Monday, 27 June 2011

இந்திய தேசிய கவி - பாரதியார் ஆத்திச்சூடி


காப்பு - பரம்பொருள் வாழ்த்து
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்தல் இகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண் மிக விரும்பு
7. எண்ணுவது உயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்தல் ஒழி
12. ஔடதம் குறை
13. கற்றது ஒழுகு
14. காலம் அழியேல்
15. கிளைபல தாங்கேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
17. குன்றென நிமிர்ந்து நில்
18. கூடித் தொழில் செய்
19. கெடுப்பது சோர்வு
20. கேட்டிலும் துணிந்து நில்
21. கைத்தொழில் போற்று
22. கொடுமையை எதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கல்வியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சிகொள்
26. சாவதற்கு அஞ்சேல்
27. சிதையா நெஞ்சு கொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக்கு இளைத்திடேல்
30. சூரரைப் போற்று
31. செய்வது துணிந்து செய்
32. சேர்க்கை அழியேல்
33. சைகையில் பொருளுணர்
34. சொல்வது தெளிந்து சொல்
35. சோதிடந்தனை இகழ்
36. சௌரியம் தவ§Èல்
37. ஞமலிபோல் வாழேல்
38. »¡Â¢Ú §À¡üÚ
39. ஞிமிரென இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
41. ஞேயம் காத்தல் செய்
42. தன்மை இழவேல்
43. தாழ்ந்து நடவேல்
44. திருவினை வென்று வாழ்
45. தீயோர்க்கு அஞ்சேல்
46. துன்பம் மறந்திடு
47. தூற்றுதல் ஒழி
48. தெய்வம் நீ என்று உணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வு செய்
51. தொன்மைக்கு அஞ்சேல்
52. தோல்வியில் கலங்கேல்
53. தவத்தினை நிதம்புரி
54. நன்று கருது
55. நாளெல்லாம் வினை செய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநூல் பயில்
58. நுனியளவு செல்
59. நூலினைப் பகுந்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
61. நேர்ப்படப் பேசு
62. நையப் புடை
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
65. பணத்தினை பெருக்கு
66. பாட்டினில் அன்பு செய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடம் கொடேல்
69. புதியன விரும்பு
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிது கொள்
72. பேய்களுக்கு அஞ்சேல்
73. பொய்ம்மை இகழ்
74. போர்த்தொழில் பழகு
75. மந்திரம் வலிமை
76. மானம் போற்று
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமாறு உணர்ந்து கொள்
79. முனையிலே முகத்து நில்
80. மூப்பினுக்கு இடங்கொடேல்
81. மெல்லத் தெரிந்து சொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவம் செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந்தனைக் கொல்
86. யவனர்போல் முயற்சிகொள்
87. யாவரையும் மதித்து வாழ்
88. யௌவனம் காத்தல் செய்
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜஸம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசிபல வென்றுணர்
93. ரூபம் செம்மை செய்
94. ரேகையில் கனிகொள்
95. ரோதனம் தவிர்
96. ரௌத்திரம் பழகு
97. லவம்பல வெள்ளமாம்
98. லாவகம் பயிற்சி செய்
99. லீலை இவ்வுலகு
100. உறுத்தரை இகழ்
101. உலோக நூல் கற்றுணர்
102. லௌகிகம் ஆற்று
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூல் பயிற்சிகொள்ள
105. விதையினைத் தெரிந்திடு
106. வீரியம் பெருக்கு
107. வெடிப்புறப் பேசு
108. வேதம் புதுமை செய்
109. வையத் தலைமைகொள்
110.வௌவுதல் நீக்கு


Sunday, 26 June 2011

தமிழ்ப் புலவி - ஔவையாரின் கொன்றை வேந்தன்




கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.



உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.



ககர வருக்கம்

14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.



சகர வருக்கம்

26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.



தகர வருக்கம்

37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.




நகர வருக்கம்

48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.



பகர வருக்கம்

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.



மகர வருக்கம்

70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.




வகர வருக்கம்

81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

Friday, 24 June 2011

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?"

"நிச்சயமாக ஐயா.."

"கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா."

"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?"

"ஆம்."

"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?"

"ஆம் ஐயா.."

"சாத்தா‎ன் நல்லவரா?"

"‏இல்லை."

"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?"

"கடவுளிடமிருந்துதா‎ன்."

"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?"

"ஆம்."

"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"

......

"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"

.......

"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?"

"ஆம் ஐயா.."

"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?"

"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது."

"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?"

"நிச்சயமாக உள்ளது."

"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?"

"நிச்சயமாக."

"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது."

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?"

"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது."

"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?"

"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?"

"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது."

"பிழை?? விளக்கிக் கூற முடியுமா?"

"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?"

"”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்.

"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"

(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"

(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?"

"அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று."

"மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!"

"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

நமது மு‎ன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

சில பாடல்களும் அதன் விளக்கமும்

நன்றி: ஆதித்ய இளம்பிறையன் தலை வணங்கா தமிழன் பிளாக்!!

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மௌவல் மௌவல் .. ( படம் : சிவாஜி )

ஆம்பல் -> இரவிலே பூத்து பகலிலே குவியும் ஒரு வகை அல்லி பூ.

மௌவல் -> ஒரு வகை காட்டு மல்லி. செந்நிறமாக இருக்கும்.



விளக்கம்

பூ போன்ற பெண்ணே !! நீ இரவிலே பூத்து பகலிலே குவியும் அல்லிகொடி !!

உன் புன்னகையோ காட்டு மல்லி !! ( கட்டு மல்லி மலர்ந்து காடு முழுவதும் வாசனை பரப்புவது போல உன் புன்னகை அனைவரையும் புன்னகை கொள்ள செய்கும் )



ஆம்பல் - அல்லிக்கொடி ( ஓர் இசைக்குழல் என்றும் கொள்ளலாம் )

இருவகை ஆம்பல் உண்டு!

அரக்காம்பல்------செவ்வல்லி

வெள்ளாம்பல்----வெள்ளல்லி!



மலர்களை ஏன் பெண்கள் சூடுகிறார்கள் ?



மலருக்கு இயற்கையான ஒரு தன்மையுண்டு. பஞ்சினைப் போல் ஈரத்தை உறிஞ்சும் தன்மையுண்டு. கூந்தலில் நிறைய மலர்களை சூடும்போது, கூந்தலிளுள்ள ஈரத்தினை ஈர்த்துவிடுகிறது. அதோடு கூந்தலுக்கு அழகையும் தருகிறது.



என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் ( படம் : வேட்டையாடு விளையாடு )



பதாகை - கொடி ( ஒரு அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும்.)



என் மனமாகியிய பதாகையில் (கொடியில்) வைத்து நான் தாங்கிய உன் முகம் என்று பொருள் படும்.

இங்கு அவளை ஒரு கொடியாகவும் ...

அவள் இதயத்தில் உள்ள அவனது முகத்தினை ..கொடியில் உள்ள சின்னமாகவும் கொள்ளவும் .



கலாப காதல்

ஆண் மயில் மோக மிகுதியில் தோகை விரித்து ஆடும்போது அதன் உயிர்ச்சக்தி தரையில் விழும்.

பெண் மயில் அதனைக் கொத்தி உண்டு கருத்தரிக்கும்.



தொடாமலேயே காதல் கொண்டு இருப்பதற்கு பெயர் கலாப காதல்.





அற்றைத் திங்கள் அந்நிலவில்,நெற்றித்தரள நீர்வடிய,கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா?



அற்றைத் திங்கள் = அந்த மாதம்;

நெற்றித்தரள = நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய ( தரளம்=முத்து )

கொற்றப் பொய்கை = அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே? (பொய்கை=குளம் )



அன்று ஒருநாள் நிலவில் நெற்றியில் முத்து முத்தாய் நீர் வடிய அரண்மனைக் குளத்தில் விளையாடின பெண் நீ தானே?





நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்



முகை=அரும்பு; நறுமுகை=வாசமுள்ள அரும்பு ( மல்லிகை பூவை குறிக்கும் )

ஒரு நாழிகை = 24 நிமிடம்; 60 நாழிகை = ஒரு நாள்



யாயும் யாயும் யார் ஆகியரோ நெஞ்சு நேர்ந்தது என்ன? யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்தது என்ன?

யாய்=தாய்;

உன் தாயும் என் தாயும் யாரோவென தொடர்பற்றவர்கள்.

நீயும் நானும் கூட இதற்கு முன்பாய் அறிமுகமானவர்கள் இல்லை

இருந்தும் உனக்கும் எனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம் ..



நந்தா படத்தில் ஒரு பாடலில் "வாவிக் கரையோரம்" என்று வரும் …



வாவி என்பது ஏரி குளம் போல் ஒரு வகையான நீர்த் தேக்கம். மீன்கள் வாழுமிடம்.



மட்டு வாவி . ( மீன்கள் பாடும் இசையை கேட்கக் கூடிய உலகின் அதிசய சூழல் நிறைந்த வாவி).



சங்கமம் படத்தில் வராக நதிக்கரையோரம் என்று ஒரு வரி வரும்



மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள அழகான ஊர் பெரியகுளம். ஊருக்கு நடுவில ஒரு அழகான ஆறு ஓடுகிறது. பெயர் வராக நதி. இந்த நதி மேற்குத் தொடர்ச்சி மலைல உருவாகி வைகை ஆற்றில் கலக்கிறது.கவிஞர் வைரமுத்து பெரியகுளத்துக்கு 4 கி,மீ தொலைவில் இருக்கும் வடுகபட்டியைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய பாடல்களில் வராக நதிஇடம் பெற்றிருக்கிறது. வராக நதி வடுகபட்டி வழியாகத் தான் சென்று வைகையைச் சேருகிறது.



**************************************************************************************************



இது ஒரு சங்க பாடல் . இதை கண்ணதாசன் சினிமாவில் இன்னும் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதி உள்ளார் ... தலைவன் பொருள்தேடிப் பிரிகிறான். அவன் சென்ற திசை நோக்கி இவள் ஏங்கிக் கிடக்கிறாள். இந்தப் பொல்லாத வேளையில் நிலவு வந்து இம்சிக்கிறது. ஏற்கனவே அவள் மனம் ஏக்கத்தில் சிக்கியிருக்க காதலை ஊட்டும் வசீகர நிலா தன் ஒளியைப் பாய்ச்சி அவளை உஷ்ணப்படுத்துகிற்து. அவளோ துவள்கிறாள். கோபம் வருகிற்து நிலவின்மீது. என்ன இது அநியாயம் என்னை ஏன் வதைக்கிறாய் என்று திட்டவேண்டும்போல் இருக்கிற்து. இருந்தாலும், நிலா காதல் உணர்வுகளை ஊட்டும் அற்புதமாயிற்றே திட்டவும் மனமில்லை. எனவே, அதனுடன் முறையிடுகிறாள் அவள்....





அத்திக்காய் காய் காய் .. ஆலங்காய் வெண்ணிலவே இத்திக்காய் காயாதே .. என்னைப் போல் பெண்ணல்லவோ - நீ என்னைப் போல் பெண்ணல்லவோ



அத்திக்காய் = அத்தி + காய் = அந்தப் பக்கமாக, அந்தத் திசையாக[காதலன் நிற்கும் பக்கம்] + சுடு



ஆலங்காய் = ஆல + காய் = விசம்போல் சுடு



இத்திக்காய் = இத்தி + காய் = இந்தப் பக்கமாக [ தான் நிற்கும் பக்கம்] + சுடு





ஏ நிலாவே.....என்னை நீங்கிச்சென்ற தலைவனோ அங்கே இன்பமாய் இருக்கிறான். அவனை விட்டுவிட்டு என்னை ஏன் காய்கிறாய்? எனவே நீ அவன் இருக்கும் அந்த திக்கில் காய் - அந்த திசையில் காய் - அவனிடம் சென்று காய். வெறுமனே காய்ந்துவிடாதே. நீயும் காயும் மோக வெப்பத்தில் அவன் என்னை நோக்கி ஓடிவரவேண்டும். எனவே நீ விசத்தைப் போல் காய். ஆலம் என்றால் விசம். சாதாரண காய்ச்சலுக்குக் கரையாத அவன் மனம் உன் விசக் காய்ச்சலுக்கு நிச்சயம் சிதையும் இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ என்னிடம் வந்து இந்த திக்கில் காய்ந்து தொலைக்காதே வெண்ணிலாவே. உனக்கு பெண்களில் தவிப்பு விளங்காதா? தனிமை புரியாதா? ஏக்கம் அறிய்மாட்டாயா? ஏனெனில் நிலாவே, நீயும் ஒரு பெண்ணல்லவா?





கன்னிக்காய் ஆசைக்காய் .... காதல் கொண்ட பாவைக்காய் ..அங்கே காய் அவரைக்காய் ......மங்கை எந்தன் கோவைக்காய்





கன்னிக்காய் = கன்னிக்காக



ஆசைக்காய் = ஆசைக்காக



பாவைக்காய் = பெண்ணுக்காய் ( பெண்ணுக்காக )



அவரைக்காய் = அவரை + காய் = தலைவனை + காய்



கோவைக்காய் = கோவை (கோ = அரசன்) + காய் = அரசனை + காய்



நிலவே, தலைவனை நினைத்து நினைத்து உறங்காத விழிகளோடு தவியாய்த் தவிக்கும் இந்த கன்னிப் பெண்ணுக்காக, (கன்னிக்காக - கன்னிக்காய்) அவன் மீது கொண்டுவிட்ட அடங்காத ஆசைக்காக (ஆசைக்காய்), அவன்மீது அபரிமிதான் காதல் கொண்டுவிட்ட பாவைக்காய் (பாவை என்றால் பெண்), அதாவது இந்தப் பெண்ணுக்காய், இங்கே காய்ந்து தொலைக்காதே.



என் மீது இரக்கப்படு, நான் தாங்கும் நிலையில் இல்லை, அவனைத் தேடும் விழுகளோடும், அவனுக்காக ஏங்கும் இதயத்தோடும், அவன் இல்லாமல் உயிரற்றுப் போன உடல் போலவும்தான் வாடுகிறேன். வாடாமல் என்னைவிட்டு எங்கோ ஓடிப்போன அவனிடம் நீ சென்று காய், அங்கேகாய். என்காதலரான அவரைக் காய் . இந்த மங்கையின் ஒற்றை அரசன், தலைவன் அரசனை காய்



இது ஆண்பாடும் வரிகள





மாதுளங்காய் ஆனாலும் ...என் உளங்காய் ஆகுமோ .......என்னை நீ காயாதே ...என்னுயிரும் நீயல்லவோ





மாது = பெண் (மாதுளம்காய் = மாது + உள்ளம் + காய்)



உளங்காய் = உள்ளம் + காய்



அவளின் காதல் தகிப்பில் இப்படி அவள் உள்ளம் காயாகிவிட்டாலும், என் உள்ளம் காய் ஆகுமா? நான் அவளை உணர்ந்தவனல்லவா? காதல் வேதனை புரிந்தவனல்லவா? என்னை நீ காயாதே வெண்ணிலவே? நீ என் உயிர் அல்லவா? என் காதல் தவிப்புகள் அறிந்தவளல்லவா நீ. எனவே நீ என்னைக்க் காயாதே ..





இரவுக்காய் உறவுக்காய் .....ஏங்கும் இந்த ஏழைக்காய் ..நீயும் காய் நிதமும் காய் .....நேரில் நிற்கும் இவளைக்காய் மாலைப்பொழுதுக்கும் / இரவுக்கும் அதன் கூடவே அது கொண்டு வரும் உறவுக்கும் ஏங்கும் இந்த ஏழைக்காக நீ தினமும் காய்வாயாக. இரவுக்காய்.... இரவில்லையேல் இன்பமே இல்லை.இரவு காதலுக்குச் சொந்தம்.... இளமாலை தொட்டு இருள் ஏற ஏற காதலும் ஏறும்.... அந்த இரவுக்காய்..அதனோடு உறவும் வேண்டுமே.... ஏழைக்காய்.... யார் ஏழை? உழைப்பவன் எவனும் ஏழையில்லை. கையேந்துபவன் மட்டும்தான் ஏழை. காதலியிடம் கை ஏந்தும் இந்த ஏழைக்காக நேரில் நிற்கும் இவளைக்காய் என்று.... அப்படியே ஒரு வளைவும் காட்டாமல் என் நேரில் அப்படியே நிக்கும் இதோ இவளைக்காய் காய் காய் காய் என்று பாடுகிறான்





உருவங்காய் ஆனாலும் .......பருவங்காய் ஆகுமோ .......என்னை நீ காயாதே .......என்னுயிரும் நீயல்லவோ



என்னுடைய உருவம்தான் நான் முரண்டுபண்ணுவதுபோல் தெரிகிற்து, ஆனால் என் உள்ளமும் ஓரக்கண்ணும் உன்னிடம்தான் வந்து கிடக்கிறது .என்னை நீ காயாதே வெண்ணிலவே ..நீ என் உயிர் அல்லவா?

ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் !!??

நன்றி: ஆதித்ய இளம்பிறையன் தலை வணங்கா தமிழன் பிளாக்!!

ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் !!??
சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்று ஒளிபரப்பினார்கள். மிகவும் வியப்பாக இருந்தது.


ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின மக்கள் இப்படி எல்லாமே மாறிப்போயிருக்கும். ஏனெனில் ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்த இரண்டு வாரப் பயணமானது பூமியில் 250 வருடங்களாகியிருக்கும். ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும்பொழுது காலமே மெதுவாகத்தான் நகருமாம்.

இந்தியப் புராணங்களிலும், இதிகாசங்களிலும் காலத்தை கடந்த மனிதர்கள் என்று பலபேரை குறிப்பிடுவதுண்டு. தமிழ் சமூகத்தில் காலத்தை வென்றவர்கள் என்று சித்தர்களை கூறுவதுண்டு. என் கல்லூரி நாட்களில் மேற்கு தொடர்ச்சி மழைக் காடுகளில் இருநூறு வருடங்களை கடந்த சித்தர்களை கண்டதாக ஊர் மக்கள் சொல்லியதாக என் நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே.

முதலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடியுமா? அறிவியல் என்ன சொல்கிறது..

ஐன்ஸ்டீன் விதிப்படி "ஒளியின் வேகத்தில் பயணிக்கத் தொடங்கும்போது காலமே மெதுவாக நகரகத் தொடங்கும். பொருளின் நிறை மேலும் கூடியும், அதன் அடர்த்தி அதிகமாகியும் பொருள் அதற்குமேல் பயணிக்க முடியாததாகி விடும்"

ஆனால் எலக்ட்ரான் வெற்றிடம் அல்லாத வேறு ஒரு ஊடகத்தின் வழியே, ஒளியின் வேகத்தில் எந்தவொரு சேதாரமும் இன்றி பயணிக்க முடியும் என்கிறார்கள் சில அறிஞர்கள். எலக்ட்ரானுக்கு நிறை உண்டு.

வானூர்தி கண்டுபிடிப்பதற்கு முன்பு "காற்றை விட கனமானது எதுவும் பறக்க முடியாது" என்ற அறிவியல் கோட்பாடு இருந்தது. அதை உடைத்துதான் மனிதன் பறந்தான்.

அதற்கடுத்து ஒலியின்(சப்தத்தின்) வேகத்தை விட எந்தவொரு பொருளும் பறக்க முடியாது என்றார்கள்.ஆனால் இப்பொழுது ஒலியை விட வேகத்தில் பறக்க கூடிய விமானங்களும்(சூப்பர்சோனிக் விமானங்கள்), மணிக்கு எழுபத்திரெண்டாயிரம் கி.மீ வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளும் வந்துவிட்டன.ஆனாலும் ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ராக்கெட்டுகளுக்கு எரிபொருள் தேவை என்பது ஒரு பெரிய தடையே. யார் கண்டது வரும் தலைமுறை அணுப்பிளவினாலோ / இணைப்பினாலோ கிடைக்க கூடிய மாபெரும் சக்தியை வைத்து பறக்க கூடிய ராக்கெட்டுகளை கண்டுபிடிக்கலாம்.

ஆக இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் மனிதன் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியும். அன்று அவனுடைய சராசரி வயது பல ஆயிர வருடங்களை கொண்டிருக்கும்.

Monday, 13 June 2011

Lunar Eclipse of 15/06/2011 - The Longest & Darkest Lunar Eclipse of the Millennium

A total lunar eclipse will take place on June 15, 2011. It is the first of two total lunar eclipses in 2011, the second occurring on December 10.

It is a relatively rare central eclipse where the moon passes in front of the centre of the Earth's shadow. The last lunar eclipse closer to the centre of the earth's shadow was on July 16, 2000. The next central total lunar eclipse will be on July 27, 2018.

It will be visible completely over Africa, and Central Asia, visible rising over South America, western Africa, and Europe, and setting over eastern Asia. In western Asia, Australia and the Philippines, the lunar eclipse will be visible just before sunrise.


In India the timings are :

Penumbral Eclipse Begins: 17:24:33 UT Partial Eclipse Begins: 18:22:55 UT Total Eclipse Begins: 19:22:29 UT Greatest Eclipse: 20:12:35 UT Total Eclipse Ends: 21:02:41 UT Partial Eclipse Ends: 22:02:14 UT Penumbral Eclipse Ends: 23:00:44 UT.

Earth´s Penumbra is light shadow
Earth´s Umbra is Dark shadow


Eclipse Contacts

P1 = 17:24:33 UT +5 hours 30 minutes = 10.54pm 37sec IST ( Indian standard Time )
U1 = 18:22:55 UT +5 hours 30 minutes = 11.52pm 57sec
U2 = 19:22:29 UT +5 " " = 12.52am 29sec
Total eclipse 20: 12: 36 + 5.30.00 --- = 1.42am 36sec
U3 = 21:02:41 UT + --------------- = 2.32am 41sec
U4 = 22:02:14 UT + ----------------- = 3.32am 14sec
P4 = 23:00:44 UT + ----------------- = 4.30am 44sec


Eclipse Time IST in India: 11.52 pm to 3.32 am night of June 15. Mid Eclipse is at 1.42am on 16th.

The moon is completely covered by Earth Shadow (Total Eclipse) from 12.52 am to 2.32am on June 16 early morning.

Eclipse Durations
Penumbral = 05h36m12s
Umbral (dark) = 03h39m19s

** India Don't follow Day light savings Time!

General Information on Solar and Lunar Eclipses

Eclipses, including total solar eclipses, have been the subject of superstition and scientific curiosity throughout history. There was a time when some cultures dreaded eclipses, but many people look forward to their occurrence in modern times. explores how a total solar eclipse works and briefly examines other types of eclipses, including lunar eclipses.

Colour of Moon during Total Lunar eclipse:



Due to the atmospheric refraction moon may appear dark brown and red to bright orange and yellow depending on the amount and type of dust present in the atmosphere.


Lunar Eclipses in a Nutshell


The lunar eclipse occurs when the moon passes through the earth’s shadow and can only happen at a full moon. One of the major differences between a lunar and solar eclipse is that a lunar eclipse can be viewed from across the entire night side of the earth (depending on weather). Types of lunar eclipses include:

The total lunar eclipse, which occurs when the moon’s travels completely into the earth’s umbra. The moon never complete disappears during a total lunar eclipse.
The partial lunar eclipse, which occurs when the moon is oriented in a way that only part of it dips into the earth’s umbra.
The penumbral lunar eclipse, which occurs when the moon passes through the faint penumbral portion of the earth’s shadow.

There is always a full moon on the night of a lunar eclipse. The eclipse’s type and length depends on the moon’s location relating to its orbital nodes (one or two points where an orbit crosses a plane of reference that it is inclined to). A lunar eclipse has two magnitude values – the penumbral magnitude and the umbral magnitude.


The readings can be taken from observing through naked eye, binoculars and small telescopes. Hope we all get chance to observe, enjoy and photograph the event.


Tuesday, 10 May 2011

தாய், தந்தையை கொல்லும் தமிழர்கள்!

நன்றி: ஷகினா, டெஹல்கா வார இதழ் - 20.11.2010

தலைக்கு ஊத்தல்! சாவகாசமாக ஒரு எண்ணெய்க் குளியல். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அன்பும், நலமும் வேண்டி செய்யப்படும் ஒரு சடங்கு... விழாக்காலங்களின் தொடக்க நிகழ்வாக... கோடையின் வெப்பத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம்...! தமிழ்நாட்டின் விருதுநகர் பகுதியிலோ இது மெதுவாக நடைபெறும் ஒரு கொலை. வறுமையின் கொடுமை தாங்காமல் வயதான தாயை பெற்ற மகனே கொலை செய்யும் கொடூரத்தின் அடையாளம்!

தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் வயதான முதியவர்களை பராமரிக்க இயலாமல் அவர்கள் வீட்டு இளைய தலைமுறையே இவ்வாறு செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். 65 வயதான மாரியம்மாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கும் இது நடக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவர் மகன் வீட்டை விட்டு வெளியேறினார். "நான் என் காலில் நிற்குமளவுக்கு உறுதியாக இல்லை: ஆனால் என் குழந்தைகளால் கொல்லப்படுவதைவிட இது மேலானது!"

அவர் குரலில் கோபமோ, கசப்புணர்வோ இல்லை. "அவர்களுடைய குழந்தைகளை பராமரிக்கவே அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்!" என மகன்களைப் பற்றி அவர் கூறுகிறார். அவருடைய இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் விவசாயக்கூலி வேலை செய்கின்றனர். ஒவ்வொரு நடவுக்கும், அறுவடைக்கும் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று கூலிவேலை செய்வது அவர்களின் தொழில். அவரது பிள்ளைகள் குடும்பத்தை நடத்தவும், பேரக்குழந்தைகளை படிக்கவைத்து பராமரிக்கவும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது மாரியம்மாவிற்கு தெரியும். அதில் தானும் அவர்களோடு இருப்பது அவர்களுக்கு கூடுதல் சுமை என்பதும் புரிந்தது. எனவே அவர்களை விட்டுவிலகாவிட்டால் அது எங்கு போய் முடியும்? என்பது மாரியம்மாவிற்கு தெரிந்திருந்தது.

மாரியம்மாவின் வயதை ஒத்த மற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் நடந்ததை அவர் பார்த்தார். அவரது அண்டை வீட்டிலிருந்த 76 வயதான பார்வதிக்கு பக்கவாத நோய் இருந்தது. "பார்வதிக்கு ஒரே மகன். சென்னையில் கூலிவேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனால் எப்படி படுத்தப்படுக்கையாக இருக்கும் அவனுடைய தாயை பார்த்துக் கொள்ள முடியும்?" என்கிறார் மாரியம்மா. "ஒரு நாள் பார்வதியின் மகன் சென்னையிலிருந்து வந்து, "அதை"ச் செய்துவிட்டு சென்றுவிட்டான். அவனால் வேறு என்ன செய்யமுடியும்?" என்று கேட்கிறார், மாரியம்மா. அந்தக் குரலில் கோபமோ, பயமோ இல்லை: உதவி செய்ய யாருமற்ற நிர்க்கதியான உணர்வே அந்தக் குரலில் இருக்கிறது. கொலையை திட்டமிட்டு செய்பவர்கள் மீது பச்சாதாபம்!

இருள் விலகி பொழுது புலரும் முன்பே "அந்த முதியவர்"கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கப்படுகின்றனர். பின்னர் நாள் முழுதும் குளிர்ந்த இளநீர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே முதியவர்கள் தங்கள் குழந்தைகளிடம் எண்ணெய் தேய்த்துக் குளித்தவுடன் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடக்கூடாது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருப்பார்கள் என்பது கொடுமை. எண்ணெய்க்குளியல் மற்றும் இளநீரின் குளிர்ச்சி தாங்காமல் வயது முதிர்ந்த பெரியவரோ, மூதாட்டியோ காய்ச்சல் வந்து ஓரிரு நாளில் உயிரை துறப்பார்கள்.

காலப்போக்கில் இவ்வாறான கொலைகளை செய்வதில் பல புதிய முறைகள் உருவாகிவிட்டன. வயதானவர்களின் வாயில் சேற்றைத் திணிப்பது இவற்றில் ஒன்று. மண் பாசம் காரணமாக உயிர் பிரிய மறுப்பதாகக் கூறி இந்த முறை கையாளப்படுகிறது. ஆனால் உண்மையில் மண்ணை செரிக்க முடியாமல் மரணம் ஏற்படும்.

சாத்தூரைச் சேர்ந்த துரைராஜ் என்ற விவசாயி, அவருக்கு தூரத்து உறவினரான முனியம்மாள் வேறோரு முறையில் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டார். 78 வயதான முனியம்மாள் தனக்கு தேவையானதை தானே சம்பாதிக்க முடியாத அளவிற்கு பலவீனம் அடைந்தார். அவருக்கும் "தலைக்கு ஊத்தல்" நடந்தது. ஆனால் அதிலும் அவர் உயிர் பிரியவில்லை. சில நாட்களில் அவருக்கு "பால் ஊற்றப்பட்டது". இந்த பால் ஊற்றப்படுவதற்கு முன்னதாக அந்த முதியவர்களுக்கு திட உணவு கொடுப்பது நிறுத்தப்படும். பின்னர் அவர்களுக்கு பால் ஊற்றும்போது அவர்களின் மூக்கை யாராவது ஒருவர் மூச்சுவிட முடியாதவகையில் அழுந்தப்பிடித்துக் கொள்வார்கள். பசியால் தவிக்கும் ஒருவருக்கு தொடர்ச்சியாக பால் ஊற்றப்படும்போது, மூக்கையும் மூச்சுவிடமுடியாமல் பிடித்தால், ஊற்றப்படும் பால் அவர்களின் மூச்சுக்குழலில் இறங்கும். சில மணித்துளிகளில் உயிரிழப்பது உறுதி!

சில இடங்களில் விஷம் கொடுப்பதும் நடக்கிறது. பரமக்குடியில் கணேசனுக்கு அதுதான் தொழில்! மருத்துவராக பணியாற்றுவதாகக் கூறும் கணேசன் ஒரு மரணதேவன். தேவைப்படுபவர்களுக்கு விஷமருந்தை ஊசிமூலம் செலுத்துகிறார். "வாழவேண்டிய வயதில் உள்ள யாரையும் நான் கொல்லவில்லை. ஒருவரின் இறுதிக்காலத்தில் அவர் வறுமையில் வாடாமல் இருக்கவே நான் இதைச் செய்கிறேன்!" என்கிறார் கணேசன்.

இவ்விதமான பழக்கங்கள் நடைமுறையில் இருந்தாலும் விருதுநகர், ராமசாமிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற 60 வயது முதியவர் இறந்தபோது இது விவாதத்திற்கு வந்தது. சாலை விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த செல்வராஜ் மரணம் அடைந்தபோது அவரது உறவினரான அசோகன் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜுக்கு விஷ ஊசி போட்டதாக ஜீனத் என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஆனால் இறந்துபோன செல்வராஜின் உடல் தகனம் செய்யப்பட்டிருந்ததால் புகாரை நிரூபிக்க முடியவில்லை. ஜீனத் இப்போது பிணையில் இருக்கிறார்.

இந்த செய்தி தங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.கே. சண்முகம் கூறுகிறார். இதுபோன்ற சமூக அவலங்களை எதிர்கொள்ள அரசு வழக்கமாக மேற்கொள்ளும் கைது, எச்சரிக்கை, விசாரணை போன்ற நடைமுறைகள் உதவாது என்பது அவரது கருத்து.

தலைக்கு ஊத்தல்! இந்த செயலை குற்றச்செயலா அல்லது வறுமையின் கோரத்தால் நடைபெறும் செயலா என்று தீர்மானிக்க முடியாத ஒரு செயல். இது ஒரு சமூகத்தின் வழக்கமாக இருந்துள்ளது. குடும்பத்தினர் கூடி எடுக்கும் முடிவு. அன்பிற்குரியவர்களை வழியனுப்பி வைக்கும் ஒரு சடங்கு. சில நேரங்களில் பலியாகும் முதியவர்களின் விருப்பம். வறுமையிலிருந்து விடுபட்டு நிரந்தர அமைதிக்கான பாதையாகவும் இது இருப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகம் கூறுகிறார். இதை சட்டம் மற்றும் குற்றச்செயலாக மட்டுமே பார்ப்பது சிரமம் என்றும் அவர் கூறுகிறார்.

தலைக்கு ஊத்தலை குற்றச் செயலாக கருதினால் முழு கிராமமே அதற்கு உடந்தை! கிராமத்தினரும், உறவினர்களும் இதை ஆதரிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. தலைக்கு ஊத்தும் நாளுக்கு ஓரிரு நாள் முன்னதாக வந்து அந்த முதியவரையோ, மூதாட்டியையோ "கடைசியாக" ஒரு முறை பார்த்துச் செல்வதும் உண்டு. அந்த முதியவரோ, மூதாட்டியோ இறக்கப்போகிறார் என்பது அனைருக்கும் தெரியும்.

இந்த தலைக்கு ஊத்தும் பழக்கம் எந்த ஜாதிக்கோ, சமூகத்துக்கோ தனி உரிமையானது அல்ல. வறுமையில் வாழும் அனைத்து சமூகத்தினரும், ஜாதியினரும் இதைச் செய்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் கூலி விவசாயிகளாகவோ, ஆடு மேய்ப்பவர்களாகவோ, சிறு தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களாகவோ இருக்கின்றனர். அவர்களினஅ வாழ்க்கை நிலை, வயது முதிர்ந்த பெற்றோர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் அளவிற்கு இல்லை.

வறுமை காரணமாக முதியவர்களை கொலை செய்வது கொடுமையான தீர்வுதான், ஆனாலும் அதைத்தவிர வேறு வழியில்லை என்பதே இப்பகுதி மக்களின் கருத்து.

காசியின் வயது அறுபதா அல்லது எழுபதா என்பது அவருக்கே தெரியாது. மனைவி இறந்தபின் மகனின் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். அவரது நிறைந்த வாழ்க்கையின் அடையாளமாக நரைத்த தலைமயிரும், மீசைகளும், சுருக்கம் விழுந்த தோலும் இருக்கின்றன. தனக்கு தேவையானதை செய்வதற்கு தன் பிள்ளைகள் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இல்லாவிட்டால் அவருக்கும் இந்நேரம் தலைக்கு ஊத்தப்பட்டிருக்கலாம்.

விருதுநகரில் பரவலாக முதியவர்களும், மூதாட்டிகளும் வீட்டிலிருந்து விலகி இருக்கின்றனர். என் மகன் அவன் வாழ்க்கைக்கே கஷ்டப்படுகிறான் என்கிறார் காசி. நான் ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியால் நன்றாகவே இருக்கிறேன் என்கிறார் மாரியம்மா. அவர்கள் பட்டினி கிடக்கின்றனர். கஷ்டப்படுகின்றனர். ஆனால் புகார் கூறவில்லை. தலைக்கு ஊத்தல் என்பது கோழைத்தனமான கொலையாக அவர்கள் பார்க்கவில்லை. வீரமான பிரிவுபசாரமாகவே பார்க்கின்றனர். காசிக்கும், மாரியம்மாவிற்கும் இது கொடுமையான விஷயம் இல்லை. மிஞ்சியுள்ளவர்கள் உயிர் வாழ்தலுக்கான நடைமுறை அன்பாகவே இருக்கிறது.

தேவைப்படுபவர்கள் இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை (அருணா ஷன்பாக் வழக்கு) வேணா சேவ் பண்ணி வெச்சுக்கோங்க. இது சம்பந்தமான விவாதங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

http://www.supremecourtofindia.nic.in/outtoday/wr1152009.pdf

When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and Interstellar Wanderers

When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and Interstellar Wanderers When Ice Remembered Fire — Comets, Oort Clouds, and I...