாழில் அமைத்துப் பாடும் இசையமைப்பாதலின் 'யாழ்முரி' எனப் பெயர் பெற்றது. 

திருஞானசம்பந்தர் தந்த அற்புதமான சந்த அமைப்புப் பதிகங்களில் ஒன்று யாழ் முரியாகும். இது காரைக்கால் அடுத்துள்ள தருமபுரத்தில் பாடப்பட்டது. மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும். இதனை நீலாம்பரி இராகத்தில் பாட வேண்டும். ஆனால் தற்காலத்தில் இதனை அடாணா இராகத்தில் பாடி வருகின்றனர். யாழ் முரியைச் சிலர் பண்ணாகவும் கூறுவர். இது தவறு. இது பண்ணன்று , பதிகப் பெயர் என்பது பலரின் முடிவு.

    இது முரி என்ற இசை வகைக்குரிய பாடலாகும். எடுத்த இயலும் இசையும் முரித்துப் பாடுதலின் இது முரியாயிற்று. இசையின் உள்ளோசைகள் நிறைந்த பதிகமாகும். தற்காலத்தில் இசைவாணர்கள் பாடிவரும் பல்லவி பாடும் முறைக்கு இப்பதிகம் முன்னோடியான பதிகமாகும். திருமுறைகண்ட புராணம் இதற்குத் தனிக் கட்டளை கூறவில்லை. இது மேகராகக் குறிஞ்சியின் கட்டளையின் பாற்படும்.

http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/audio/d0513523.rm < - இங்கே சொடுக்கவும் பாடலை கேட்க



தான தனத்தனனா - தன - தானன தானனா
தனா - தனா - தனா - தனா - தனதன தனனா
மாதர் மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்                  (1.136.1)இதில்
தான - 1
தனத்தனனா
- 1 தன      - 1 தானன - 1 தானனா - 1 தனா - 4 தனதன - 1 தனனா - 1
----- 11 -----
இதில் சந்தம் முரிந்து வருகிறது.


மற்றுமொரு அழகிய பாடல்....



இரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்

சித்திரைக்குப்பூசமுதல் சீராவணிக்கனுஷமாம்

அத்தனுசுக்குத்திரட்டாதியாம்; நித்த நித்தம்

ஏதுச்சமானாலும் இரண்டேகாலிற் பெருக்கி

மாதமைந்து தள்ளி மதி.

இப்பாடலைக்கொண்டு ஒரு தோராயமான முறையில், இரவில் நட்சத்திரங்கள் உச்சத்தில் வருவதைப்பார்த்து அப்போதைய நேரத்தை சொல்லிவிடலாம். ஆனால் 27 நட்சத்திரங்களை அவைகளுடைய வரிசையில் தெரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், வானத்தில் அவைகளை அடையாளம் காட்டவும் தெரியவேண்டும்.

பொருள்: சித்திரையிலிருந்து நான்கு மாதங்களுக்கு (இது முதல் சுற்று) பூச நட்சத்திரத்திலிருந்து எண்ணு; ஆவணியிலிருந்து நான்கு மாதத்திற்கு (இது இரண்டாவது சுற்று)அநுஷ நட்சத்திரத்திலிருந்து எண்ணு. மார்கழி மாதத்திலிருந்து நான்கு மாதத்திற்கு (இது மூன்றாவது சுற்று) உத்திரட்டாதியிலிருந்து எண்ணு. ஒவ்வொரு நேரமும் எந்த நட்சத்திரம் உச்சத்தில் காணப்படுகிறதோ அந்த எண்ணிக்கையை இரண்டேகாலால் பெருக்கி, வரும் தொகையிலிருந்து, 5m ஐக்கழிக்கவேண்டும். இங்கு m என்பது, நாம் பார்க்கும் மாதம் எதுவோ அது எந்தச் சுற்றில் வருகிறதோ அந்தச் சுற்றில் அது எத்தனையாவது மாதம் என்ற எண்ணிக்கை.இப்படி கணிக்கப்படும் எண் தான் சூரியன் அஸ்தமித்ததிலிருந்து எத்தனை நாழிகைகள் ஆகியிருக்கின்றன என்பதைத் தெரிவிக்கும் எண்.(1 நாழிகை = 24 நிமிடங்கள்).

எடுத்துக்காட்டுகள்: எ.கா.1: வைகாசி 2ம் தேதியன்று இரவில் நாம் சுவாதி (Arcturus: Alpha-Bootis) நட்சத்திரத்தை உச்சத்தில் பார்ப்பதாகக் கொள்வோம்.வைகாசி மாதம் முதல் சுற்றில் இரண்டாவது மாதம். அதனால் 5m = 10.பூச நட்சத்திரத்திலிருந்து எண்ணினால் சுவாதி எட்டாவது நட்சத்திரம். 8 x 2 1/4 = 18. ஆக நமக்குக் கிடைக்கும் எண்ணிக்கை 18-10 = 8. 8 நாழிகைகள் = 3 மணி 12 நிமிடம்.இதனால் அப்போதைய நேரம் ஏறக்குறைய 9-12 p.m.

எ.கா. 2: மாசி மாதம் 30ம் தேதியன்று இரவில் சித்திரை (Spica)யை உச்சத்தில் பார்ப்பதாகக்கொள்வோம். மாசி மாதம் மூன்றாவது சுற்றில் மூன்றாவது மாதம். அதனால் 5m = 5x3 = 15.இப்பொழுது உத்திரட்டாதியிலிருந்து எண்ணவேண்டும். உத்திரட்டாதியிலிருந்து சித்திரை 16வது நட்சத்திரம். இதை இரண்டெகாலால் பெருக்க, கிடைப்பது 36. 36 - 15 =21. சூரியாஸ்தமனத்திலிருந்து 21 நாழிகை கணக்கிட்டால், இரவு 2-24 A.M. என்பது அப்பொதைய நேரத்தின் தோரயமான கணிப்பு.

எனது தாய்வழி பாட்டனார் இதைப் போல் பாடல்களைக் கொண்டு இரவில் மணி சொல்லுவார்! ஒரு ஐந்து நிமிடம் முன்பு  / பின்பு இருக்கும். நான் அவரிடம் இருந்து வானியல் மற்றும் வானசாஸ்திர கலையை சிறிது அளவு கற்றேன்!

ஸ்ரோதஸ்வனி - Srotaswini Raga


இந்தக் கட்டுரை ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சுப் செய்யப்பட்டுள்ளது. சில விஷயங்கள் தமிழுக்கு மற்றம் செய்ய முடியவில்லை ஆகவே !!

ஸ்ரோதஸ்வனி இராகதிற்குப் செல்லும் முன் பெயர் காரணம் மற்றும் அறிவியல் சார்ந்த அலகுகளையும் சற்று நோக்குவோம் : Before we go to the raga, we just have an glance on the naming reasons!

'srotas' means flow of a river. srotaswini is the name of a river and is also a rare raga of Carnatic music. Srothaswini - S G2 M1 P N3 S | S N3 P M1 G2 S . Srotas, or Shrotas (pronounced /ˈʃroʊtɑːs/ US dict: shrō′·tâs, n.pl., from Sanskrit स्रोतस् srótas - the current, stream, torrent, channel, course ) -- in Ayurveda, the 13 types of channels used to convey dhatus and malas. Any injury to the shrotas leads to poor circulation, thus resulting in disease. Eridanus constellation is called srotaswini in Sanskrit. Srotaswini  is a pentatonic raga : S G2 M1 P N3


Eridanus /ɨˈrɪdənəs/ is a constellation. It is represented as a river; its name is the Ancient Greek name for the Po River. It was one of the 48 constellations listed by the 2nd century astronomer Ptolemy, and it remains one of the 88 modern constellations. It is the sixth largest of the modern constellations.




The stars that correspond to Eridanus are also depicted as a river in Indian astronomy starting close to the head of Orion just below Auriga. Eridanus is called Srotaswini in Sanskrit, srótas meaning the course of a river or stream. Specifically, it is depicted as the Ganges on the head of Dakshinamoorthy or Nataraja, a Hindu incarnation of Siva. Dakshinamoorthy himself is represented by the constellation Orion.

ஸ்ரோதஸ்வனி என்ற அபூர்வ ராகமானது, கீரவாணி என்ற மேளகர்த்தா ராகத்தின் ஜன்யமாகும். சரியான பெயர் ஸ்ரோதஸ்வனியா அல்லது ஸ்ரோதஸ்வினியா என்று தெரியவில்லை.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம் - S G2 M1 P N3 S
அவரோகணம் - S N3 P M1 G2 S

இந்த அபூர்வ ராகம், கர்னாடக இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. திரையிசையிலும் பெரிதும் பயன்படுத்தப்படாத இந்த இராகத்தில் ஐந்து  சினிமாப்பாடல்கள் இசைஞானி இளையராஜா சமைத்துள்ளார்.

கர்நாடக இசையில் இந்த இராகத்தைக் கேட்க வேண்டுமென்றால், வயலின் எம்பார் கண்ணனும், கீ போர்ட் சத்யநாராயணவும் சேர்ந்து வாசித்துள்ள ஒரு அருமையான ஆலாபனையைக் கேட்க வேண்டும். கடந்த வருடம் லாஸ் ஏஞ்கல்ஸ் நகரில் இதனை வாசித்துள்ளார்கள். இந்த ஆலாபனையைக் கேட்கும்போது யாராக இருந்தாலும் சில நிமிடங்களுக்காவது பரவச நிலை அடைவது நிச்சயம்.




இசைஞானி இளையராஜா இந்த இராகத்தில் சமைத்து உள்ள ஐந்து திரை இசைப் பாடல்கள் :

முதல் பாடல் "நீங்கள் கேட்டவை" என்ற படத்தில் இடம் பெற்ற "ஓ. வசந்த ராஜா" என்ற பாடலாகும். இதுவும் ஸ்ரோதஸ்வனியில் அமைந்த ஒரு இனிமையான பாடலாகும்.



இரண்டாவது பாடல் "பூந்தோட்டக் காவல்காரன்" என்ற படத்தில் இடம் பெரும், "சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு" என்ற பாடல். ஜேசுதாஸ் மற்றும் சுசீலா குரலில் பாடப்பட்ட ஒரு இனிமையான பாடல்.



மூன்றாவது பாடல்:

நீதானா அந்தக் குயில் படத்தில் பூஜை கேத்த பூ விது




நான்காவது பாடல்:


Jai Chiranjeeva Jagadeka Veera - Jagadeka Veerudu Athiloka Sundari (Telugu)

 



ஐந்தாவது பாடல்:


sumam sumam prathi sumam sumam – Maharishi ( Telugu)